
நாட்டில் நிலவும் சிரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் உள்ளிட்ட மண்சரிவு அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ள, அதேவேளை மலையகத்தில் பாரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் காணொளியொன்று பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.
எனவே இது குறித்த உண்மை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):
Facebook | Archived Link
மலையகத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலை என தெரிவித்து குறித்த காணொளியானது நேற்று (2025.10.21) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள அனர்த்தங்கள் தொடர்பில் பிரதான ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருவதனை எம்மால் அவதானிக்க முடிகின்றது. எனினும் அந்த செய்திகளில் மேற்குறிப்பிட்ட காணொளி தொடர்பான செய்திகள் எதுவும் வெளியாகவில்லை என்பதனை எமது ஆய்வின் மூலம் அறிய முடிந்தது.
ஆகவே குறித்த காணொளியை நன்கு அவதானித்த போது அதில் OpenAI Sora லோகோ இருப்பதனை அவதானிக்க முடிந்தது.
OpenAI Sora என்பது செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் காணொளிகளை உருவாக்கும் செயலி என்பது அனைவரும் அறிந்த விடயமே.
எனவே நாம் இந்த காணொளியை AI Detective Tool ஐ பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்ட போது இந்த காணொளியானது AI தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டுள்ளமை உறுதியானது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்கள் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்திற்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் கிழக்கே உள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த அமைப்பு தொடர்ந்து வளர்ச்சியடைந்து இலங்கைக்கு அருகில் வடமேற்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அமைப்பின் தாக்கம் காரணமாக, மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேல், தெற்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்தில் சில இடங்களில் 150 மில்லி மீற்றருக்கு மேல் கனமழை பெய்யும்.
தொடர்ந்து காலநிலை தொடர்பான அறிவிப்புகளில் கவனம் செலுத்துமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.Link | Link
எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் மலையகத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலை என பகிரப்படும் காணொளியானது தவறானது என்பதுடன் அது செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டது என்பதுவும் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.
Title:மலையகத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலை என பகிரப்படும் AI காணொளி!..
Fact Check By: Suji shabeedharanResult: False


