கடந்த 22 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் அது குறித்து பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் அவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலையில் வைத்து ரணில் விக்ரமசிங்க ஜீவனி அருந்துவதைப் போன்ற புகைப்படமொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.
எனவே அது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):
குறித்த பதிவில் ஜீவன் இருக்கும் வரை தான் ,ஜீவானம்சம் பெறமுடியும்.
ஜீவனி குடியுங்க .. ஆரோக்கியமாக இருங்க!! என தெரிவிக்கப்பட்டு இன்று (2025.08.25) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் அதனை பலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
ரணில் விக்ரமசிங்க கடந்த 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் வைத்தியர்களின் ஆலோசனையின் பேரில் அவர் மீண்டும் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட வேளையில் உயர் இரத்த அழுத்தம் காரணமாக அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இதன்போது அவருக்கு வைத்தியர்கள் சிகிச்சை வழங்கும் புகைப்படமொன்று பிரதான ஊடகங்கள் உள்ளிட்ட பல சமூக ஊடகங்களிலும் வெளியாகியிருந்தது.
இருப்பினும் மேற்குறிப்பிட்ட சமூக ஊடகப் பதிவில் பகிரப்பட்ட புகைப்படமானது எந்தவொரு பிரதான ஊடகங்களிலும் வெளியாகியிருக்கவில்லை என்பது எமது ஆய்வுகளில் கண்டறியப்பட்டது.
மேலும் குறித்த புகைப்படத்தில் காணப்பட்ட நிறங்கள் மற்றும் அதன் செயற்கை தன்மை காரணமாக நாம் அந்த புகைப்படத்தினை AI Detective Tool ஐ பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டோம். இதன் போது இந்த புகைப்படமானது AI தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டுள்ளமை உறுதியானது.
எங்களதுசமூகவலைதளபக்கங்களைபின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் வைத்தியசாலையில் வைத்து ரணில் விக்ரமசிங்க ஜீவனி அருந்துவதைப் போன்று பகிரப்பட்ட புகைப்படமானது போலியானது என்பது கண்டறியப்பட்டது.
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Title:ரணில் தொடர்பில் பகிரப்படும் புகைப்படத்தின் உண்மை என்ன?
Fact Check By: Suji ShabeedhranResult: False
