‘’சீமான் என்ற நபரை சந்தித்ததே இல்லை,’’ என்று விஜயகாந்த் ஏற்கனவே டைரி எழுதி வைத்திருந்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

Claim Link l Archived Link

பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பிரபல நடிகர் மற்றும் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது ரசிகர்கள், கட்சித் தொண்டர்கள் மட்டுமின்றி மாற்று கட்சியினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அத்துடன், தமிழ்நாடு முழுவதும் இருந்து பொதுமக்கள் சென்னைக்கு சென்று விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனால், சென்னை முழுக்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

thewire.in l indianexpress.com

விஜயகாந்த் உடலுக்கு, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

Tamil News18 Link l indianexpress link

இந்நிலையில், ‘’சீமான் என்ற நபரை நான் இதுநாள் வரை சந்தித்ததே இல்லை’’, என்று கூறி விஜயகாந்த் கடந்த 2010ம் ஆண்டே டைரி எழுதி வைத்துள்ளதாக, மேற்கண்ட வகையில் சிலர் தகவல் பரப்புகின்றனர்.

ஆனால், விஜயகாந்த் இவ்வாறு எதுவும் எழுதி வைக்கவில்லை என்று நாம் தேமுதிக தலைமை அலுவலகத்தில் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம். கூடுதல் ஆதாரத்திற்காக விஜயகாந்த் மைத்துனர் எல்.கே.சுதிஷ் அலுவலகம் மற்றும் தேமுதிக முன்னாள் எம்எல்ஏ B.பார்த்தசாரதி அலுவலகத்தில் பேசியுள்ளோம்.

எனவே, சீமானை கேலி செய்யும் நோக்கில் சிலர் வேண்டுமென்றே வதந்தி பரப்புகின்றனர் என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:‘சீமான் என்ற நபரை சந்தித்ததே இல்லை’ என்று விஜயகாந்த் எழுதி வைத்தாரா?

Written By: Fact Crescendo Team

Result: MISLEADING