2025 ஆம் ஆண்டுக்கான மாணவர் மடிக்கணனி திட்டத்திற்கான விண்ணப்பங்கள் தற்போது வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் சில தகவல்கள் பகிரப்பட்டு வருவதனை எம்மால் காணமுடிந்தது.
எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
குறித்த பதிவில் மாணவர் மடிக்கணினி திட்டம் 2025க்கான விண்ணப்பங்ககளை தற்போது வெளியாகியுள்ளன*
நிதிப் பிரச்சினைகள் காரணமாக சொந்தமாக மடிக்கணினி வாங்க முடியாத மற்றும் தமது கற்றல் நடவடிக்கைகளுக்காக மடிக்கணினி தேவைப்படும் அனைத்து மாணவர்களுக்கும் இந்தத் திட்டத்தின மூலம் பயன்பெற முடியும்.
*2025 ஆம் ஆண்டில் 960,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அவர்களின் கற்றலை மேம்படுத்த இலவச மடிக்கணினி வழங்கப்படும்*
*விண்ணப்பம் ஆரம்பமாகிவிட்டது, விண்ணப்பித்த மாணவர்கள் தங்கள் மடிக்கணினிகளைப் பெறத் தொடங்கியுள்ளனர்*
இங்கே பதிவு செய்து விண்ணப்பிக்கவும் என ஆங்கிலத்தில் தெரிவிக்கப்பட்டு ஒரு இணைப்பு கடந்த 2025.05.27 ஆம் திகதி சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
அது மாத்திரமன்றி சில தினங்களாக வட்ஸ்அப் ஊடாகவும் அந்த தகவல் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இவ்வாறு மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடர்பில் ஏதேனும் செய்திகள் பிரதான ஊடகங்களில் வெளியாகியுள்ளனவா என நாம் ஆராய்ந்த போது அவ்வாறான எந்த செய்திகளும் வெளியாகியிருக்கவில்லை
எனவே மேற்குறிப்பிட்ட தகவல் தொடர்பில் நாம் மேலும் ஆராய்ந்த போது இவ்வாறான இணைப்புகள் ஒவ்வொரு ஆண்டும் பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது.
அதன் பிறகு, இந்தச் செய்திகளில் பகிரப்பட்ட URL தொடர்பில் நாம் ஆராய்ந்தபோது, குறித்த இணைப்புகள் பெரும்பாலும் சுருக்கப்பட்டவை அல்லது தெளிவற்ற இணையத்தள முகவரி (domain) பெயர்களைப் கொண்டவையாகவே காணப்பட்டன.
உதாரணத்திற்கு 2025 பதிப்பில், இணைப்பு “scholar.hight.today” ஐ காட்டுகின்றது, இது Whois தேடலில் 2023 இல் பதிவுசெய்யப்பட்ட அனைத்து பதிவுதாரர் விபரங்களும் தனியுரிமை பாதுகாப்பு சேவையின் பின்னால் மறைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
இவ்வாறான பரீட்சயமற்ற அல்லது போலியான இணையத்தள முகவரிகள் ஊடாகவே மோசடிக்காரர்கள் பல்வேறு சந்தர்பங்களில் நமது தனிப்பட்ட தரவுகளை திருடுவதற்கு முயற்சிக்கின்றனர். இவற்றை நாம் phishing என்றே அழைக்கின்றோம்.
அத்துடன் குறித்த தகவலில் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனவே நாம் குறித்த இணைப்பை கிளிக் செய்தவுடன் முதல் படிவத்தில் பெயர், கல்வி நிலை, தேவையான மடிக்கணினி வகை மற்றும் வயது வரம்பு கோரப்பட்டிருந்தது.
இந்த விபரங்களை உள்ளிட்ட பிறகு, பெயரின் உறுதிப்படுத்தல் கோரப்பட்டது, மேலும் அந்தப் பக்கத்தில் சில போலியான கமென்ட்கள் இருந்தமையையும் எம்மால் காணமுடிந்தது.
அதன் பிறகு, இலவச மடிக்கணினி பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், இந்த மடிக்கனணியை பெற இந்த தகவலை பல WhatsApp தொடர்புகள்/குழுக்களுக்கு பகிருமாறு கேட்கப்பட்டிருந்தது.
பல்வேறு மோசடிகளின் போதும் இறுதியில் இந்த இணைப்பை பல்வேறு குழுக்களில் பகிரவும் என்ற செய்தி குறிப்பிடப்பட்டிருக்கும் என்பதுவும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
2023 ஆம் ஆண்டில் இவ்வாறு இடம்பெற்ற மோசடிதொடர்பில் factcrescendo எமது குழுவினர் ஆங்கிலத்தில் வெளியிட்ட உண்மை கண்டறியும் ஆய்வுக் கட்டுரையையும் காணலாம். Link
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion (முடிவு)
எனவே எமது ஆய்வுகளின் அடிப்படையில் 2023, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் இலவசமாக மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டதிற்கான விணப்பங்கள் என பகிரப்படும் தகவலானது போலியானது என்பதுடன், இதேபோன்ற போலி பிரச்சாரங்கள் 2021/2022 ஆம் ஆண்டிகளிலும் வைரலாக பரவி வந்துள்ளதுடன் அதன் மூலம் மக்களின் தரவுகள் மோசடிக்காரர்களினால் திருடப்படுகின்றன என்பதுவும் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே சமூக ஊடகப் பயனர்கள் இதுபோன்ற பரீட்சயமற்ற இணைப்புகளை கிளிக் செய்வதற்கு முதல் அதனை பல தடவைகள் சரிபார்க்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:இலவச மாணவர் மடிக்கணினி திட்டத்திற்கான விண்ணப்பம் தொடர்பான உண்மை அறிவீர்களா?
Fact Check By: suji shabeedharanResult: False
