
நாட்டில் இயற்கையின் கோரத்தாணடவத்தினால் பாரிய அழிவுகளுக்கு முகங்கொடுக்க மக்களுக்கு நேரிட்ட அதேவேளை, விலங்குகளும் இந்த அனர்த்தங்களினால் பாதிப்படைந்தமையை நாம் மறுக்க முடியாது. அந்தவகையில் தற்போது வெள்ளநீரில் அடித்துச்செல்லாமல் உயிர் தப்பிப்பதற்காக சிறுத்தையொன்று யானையின் மீது ஏறிநிற்கும் காணொளியொன்று தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.
எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):
இலங்கை வெள்ளத்தில் உயிர்தப்பப் போராடும் விலங்குகள்.. சிறுத்தை ஒன்று யானையின் முதுகில் ஏறி உயிர் தப்பப் போராடும் காட்சி காண்போரைக் கலங்க வைத்துள்ளது. என தெரிவித்து குறித்த காணொளியானது 2025.11.29 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் பலரும் சமூக ஊடகங்களில் இதனை பகிர்ந்திருந்தமையையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
எனவே வெள்ள நிலைமையின்போதும் கூட, ஒரு சிறுத்தை மற்றும் ஒரு யானை (பெரிய தாவர உண்ணி) இவ்வாறு ஒத்துழைத்து செயல்படுவது இயல்பான விடயமல்ல என்பதனால், சிறுத்தைகளின் பாதுகாப்பிற்காக பெரும் பங்களிப்பு செய்துள்ள சுற்றுச்சூழல் ஆர்வலரான அஞ்சலி வொட்சனிடம் நாம் இது குறித்து வினவினோம்.
இதன்போது யானை மற்றும் சிறுத்தைக்கிடையில் இப்படிப்பட்ட ஒத்துழைப்பு செயற்பாடுகள் இடம்பெற வாய்ப்புகள் இல்லையெனவும், இதுபோன்ற சம்பவம் இதற்கு முன்னர் எப்போதும் பதிவாகியது இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
அதேபோன்று, வெள்ள நிலைமைகளின் போது யானைகள் அமைதியாக ஓர் இடத்தில் நிற்காது மாறாக அவை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அவைகளின் உடல் வலிமையும் புத்திசாலித்தனமும் பயன்படுத்துகின்றன. மேலும், அவை நீந்தும் திறன் கொண்டதால், பெரும்பாலும் அவை வலுவான நீரோட்டத்துடன் போராடிக் கொண்டு பாதுகாப்பான இடத்தை அடைய முயற்சிப்பதே இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது. எனவே, ஒரு யானை இவ்வாறான நீரோட்டத்தில் இப்படி அமைதியாக ஓர் இடத்தில் நிற்பது என்பது நடைமுறையில் சாத்தியமற்றது.
மேலும், எந்தவொரு பிரதான ஊடகமும் அல்லது நம்பகமான உறுதிப்படுத்தப்பட்ட மூலமும் சம்பந்தப்பட்ட இந்தச் சம்பவத்தை இதுவரை அறிக்கையிடவில்லை. அதேபோல், யால பகுதியில் உள்ள ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலரிடம் நாம் இதுகுறித்து வினவினோம், இதன்போது இப்படியான சம்பவம் எதுவும் இந்நாட்களில் நடைபெறவில்லை என்றும், இது ஒரு போலி உருவாக்கம் போலத் தெரிகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனவே நாம் இந்த காணொளியை AI Detective Tool ஐ பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்ட போது இந்த காணொளியானது AI தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டுள்ளமை உறுதியானது.


குறிப்பாக, இவ்வாறான அசாதாரண சூழ்நிலையில் பொறுப்புள்ள குடிமக்களாக, செயற்கை நுண்ணறிவின் மூலம் தவறாக வழிநடத்தும் இத்தகைய காணொளிகள் மற்றும் புகைப்படங்களை பகிர்வதில் இருந்து தவிர்க்குமாறு Fact Crescendo நாங்கள் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் வெள்ள நிலையில் உயிர் தப்பிப்பதற்காக சிறுத்தையொன்று யானையின் மீது ஏறியிருப்பதாக பகிரப்படும் காணொளியானது தவறானது என்பதுடன் அது செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்ட காணொளி என்பதுவும் கண்டறியப்பட்டது.
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.
Title:யானையின் முதுகில் ஏறி உயிர் தப்பிக்க போராடும் சிறுத்தையின் காணொளி உண்மையா?
Fact Check By: Suji ShabeedhranResult: False


