
உலகளாவிய ரீதியில் தற்போது தொழிநுட்பம் பாரியளவில் வளர்ச்சியடைந்து வருகின்ற நிலையில் அந்த தொழிநுட்பத்தினால் மக்கள் தவறாக வழிநடத்தப்படும் சம்பவங்களும் சமூகத்தில் இடம்பெற்று வருகின்றமையையும் மறுக்க முடியாது.
அந்தவகையில் மூன்று தலை கொண்ட குரங்கு என தெரிவிக்கப்பட்டு காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.
எனவே அது தொடர்பில் உண்மை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):
மூன்று தலை கொண்ட குரங்கு என தெரிவித்து குறித்த காணொளி 2025.10.25 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் குறித்த காணொளியின் கமென்ட்களை பார்த்த போது அதில் பலர் இது செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்ட காணொளி என கமெண்ட் செய்திருந்தமையை காணமுடிந்தது.

மேலும் இந்த காணொளியின் காட்சிகளை புகைப்படமாக மாற்றி தேடுதலில் ஈடுபட்ட போது பேஸ்புக் பக்கமொன்றில் குறித்த காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்ததுடன், அதில் இந்த காணொளி AI தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டது என குறிப்பிடப்பட்டிருந்தமையையும் அவதானிக்க முடிந்தது.

எனவே நாம் இந்த காணொளியை AI Detective Tool ஐ பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்ட போது இந்த காணொளியானது AI தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டுள்ளமை உறுதியானது.

எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் மூன்று தலை கொண்ட குரங்கு என பகிரப்பட்ட காணொளியானது AI தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.
 
					  Title:மூன்று தலை குரங்கு என பகிரப்படும் காணொளி உண்மையா?
Fact Check By: Suji shabeedharanResult: False



 
	 
						 
						