
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் உள்ள கடலில் மயில் வடிவ ஆகாய விமானத்தின் எச்சங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது.
எனவே குறித்த புகைப்படம் தொடர்பான உண்மையை கண்டறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
குறித்த பதிவில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் உள்ள கடலில் 3153 அடி ஆழத்தில் ஒரு மயில்வடிவ ஆகாய விமானத்தின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம். அந்த இடம் இரகசியமாக வைக்கப்படுள்ளது என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு ஆழ்கடல் ஆய்வாளர் கூறியுள்ளார் என தெரிவிக்கப்பட்டு நேற்று (2025.04.05) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது குறித்த உண்மை அறியாத பலரும் சமூக ஊடகங்கள் வழியாக இதனை பகிர்ந்திருந்தமையை எம்மால் காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
மேற்குறிப்பிட்ட சமூக ஊடகப் பதிவில் தெரிவிக்கப்பட்டதனைப் போன்று இலங்கைக்கும் – இந்தியாவிற்கும் இடையில் மயில் வடிவ ஆகாய விமானத்தின் எச்சங்கள் எதுவும் கண்டுப்பிடிக்கப்பட்டிருந்தால் அது குறித்து இலங்கை மற்றும் இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கும் எனினும் நாம் மேற்கொண்ட ஆய்வில் அவ்வாறான எந்தவொரு செய்தியும் வெளியாகியிருக்கவில்லை.
மேலும் நாம் இந்த புகைப்படத்தினை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உடப்டுத்திய போது இந்த புகைப்படத்தின் தோற்றத்தை ஒத்த செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வெவ்வேறு புகைப்படங்களை காணக்கூடியதாக இருந்தது.Link
எனவே சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட புகைப்படத்தினை AI Detective Tool ஐ பயன்படுத்தி ஆய்வு செய்த போது குறித்த புகைப்படம் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்பது உறுதியானது.
மேலும் நாம் இந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்த தகவல் தொடர்பில் பார்க்கும் போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் உள்ள கடலில் 3153 அடி ஆழத்தில் ஒரு மயில் வடிவ ஆகாய விமானத்தின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த இடம் இரகசியமாக வைக்கப்படுள்ளது என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு ஆழ்கடல் ஆய்வாளர் கூறியுள்ளார் என்றே பகிரப்பட்டிருந்தது, அதனை பார்க்கும் போது இவ்வாறான ஒரு மிகப்பெரிய கண்டுப்பிடிப்பு உண்மையில் மேற்கொள்ளப்பட்டிருந்தால் அந்த இடம் குறித்தும் அந்த கண்ப்பிடிப்பை மேற்கொண்டவர் குறித்த தகவல்களும் பகிரங்கப்படுத்தப்பட்டிருக்கும். எனினும் குறித்த பதிவில் பெயர் குறிப்பிட முடியாத ஆய்வாளர் என தெரிவிக்கப்பட்டுள்ளது, எனவே இவ்வாறான காரணங்களும் இது போலியான புகைப்படம் என்பதனை மேலும் உறுதிப்படுத்துகின்றது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion (முடிவு)
மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் உள்ள கடலில் 3153 அடி ஆழத்தில் ஒரு மயில் வடிவ ஆகாய விமானத்தின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் பகிரப்படும் புகைப்படமானது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒன்று என்பது தெளிவாகின்றது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:கடலுக்கடியில் மயில் வடிவ ஆகாய விமானத்தின் எச்சங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டமை உண்மையா?
Fact Check By: Suji ShabeedharanResult: False
