சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஓய்வு அறிவித்தாரா குசால் மெண்டீஸ்?
INTRO :
இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான குசால் மெண்டீஸ் சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):
சமூகவலைத்தளங்களில் “இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான குசால் மெண்டீஸ் சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு “ என கடந்த மாதம் 24 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு (24.06.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் தமது அனுதாபங்களை பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் முதலில் குறித்த தகவல் பிரதான ஊடகங்களில் வெளியாகியுள்ளதா என ஆய்வினை மேற்கொண்ட போது, அவ்வாறான எவ்விதமான தகவலும் ஊடகங்களில் வெளியானதாக காணக்கிடைக்கவில்லை.
மேலும் இதனை உறுதிசெய்துக்கொள்ள குசால் மெண்டீஸின் உத்தியோகப்பூர்வ சமூகவலைத்தளங்களில் ஆய்வினை மேற்கொண்டோம் அதிலும் தனது ஓய்வினை குறித்து எவ்விதமான பதிவினையும் குசால் மெண்டீஸ் பதிவிட்டுள்ளமை காணக்கிடைக்கவில்லை.
இதனை தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட் சபையின் ஊடகத்தொடர்பாளரை நாம் தொடர்புகொண்டு இது குறித்தான உண்மை தன்மையினை விசாரித்தபோது, இது முற்றிலும் போலியான தகவல் என்றும், குசால் மெண்டீஸ் தமது ஓய்வினை அறிவிக்கும் எண்ணத்தில் கூட இல்லை என எமக்கு உறுதி செய்தார்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.
Title:சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஓய்வு அறிவித்தாரா குசால் மெண்டீஸ்?
Fact Check By: S.G.PrabuResult: False