கட்டாரில் உள்ள அமெரிக்க விமானப்படை தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்திய போது எடுக்கப்பட்ட காணொளியா இது?

இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் வலுப்பெற்றும் வந்த நிலையில் அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதலை மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து தற்போது இந்த போர் பதற்றமானது உலக நாடுகளை கடும் அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது என்றே கூறவேண்டும். அந்த வகையில் தற்போது ஈரான் அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கட்டாரில் உள்ள அமெரிக்காவின் விமானப்படை தளம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட காணொளி என தெரிவிக்கப்பட்டு தற்போது சமூக ஊடகங்களில் காணொளியொன்று பகிரப்பட்டு வருகின்றமையை […]

Continue Reading

இஸ்ரேலை விட்டு மக்கள் வெளியேறும் காணொளியா இது?

இஸ்ரேல்  – ஈரான் இடையேயான யுத்தம் தொடரும் நிலையில் தற்போது இஸ்ரேல் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாக தெரிவித்து ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link இஸ்ரேலை விட்டு கொத்து கொத்தாக வெளியேறும் மக்கள் என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளி நேற்று (2025.06.19) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. […]

Continue Reading

இஸ்ரேல்  – ஈரான் போரில் தொடர் குண்டு மழை என பகிரப்படும் காணொளி உண்மையா?

இஸ்ரேல் –  ஈரான் போர் தொடர்பில் தற்போது பல காணொளிகள் புகைப்படங்கள் பகிரப்பட்டு வரும் நிலையில் தொடர் குண்டு மழை என்று தெரிவிக்கப்பட்ட ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் தொடரும் குண்டுதொடரும் குண்டு மழை….! மழை….! என தெரிவிக்கப்பட்ட இந்த காணொளியானது […]

Continue Reading

இஸ்ரேல்  – ஈரான் போர் தொடர்பில் பகிரப்படும் காணொளி மற்றும் புகைப்படம் உண்மையானவையா?

இஸ்ரேல்  – ஈரான் இடையேயான போர் வலுப்பெற்று வரும் நிலையில் தற்போது இந்த போர் நிலைமைகள் தொடர்பில் பல்வேறு புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிகின்றது. அந்தவகையில் இஸ்ரேலிய  உளவு அமைப்பான மொஸாட்  தலைமையகம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடந்தியதாக தெரிவிக்கப்பட்டு ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. எனவே இது குறித்த உண்மை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the […]

Continue Reading

 ஈரானுடன் போரில் ஈடுபட முடியாது என இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் தப்பி ஓடும் காணொளியா இது?

இஸ்ரேல் – ஈரானுக்கு இடையிலான போர் பதற்றம் தற்போது அதிகரித்து வரும் நிலையில் இதனுடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் பல புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிகின்றது. அந்தவகையில் தற்போது ஈரானுடன் போரில் ஈடுபட முடியாது என இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் தப்பி ஓடுவதாக தெரிவித்து ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது. எனவே இந்த காணொளி தொடர்பான உண்மையை கண்டறிவதற்காக ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் […]

Continue Reading

காஸா மக்களுக்கு சீனா வான்வழியாக உணவு வழங்கியதா?

இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பாதிக்கப்பட்ட காஸா மக்களுக்கு சீனா வான்வழியாக தேவையான உணவுகளை வழங்கியதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் காணொளியொன்று பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே இதன் உண்மை தன்மை தொடர்பில் ஆராயும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம்  ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link  தனி மனிதனுக்கு உணவு இல்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாடினான் பாரதியார். இஸ்ரேல் ஏவுகணை […]

Continue Reading

IPL தொடரின் எஞ்சிய போட்டிகளை இலங்கையில் நடத்த ஆலோசிக்கப்படுகின்றதா?

இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவிய போர் பதற்றம் காரணமாக ஐ.பி.எல் போட்டிகளை ஒரு வாரத்திற்கு இடைநிறுத்துவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை கடந்த 2025.05.09 ஆம் திகதி அறிவித்தது. இதனையடுத்து இடைநிறுத்தப்பட்ட  ஐ.பி.எல் தொடரின் எஞ்சிய போட்டிகளை இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டு வருவதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் சில தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே இது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What […]

Continue Reading