INTRO :
இராவணனின் சிலையும், புஷ்பக விமானமும் திருகோணமலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என ஒரு புகைப்பட தொகுப்பு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் “ திருகோணமலை மாவட்டத்தில் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியில் இராவணனுடைய சிலையும், இராட்சத புஷ்பக விமானமும் கண்டுபிடிக்கப்பட்டது.

அதனை அரசாங்கம் மறைத்து விட்டது.

இந்தப் பதிவை அதிகம் பகிர்ந்து தமிழனின் பெருமையை உலகுக்கு காட்டுவோம். “ என கடந்த மாதம் 27ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு (27.03.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

நாம் முதலில் குறித்த படங்களை பார்வையிட்ட போது இது AI (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தின் மூலமாக உருவாக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழ அதனை நாம் AI (செயற்கை நுண்ணறிவு) சரிபார்க்கும் கருவிகள் கொண்டு ஆய்வினை மேற்கொண்டோம்.

குறித்த இரு புகைப்படங்களை ஆய்வு செய்த போது, இது AI (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தில் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது என உறுதி செய்யப்பட்டது.

இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், இராவணனின் சிலையும், புஷ்பக விமானமும் திருகோணமலையில் கண்டுபிடிக்கப்பட்டடுள்ளதாக இணையத்தில் பரவி வருகின்ற புகைப்படம் AI (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தில் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok

Conclusion: முடிவு

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:இராவணனின் சிலையும், புஷ்பக விமானமும் திருகோணமலையில் கண்டுபிடிக்கப்பட்டதா?

Fact Check By: S.G.Prabu

Result: False