
INTRO :
கட்டுநாயக்க விமானநிலையத்தின் முஸ்லிம்களின் தொழுகை அறையை நீக்க போவதாக சில பதிவுகள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):
சமூகவலைத்தளங்களில் “*🇱🇰DT NEWS🇱🇰*
*கட்டுநாயக்க விமான நிலையத்தின் தொழுகை அறை தொடர்பில் முக்கிய அறிவிப்பு!*
*November 30, 2024 9:37 pm*
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தொழுகைக்காக அமைக்கப்பட்டுள்ள இடத்தில் சிறிது நேரம் செலவிடுமாறு அனைத்து முஸ்லிம் சகோதர, சகோதரிகளையும் விமான நிலைய ஆணையம் கேட்டுக்கொள்கிறது.
விமான நிலையத்தில் உள்ள இடத்தில் யாரும் தொழுகை நடத்தாததால் இந்த இடங்கள் பயன்படுத்தப்படாமல் காலியாக உள்ளன. இந்த இடங்களை முஸ்லிம்கள் தொழுகைக்காக பயன்படுத்தாவிட்டால், இந்த இடங்கள் வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் என விமான நிலைய ஆணையம் முடிவு செய்துள்ளது
. எனவே உங்கள் பயணம் வெற்றியடையவும், இந்த இடங்களும் தொலைந்து போகாமல் இருக்கவும் உங்கள் சகோதர, சகோதரிகள், உறவினர்கள் மற்றும் இஸ்லாமிய நண்பர்கள் விமான நிலையங்களில் 5 முதல் 10 நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தயவுசெய்து இந்த செய்தியை மற்ற குழுக்களுக்கும் பரப்புங்கள், உங்கள் முயற்சிகளுக்கு அல்லாஹ் உங்களுக்கு வெகுமதி அளிப்பான்.
ஆமீன்….” இம் மாதம் 08 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு (08.12.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்துள்ளதோடு மேலும் குறித்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் ஆதாரமற்றவை என அதற்கு கமெண்ட் செய்து பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
கட்டுநாயக்க விமானநிலையத்தின் முஸ்லிம்களின் தொழுகை அறையை நீக்க போவதாக எதும் செய்திகள் பிரதான ஊடகங்களில் வெளிவந்துள்ளதா என ஆய்வினை மேற்கொண்டபோது அவ்வாறு எவ்விதமான செய்திகளும் எமக்கு காணக்கிடைக்கவில்லை.
கட்டுநாயக்க விமானநிலையத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் மற்றும் அவர்களின் உத்தியோகபூர்வ இணையத்தளம் போன்றவற்றை ஆய்வு செய்தபோது கட்டுநாயக்க விமானநிலையத்தின் முஸ்லிம்களின் தொழுகை அறையை நீக்க போவதாக எந்த செய்தியும் எமக்கு காணக்கிடைக்கவில்லை.
இது குறித்து மேலதிக தகவலை பெறுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தினை தொடர்புகொண்டு வினவியபோது இணையத்தில் பரவுவதை போன்று முஸ்லிம்களின் தொழுகை அறையை நீக்க எவ்விதனமான எற்பாடும் முன்னெடுக்கவில்லை என தெரிவித்தனர்.
மேலதிக தகவலைப்பெற நாம் விமான நிலைய கடமை மேலாளரையும் தொடர்புகொண்டு வினவியபோது இது முற்றிலும் போலியான தகவல் என எமக்கு உறுதி செய்தார்.
நாம் இது தொடர்பாக பேஸ்புக் பக்கதில் தேடிய போது இது கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பரவி வருகின்ற தகவல் என தெரியவந்தது.
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், கட்டுநாயக்க விமானநிலையத்தின் முஸ்லிம்களின் தொழுகை அறையை நீக்க போவதாக பரவும் தகவல் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:கட்டுநாயக்க விமான நிலையத்தின் முஸ்லிம்களின் தொழுகை அறையை நீக்க போவதாக பரவும் தகவல் உண்மையா?
Fact Check By: S.G.PrabuResult: False


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team