Archives

நிழல் பாராளுமன்றத்தை ஸ்தாபிக்கிறாரா ரணில்..? – உண்மை தெரியுமா..? 

INTRO:   நிழல் பாராளுமன்றத்தை ஸ்தாபிக்கிறார் ரணில் என சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “  நிழல் பாராளுமன்றத்தை ஸ்தாபிக்கிறார் ரணில்.! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நிழல் (மாற்று) பாராளுமன்றத்தை நிறுவுவதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி […]

Continue Reading

76000 ரூபாய்க்கு விற்கப்பட்ட புற்றுநோய் மருந்து 370 ரூபாய்க்கு விலை குறைக்கப்பட்டதா?

76000 ரூபாவிற்கு விற்கப்பட்ட புற்றுநோய்க்கான மருந்து தற்போது 370 ரூபாவிற்கு விற்கப்படுவதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் பகிரப்படும் பதிவுகள் தற்போது சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதன. அந்தவகையில் குறித்த பதிவுகளில் தெரிவிக்கப்பட்ட தகவல் தொடர்பில் உண்மையை கண்டறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் 76000 ரூபாய்க்கு இறக்குமதி செய்யப்பட்ட Cancer மருந்து அதே நிறுவனத்திடமிருந்து 370 ரூபாய்க்கு. […]

Continue Reading

இறாலுடன் விற்றமின் C உட்கொண்டால் உயிரிழப்புகள் ஏற்படுமா?

இறால் உட்கொள்ளும் போது அதனுடன் விற்றமின் C எடுத்துகொண்டமையினால் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட தகவல் தொடர்பான உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived link நீங்கள் உங்களையும் உங்களை சுற்றி உள்ளவர்களையும் நேசிக்கிறீர்கள் என்றால் இந்த கட்டுரையைப் படியுங்கள் ————————————- ஒரு பெண் திடீரென்று எதிர்பாராத விதமாக இறந்துவிடுகிறாள். அவளது காது, மூக்கு, வாய் மற்றும் […]

Continue Reading

புகையிரதத்தினுள் வெளிநாட்டு பயணிகளுக்கு மசாஜ் செய்யப்படுவதாக வெளிவந்த வீடியோவின் உண்மை தெரியுமா..?

INTRO:  ‘வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ரயில் பிரயாணத்தின் போது புதிய விடயம் என வீடியோவொன்று சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பவரலாக பகிரப்பட்டு வந்தது. குறித்த வீடியோவில் சுற்றுலாப் பயணிகளுக்கு மசாஜ் செய்வது போன்ற விடயங்கள் காணப்பட்டன. இது வெளிநாட்டினரை ஈர்ப்பதற்காக புகையிரத திணைக்களம் மற்றும் வெளியுறவு துறை அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு விசேட திட்டம் என பலர் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது. புகையிரதங்களில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறுகின்றதா எனவும் இது தொடர்பிலான உண்மையை தன்மையை தெரிவிக்குமாறும் எம்மிடம் […]

Continue Reading

இலங்கை மத்திய வங்கியினால் புதிய நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டமை உண்மையா?

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து நாணயத்தாள்கள் அச்சிடப்படுவது தொடர்பில் பல விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் புதிய நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்து சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதனை எம்மால் காணமுடிந்தது. எனவே இது தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link இலங்கையில் புதிதாக அச்சிடப்பட்ட நாணயத்தால் 50 மற்றும் 100 என தெரிவிக்கப்பட்டு […]

Continue Reading

பெளர்ணமி இரவில் ஒளிரும் சிகிரியா என பகிரப்படும் புகைப்படங்கள் உண்மையா?

INTRO வரலாற்று சிறப்புமிக்க சிகிரியாவை இரவில் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அதனை முன்னிட்டு கடந்த பௌர்ணமி தினம் முதல் அதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டு அன்றைய தினம் ஒளியேற்றப்பட்ட சிகிரியா குன்று என தெரிவிக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டமையை எம்மால் காண முடிந்தது. எனவே இது தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link ஒளியேற்றப்பட்டது சிகிரியாவுக்கு […]

Continue Reading

‘SQUID GAME’ உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட தொடரா?

INTRO 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் திகதி வெளியாகி Netflix இல் ஒளிபரப்பப்பட்ட வெப் தொடரான ஸ்க்விட் கேம் (Squid Game) மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ஒரு வெப் தொடராகும். தற்போது இதன் இரண்டாவது பாகம் வெளியானதை தொடர்ந்து சமூக ஊடகங்களில் சில புகைப்படங்களுடனான பதிவுகள் இது உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு கதை என பகிரப்பட்டு வருகின்றன. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் […]

Continue Reading

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயில் தப்பிய வீடு என பகிரப்படும் புகைப்படம் பற்றிய உண்மை தெரியுமா ?

INTRO:  லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயில் இருந்து தப்பிய வீடு என சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “ 🛑குர்ஆனைக் கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்த இடம் (வீடு /மஸ்ஜித்) இடம் : லாஸ் […]

Continue Reading

கலிபோர்னியா காட்டுத்தீ என பகிரப்படும் காணொளிகள் தொடர்பான உண்மை என்ன?

INTRO கலிபோர்னியாவில் பரவி வரும் காட்டுத்தீ தொடர்பில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் பல தொழிநுட்பங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்த வண்ணமே உள்ளன. எனவே இவ்வாறு சமூக ஊடகங்களில் வெளியான சில காணொளிகள் தொடர்பில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link மனதை உருக்கும் காணொலி கலிபோர்னியா காட்டுத்தீ பல்லாயிரக்கணக்கான உயிரினங்களின் நிலைமை என தெரிவிக்கப்பட்ட குறித்த […]

Continue Reading

போக்குவரத்து சமிக்ஞை விளக்குகளை கட்டுப்படுத்தக்கூடிய உபகரணமா இது?

INTRO ஒரு சிலரால் வேடிக்கையாக மேற்கொள்ளப்படும் சில விடயங்கள் சமூக ஊடகங்களில் வெளிவரும் போது அவற்றின் உண்மை அறியாமல், மக்கள் மத்தியில் அவை பாரிய தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. அவ்வாறு அண்மையில் வீதி சமிக்ஞை விளக்குகளை கட்டுப்படுத்தக்கூடிய உபகரணம் தொடர்பில்  சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளி தொடர்பான உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link வீதி சமிக்ஞைகள் இடையில் நின்றகாலம் முடிவடைந்தது […]

Continue Reading

இலங்கையில் HMPV நோய் தொற்றுடன் நபர் அடையாளம் காணப்பட்டாரா ?

INTRO:  இலங்கையில் HMPV நோய் தொற்றுடன் நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக என சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link சமூக வலைத்தளங்களில் “ இலங்கையில் HMPV நோய் தொற்றுடன் நபர் ஒருவர் கண்டி பிரதேசத்தில் […]

Continue Reading

சீனாவில் பரவும் வைரஸ் தொடர்பான உண்மை நிலை என்ன?

சீனாவில் பரவி வரும் வைரஸ் தொடர்பில் தற்போது சமூகத்தில் அதிகளவாக பேசப்பட்டு வருகின்றது.  ஐந்து வருடங்களுக்கு முன்னர் சீனாவில் தோற்றம் பெற்ற கொவிட் – 19 வைரஸ் போன்ற ஆபத்தை ஏற்படுத்தும் மற்றுமொரு வைரஸ் என்ற விதத்திலான பல தகவல்களும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை அடுத்தே இலங்கையிலும் இது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.  இதன் பின்னணியில் சீனாவில் தற்போது பரவி வரும் இந்த வைரஸ் தொடர்பில் அறிந்துகொள்ளும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. […]

Continue Reading

சவுதி பாதுகாப்பு அமைச்சர் பட்டாசு வெடிக்கு பயந்து அழைத்துச் செல்லப்பட்டதாக பகிரப்படும் காணொளி உண்மையா?

INTRO சவுதி அரேபியாவின்  அதிகாரியொருவர் பாதுகாப்பு வீரர்களுடன் கட்டிடமொன்றுக்குள் செல்லும் போது, அங்கு இடம்பெற்ற வெடிப்புச சம்பவத்தால் அவரின் பாதுகாப்புப் படையினரால் அவர் மீண்டும் அங்கிருந்து அழைத்துச் செல்லப்படும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது. எனவே இந்த காணொளி தொடர்பான உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link  குறித்த பதிவில் சவுதி பாதுகாப்பு அமைச்சர் ரியாத்தில் […]

Continue Reading

SCAM Alert: சரிபார்க்காமல் தெரியாத இணைப்புகளுக்குள் உட்செல்வதை தவிர்க்கவும்!

INTRO பல்வேறு நிறுவனங்களின் ஆண்டு விழாக்களை முன்னிட்டு பரிசுகள் மற்றும் இலவச டேட்டா வழங்குவதாக அவ்வப்போது சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமையை நாம் காண்கின்றோம். இருப்பினும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்த தகவல்கள் போலியானவையாகவே காணப்படுகின்றன. இதுபோன்ற மோசடிகள் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு செய்திகள் வந்தாலும், மக்களை கவரும் விதத்தில் பகிரப்பட்டு வரும் விளம்பரங்களினால் பொதுமக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டுக்கொண்டே இருக்கின்றனர். இதன் காரணமாக இவ்வாறான போலி தகவல்கள் தொடர்பில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் […]

Continue Reading

தாதியர்களின் கடமை தொடர்பில் இராமநாதன் அர்ச்சுனா கூறியது உண்மையா?

INTRO கடந்த நாட்களில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அரச்சுனா வைத்தியசாலைகளில் தாதியர்களின் கடமைகள் தொடர்பில் கூறிய கருத்திற்கு சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமையை எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே இது தொடர்பான உண்மையை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விபரம் (what is the claim) Youtube Link  | Archived Link குறித்த காணொளியானது மூதூர் வைத்தியசாலையில் நடந்த சம்பவம் தொடர்பில் வைத்தியர் இராமநாதன் அரச்சுனா தெரிவித்த கருத்தில் […]

Continue Reading

வலஸ்முல்ல பகுதியில் குழந்தை காணாமற்போன சம்பவம் தொடர்பான உண்மை என்ன?

INTRO கடந்த சில நாட்களாக பெண் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு அவரை கண்டுப்பிடித்து தரும் படியான பல பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்ததனை நாம் அவதானித்தோம். மேலும் இது தொடர்பில் மக்கள் அவதானத்துடன் இருந்தமையும் இதன் உண்மைத் தன்மையை கண்டறியுமாறு பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டிருந்தமையும்  குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில் குழந்தை காணாமற்போனதாக தெரிவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான உண்மைத் தன்மையை கண்டறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.  தகவலின் விபரம் (what is […]

Continue Reading

2024 ஆம் ஆண்டின் அதிக கவனத்தினை ஈர்த்த Fact Crescendo உண்மை கண்டறியும் விசாரணைகள் ஓர் பார்வை…!

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட பல போலியான மற்றும் தவறான கருத்துக்களை பரப்பும் பதிவுகளின் ஆய்வறிக்கைகளின் மூலம் அதன் உண்மைத் தன்மையினை சமூகத்திற்கு கொண்டு செல்வதன் மூலம் நாங்கள் கடந்த வருடம் (2024) மேற்கொண்ட ஆய்வறிக்கையின் ஓர் கண்ணோட்டம். ஜனவரி மாதம் பெப்ரவரி மாதம் மார்ச் மாதம் ஏப்ரல் மாதம் இதனை முழுமையாக வாசிக்க இங்கே கிளிக் செய்யவும் மே மாதம் இதனை முழுமையாக வாசிக்க இங்கே கிளிக் செய்யவும் ஜுன் மாதம் ஜுலை மாதம் ஆகஸ்ட் மாதம் […]

Continue Reading

வங்கியால் பெறப்படும் அனைத்து வைப்புத்தொகை மீதான வட்டிக்கும் வரி அதிகரிக்கப்பட்டதா?

வங்கியால் வழங்கப்படும் வைப்புத் தொகை மீதான வட்டிக்கான வரி 10% வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருவதனை நாம் அவதானித்தோம். எனவே இது தொடர்பில் உண்மைத் தன்மையை அறியும் நோக்கில் ஃபெக் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் அனைத்து வங்கி வைப்புக் கணக்குகளிலிருந்தும் 10 வீத வரி- போச்சுடா? என தெரிவிக்கப்பட்டு கடந்த […]

Continue Reading

TIME சஞ்சிகையின் ஆண்டின் சிறந்த நபராக இராமநாதன் அர்ச்சுனா தெரிவுசெய்யப்பட்டரா…?

INTRO:  TIME சஞ்சிகையின் ஆண்டின் சிறந்த நபராக இராமநாதன் அர்ச்சுனா தெரிவுசெய்யப்பட்டதாக சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “ Person Of The Year 2024 – Ramanathan Archchuna […]

Continue Reading

கடவுச்சீட்டு விநியோக காரியாலத்தில் தீ விபத்தா…?

INTRO:   கடவுச்சீட்டு விநியோக  காரியாலத்தில் தீ விபத்து என சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “ பாஸ்போர்ட் ஒபிஸ் பத்துது. நம்முட வெளிநாட்டு கனவும் சேர்ந்து பத்துது 😭 ”இம் […]

Continue Reading

மன்மோகன் சிங்கின் இறுதித் தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமா இது?

INTRO  இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 26 ஆம் திகதி காலமானார். அதனைத் தொடர்ந்து அவரின் இறுதி புகைப்படம் என தெரிவிக்கப்பட்டு தற்போது சமூக ஊடகங்களில் புகைப்படமொன்று பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. மேலும் இது குறித்த உண்மைத் தன்மையை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link குறித்த பதவில் கலாநிதி மன்மோகன் சிங்கின் […]

Continue Reading

இலங்கையில் TikTok செயலியின் பயன்பாட்டைத் தடை செய்ய தீர்மானமா ?

INTRO :   இலங்கையில் TikTok செயலியின் பயன்பாட்டைத் தடை செய்ய தீர்மானம் என கருத்து பரவும் வண்ணம்  சமூகவலைத்தளங்களில் சில பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim):  Facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் “TikTok செயலியின் பயன்பாட்டைத் தடை செய்ய […]

Continue Reading

மலை உச்சியில் சிக்கிய யானையை மீட்கும் காணொளி உண்மையா?

INTRO  ஆபத்தில் இருக்கும் விலங்குகளை காப்பாற்றுவது தொடர்பான பல காணொளி மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருவதனை நாம் அவதானித்திருப்போம். அந்த வகையில் தற்போது மலை உச்சியில் சிக்கியிருக்கும் யானையை மீட்கும் காணொளியொன்று சமூக ஊடக்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் காணமுடிந்தது. அது தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது.   Facebook Link | Archived Link  குறித்த காணொளியில் “நேற்று முன்தினம் மாத்தளை லக்கல பிரதேசத்தில் காட்டு […]

Continue Reading

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ரணில் 4 கோடிக்கு கஜூ சாப்பிட்டாரா?

INTRO  அரசியல்களத்தை பொறுத்தவரையில் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னணியில் சிலர் அவர்களின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் பல தவறான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பி வருவதனை எம்மால் காணமுடிகின்றது. அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க தொடர்பில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்த செய்தியின் உண்மையை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மெற்கொண்டது.  தகவலின் விபரம் (what is the claim) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி காலத்தில் கஜூ சாப்பிடுவதற்கு […]

Continue Reading

ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட புற்றுநோய்க்கு எதிரான  தடுப்பூசி உண்மையில் செய்வது என்ன? 

INTRO சமீபத்தில் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி ரஷ்யாவால் உருவாக்கப்பட்டமை தொடர்பில் பல தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. இது குறித்த உண்மைத் தகவலை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விபரம் (what is the claim) Facebook Link | Archived Link  குறித்த பதவில்  ஒரு ஊசி போட்டா புற்றுநோய் மாறுமா? ரஷ்யாவின் புதிய கண்டுபிடிப்பு என தெரிவிக்கப்பட்டு கடந்த 2024.12.22 ஆம் திகதி பதிவேற்றப் […]

Continue Reading

தாஜ்மஹாலின் கட்டுமான பணிகளின் போது என பரவும் காணொளி உண்மையா?

INTRO:  தாஜ்மாஹாலின் கட்டுமான பணிகளின் போது எடுக்கப்பட்ட காணொளி என சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link  சமூக வலைத்தளங்களில் “ கானக்கிடைக்காது கானொலி…… தாஜ்மஹால் கட்டியபோது…….. ”இம் மாதம் 21 ஆம் திகதி 2024 […]

Continue Reading

ஜனாதிபதி அநுரகுமாரவின் தாயார் Lanka Hospital இற்கு அழைத்துவரப்பட்டமை உண்மையா?

INTRO ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தாயார் சுகவீனமுற்ற நிலையில் சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் தற்போது மேலதிக சிகிச்சைகளுக்காக நாராஹென்பிட்ட Lanka Hospital இற்கு ஹெலிகொப்டர் மூலம் கொண்டுவரப்பட்டதாக சமூக ஊடகங்களில் காணொளி ஒன்று பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. அது தொடர்பில் உண்மையை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது.  தகவலின் விபரம் (what is the claim) Facebook Link | Archived Link  குறித்த காணொளியில் அநுராதபுரத்தில் இருந்து நோயாளி […]

Continue Reading

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட மூழ்கும் குழிகள் தொடர்பான உண்மை என்ன?

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட நிலத்தடி காடு என்று தெரிவிக்கப்பட்டு சமூக  ஊடகங்களில் புகைப்படமொன்று பகிரப்பட்டு வந்ததனை எம்மால் அவதானிக்க முடிந்தது. குறித்த புகைப்படம் தொடர்பான உண்மையை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விபரம் (what is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் சீனாவில் 192 மீட்டர் ஆழத்தில் ஒரு பெரிய நிலத்தடி காடு கண்டுபிடிப்பு என தெரிவிக்கப்பட்டு கடந்த 2024.12.15 ஆம் திகதி பதிவேற்றப்பட்டுள்ளது. மேலும் அந்த பதிவின் […]

Continue Reading

கட்டுநாயக்க விமான நிலையத்தின் முஸ்லிம்களின் தொழுகை அறையை நீக்க போவதாக பரவும் தகவல் உண்மையா?

INTRO :   கட்டுநாயக்க விமானநிலையத்தின் முஸ்லிம்களின் தொழுகை அறையை நீக்க போவதாக சில பதிவுகள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim):  Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் “*🇱🇰DT NEWS🇱🇰* *கட்டுநாயக்க விமான நிலையத்தின் தொழுகை அறை  தொடர்பில் முக்கிய […]

Continue Reading

ரணிலின் கலாநிதி பட்டம் குறித்த உண்மை என்ன?

INTRO சமீப காலமாக நாட்டில் கலாநிதி பட்டம் தொடர்பில் பாரிய கேள்விகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில் தற்போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கலாநிதி பட்டம் தொடர்பிலும் பேசப்பட்டு வருகின்றது. எனவே அது தொடர்பில் உண்மையை கண்டறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது.  தகவலின் விபரம் (what is the claim)  Facebook | Archived Link   குறித்த பதிவில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பணிவான குணம் காரணமாக அவரின் பெயருக்கு […]

Continue Reading

பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது கலாநிதி பட்டத்தை பூர்த்தி செய்தாரா?

புதிய அரசாங்கம் ஆட்சி பொறுப்பை ஏற்றதன் பின்னர் புதிதாக பதிவியேற்ற சபாநாயகர், அமைச்சர்கள் உள்ளிட்டவர்களின் கல்வித் தகைமை தொடர்பில் சமூகத்தில் பலவிதமான சர்ச்சைகள் எழுந்தவண்ணமே உள்ளன. அதன் பின்னணியில் சபாநாயகர் அசோக ரன்வலவின் கல்வித்தகைமை தொடர்பில் எழுந்த பிரச்சினையின் பின்னர் அவர் தனது சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது. அந்தவைகையில் தற்போது பிரதமர் ஹரிணி அமரசூரியவின் கலாதிநிதி பட்டம் தொடர்பில் தற்போது பாரிய கேள்விகள் எழும்பியுள்ள நிலையில் அது குறித்த உண்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் […]

Continue Reading

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 100,000 நிதியுதவியா..?

INTRO:   தற்போதைய அரசு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நிதியுதவி அளித்து வருவதாக சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு நபருக்கும் 100,000 ரூபாய் அரசாங்க உதவியைப் பெற இப்போதே பதிவு செய்ய வேண்டும் என்று சமூக […]

Continue Reading

28 YEARS LATER  திரைப்படத்தில்  Zombie ஆக வருபவர் சிலியன் மர்பியா?

INTRO பெரும்பாலான ஹொலிவுட் திரைப்பட ரசிகர்கள் சிலியன் மார்பியை (Cillian Murphy) பற்றி நன்கு அறிந்திருப்பார்கள் என்றே கூற வேண்டும். காரணம் இவ்வாண்டு நடைபெற்ற ஒஸ்கார் விருதுகளில் Oppenheimer திரைப்படம் 7 பிரிவுகளில் விருது வென்றது. அந்தவகையில் குறித்த படத்திற்கான சிறந்த நடிகருக்கான விருதினை சிலியன் மர்பி பெற்றமை குறிப்பிடத்தக்கது. “28 YEARS LATER“ என்ற திரைப்படத்தின் முன்னோட்டமானது ( trailer) கடந்த 2024.12.10 ஆம் திகதி வெளியிடப்பட்டது. குறித்த முன்னோட்டக் காட்சியின் ஒரு பகுதியில் எலும்பும் […]

Continue Reading

யாழ் தேவி புகையிரதத்தின் பெட்டி வேறாக கழண்டு சம்பவம் சமீபத்தில் இடம்பெற்றதா..?

INTRO:  யாழ் தேவி புகையிரதத்தின் பெட்டி  வேறாக கழண்டு சம்பவம் என சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “ யாழ் தேவி புகையிரதத்தின் பிரயாணத்தின் இடையே பெட்டி ஒன்று வேறாக […]

Continue Reading

வட மாகாணத்தில் எலிக்காய்ச்சலால்  7 பேர் உயிரிழந்தமை தொடர்பான தெளிவுப்படுத்தல்

கடந்த நாட்களில் காலநிலை மாற்றங்களினால் நாட்டில் கடும் காற்றுடனான மழை, வெள்ளம் உள்ளிட்ட அனர்த்தங்கள் ஏற்பட்டன இதன் பின்னணில் பல்வேறு தொற்றுநோய்களும் பரவ ஆரம்பித்துள்ளன. அந்தவகையில் தற்போது நாட்டி எலிக்காய்ச்சல் (Leptospirosis)  தீவிரமாக பரவி வருவதாகவும் இதனால் யாழ்ப்பானத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இது தொடர்பில் சமூக ஊடகங்களிலும் பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டு வந்தமையையும் எம்மால் அவதானிக்க முடிந்து. Facebook Link  | Archived Link மேலும் இது தொடர்பான பல செய்திகள் பிரதான […]

Continue Reading

 குறிப்பிட்ட சில நோய்களுக்கு மாத்திரம் நிதி வழங்கப்படும் என ஜனாதிபதி  நிதியத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டதா?

INTRO பல்வேறு நோய்கள் மற்றும் சிகிச்சைகளின் போது நோயாளர்களுக்கு தங்களால் ஈடு செய்ய முடியாத விதத்தில் மருத்துவ செலவுகள் அதிகரிப்பதனால் அவர்கள் ஜனாதிபதி நிதியத்தி உதவியை நாடி தங்களின் மருத்துவ செலவுகளை பூர்த்தி செய்துகொள்கின்றனர். இதன் பின்னணியில் தற்போது குறிப்பிட்ட சில நோய்களுக்கு மாத்திரமே ஜனாதிபதி நிதியத்தினால் நிதியுதவி வழங்கப்படுவதாகவும், புதிய அரசாங்கத்தின் கீழ் இந்த நடைமுறைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டு வருவதனை அவதானிக்க முடிந்தது. குறித்த தகவலின்  உண்மைத் தன்மையை அறியும் […]

Continue Reading

சபாநாயகர் அசோக ரன்வலவின் கலாநிதிப் பட்டம் தொடர்பான தெளிவுபடுத்தல்

INTRO கடந்த நவம்பர் மாதம் 21 ஆம் திகதி தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி அசோக ரன்வல 10 ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகர் பதவிக்கு ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டதாக பாராளுமன்றம் அறிக்கையொன்றின் மூலம் அறிவித்தது.  குறித்த அறிக்கையில் அசோக ரன்வல மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் வேதியியலில் பொறியியல் பட்டதாரி என்றும் ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் உயிர்வேதியியல் துறையில் தனது கலாநிதி பட்டத்தை முடித்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.  குறித்த அறிவிப்பை பார்வையிட அதன்படி, புதிய சபாநாயகரின் […]

Continue Reading

2025 ஆம் ஆண்டு முதல் மாணவர்களுக்கு தைக்கப்பட்ட சீருடை வழங்கப்படுவதன் பின்னணி என்ன?

INTRO பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு (2025) முதல்  தைக்கப்பட்ட சீருடைகளை வழங்குவது தொடர்பில் கடந்த நாட்களில் சமூக ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்டு வந்தது. குறித்த தகவலின்  உண்மைத் தன்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.  தகவலின் விபரம் (what is the claim) Facebook Link | Archived Link குறித்த செய்தியில் பாடசாலை மாணவர்களுக்கு தைக்கப்பட்ட சீருடைகளை வழங்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவு அபிவிருத்தி அமைச்சர் சுனில் […]

Continue Reading

 28 நாட்கள் ஒரே இடத்திலிருந்து எடுக்கப்பட்ட நிலவின் வளர்பிறை புகைப்படம் உண்மையா?

INTRO:  28 நாட்கள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் தொடர்ந்து எடுக்கப்பட்ட வளர்பிறை நிலவின் காட்சி என சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “ ஒரே இடத்தில் ஓரே நேரத்தில் […]

Continue Reading

அன்னாசித் துண்டுகளை வெந்நீரில் கலந்து குடித்தால் புற்றுநோய் குணமாகுமா?

INTRO புற்றுநோய் ஒரு உயிர்கொல்லி நோயாகவே பார்க்கப்படுவதனால், அதை குணப்படுத்துவது தொடர்பில் பல வைத்திய முறைகள் சமூக ஊடகங்கள் வழியாக தொடர்ந்து பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிகின்றது. அதனடிப்படையில் குறித்த வைத்திய முறைகளின் உண்மைத் தன்மை தொடர்பில் அறியாதவர்கள் அதனை முயற்சித்து பார்ப்பதன் ஊடாக பல்வேறு பக்க விளைவுகளுக்கு முகங்கொடுப்பது மாத்திரமன்றி உயிர் ஆபாத்துக்களும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் காணப்படுகின்றது. இதன் பின்னணியில் அன்னாசி பழத் துண்டுகளை வெந்நீரில் கலந்து குடித்தால் புற்றுநோய் குணமாகும் என்ற […]

Continue Reading

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட கும்பகர்ணனின் வாள் என்பது உண்மையா? 

INTRO இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட கும்பகர்ணன் வாள் என குறிப்பிடப்பட்டு சமூக ஊடகங்களில் பகிரப்படும் புகைப்படும் தொடர்பான உண்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.  தகவலின் விபரம் (what is the claim) Facebook Link | Archived Link குறித்த பதிவில் “60 அடி நீளமும் 6 அடி அகலமும் உடைய அஷ்ட தாது வாள் இலங்கையில் இருந்து கண்டு எடுக்கப்பட்டது. இந்த வாள் இராவணன் தம்பி கும்பகர்ணன் உபயோகபடுத்தப்பட்டது என்று இலங்கை […]

Continue Reading

பனிப்பொழிவால் மூடப்பட்டுள்ளதா லோர்ட்ஸ் மைதானம்…?

INTRO:  பனிப்பொழிவால் மூடப்பட்டுள்ள இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானம் என சில புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link சமூக வலைத்தளங்களில் “#SportsUpdate | பனிப்பொழிவால் மூடப்பட்டு கண்ணைக் கவரும் இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானம்..!! #TamilFM | […]

Continue Reading

இலங்கையில் உருவான முதல் சூறாவளியா இது?

INTRO கடந்த நாட்களில் இலங்கையில் ஏற்பட்ட வானிலை மாற்றங்களினால் பாரியளவிலான இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்ட அதன் பின்னணியில் பல தவறான தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. அதனடிப்படையில் இலங்கையில் உருவான முதல் சூறாவளி என குறிப்பிட்ட காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுவதையும் எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே குறித்த பதிவின் உண்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விபரம் (what is the claim) TikTok | Archived Link […]

Continue Reading

விமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் விமான பயணம் மற்றும் குழந்தைக்கு ஜெட் ப்ளூ என பெயரிடப்பட்டதா ?

INTRO:  விமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் விமான பயணம் மற்றும் குழந்தைக்கு ஜெட் ப்ளூ என பெயரிடப்பட்டதாக சமூகவலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “30000 அடி உயரத்தில் விமானத்தில் பிறந்த […]

Continue Reading

இலங்கையில்  பிரபாகரனின் புகைப்படத்தை திரையில் காட்சிப்படுத்தி மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டதா?

INTRO கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் திகதி மாவீரர் தினம் இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் பின்னணியில் பல தவறான தகவல்கள் சமூக ஊடகங்கள் வழியாக பகிரப்பட்டு வருவதனையும் எம்மால் அவதானிக்க முடிந்தது. இதனடிப்படையில் இலங்கையில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வு என குறிப்பிட்டு தற்போது சமூக ஊடகங்களில் பதவிவொன்று பகிரப்பட்டு வருவதனையும் நாம் அவதானித்தோம். எனவே குறித்த பதிவின் உண்மைத் தன்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. […]

Continue Reading

இலங்கையில் வாய் பேச முடியாதவர்கள் வாழும் அதிசய கிராமம்! உண்மை என்ன?

INTRO இலங்கையில் வாய் பேச முடியாதவர்கள் வாழும் அதிச கிராமம் என்ற தலைப்பில் சமூகஊடகங்களில் காணொளி ஒன்று பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே குறித்த பதிவின் உண்மைத் தன்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விபரம் (what is the claim) Facebook Link  | Archived Link  குறித்த பதிவு, இலங்கையில் வாய் பேச முடியாதவர்கள் வாழும் அதிசய கிராமம் என தலைப்பிடப்பட்டு கடந்த 2024.08.11 ஆம் […]

Continue Reading

பலாலி  – அச்சுவேலி பிரதான வீதி திறப்பின் போது உண்மையில் சுமந்திரன் கூறியது என்ன?

INTRO கடந்த நவம்பர் முதலாம் (2024.11.01) திகதி பலாலி  – அச்சுவேலி பிரதான வீதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பணிப்புரையின் கீழ் திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்து தொடர்பான பதிவொன்று சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றமையை எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே குறித்த பதிவின் உண்மைத் தன்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விபரம் (what is the claim) Facebook Link  | […]

Continue Reading

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் பிரபாகரனின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்களா?

INTRO:  கடந்த சில நாட்களாக மாவீரர் தினம் அனுஷ்டிப்பு சமூகத்தில் பாரிய பேசு பொருளாகவே மாறியுள்ளது என்றே கூற வேண்டும். அதற்கு காரணம்  ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி வெற்றிப்பெற்றதனை தொடர்ந்து இந்த மாவீரர் தின அனுஷ்டிப்பை அரசாங்க செயற்பாட்டுடன் தொடர்புப்படுத்தி பலரும் தவறான புரிதலை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. இதன் பின்னணியில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளை […]

Continue Reading

பாராளுமன்ற நீர் தடாகத்தில் வாகனம் வீழ்ந்தமைக்கு காரணம் NPP உறுப்பினர் மதுபோதையில் வாகனம் செலுத்தியமையா?

INTRO:  தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரின் கார் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள நீர் தடாகத்திற்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானமை தொடர்பில் தவறான புரிதலை மக்கள் மத்தியில் உருவாக்கும் நோக்கில் பல பதிவுகள் சமூகவலைத்தளங்கள் ஊடாக பகிரப்பட்டு வருவதனை எம்மால்  காணமுடிந்தது. எனவே குறித்த பதிவின் உண்மைத் தன்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim):  Archived Link குடிபோதையில் சென்ற தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற […]

Continue Reading

இலங்கையில் நடந்த மாவீரர் நினைவேந்தலா இது?

INTRO:  இலங்கையில் நடந்த மாவீரர் நினைவேந்தல் என சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link இன்றைய தினம் மாவீரர் நினைவேந்தல் மேற்கொள்ளப்படுவதால் சமூக வலைத்தளங்களில் இலங்கையில் முன்னெடுக்கப்படும் நிகழ்வுகள் என சிங்களத்தின் பதிவிட்டு இம் […]

Continue Reading

மாவீரர் தினத்தை முன்னிட்டு இலங்கையில் இடம்பெற்ற நிகழ்வு என குறிப்பிட்டு பகிரப்படும் காணொளி! உண்மை என்ன?

INTRO:   இன்று (2024.11.27) இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் அனுஷ்டிக்கப்படும் மாவீரர் தினத்தை மையமாகக் கொண்டு சமூகத்தில் பல தவறான தகவல்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்கள் ஊடாக மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருகின்றமையை காண முடிக்கின்றது. அந்தவகையில் இலங்கையில் பாரியளவிலான நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டு மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுவதாக தெரிவித்து சமூகவலைத்தளங்களில் காணொளி ஒன்று பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே குறித்த பதிவின் உண்மைத் தன்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ […]

Continue Reading

வெயாங்கொட வந்துரவ பிரதேசத்தில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றதற்கான காரணம் என்ன?

INTRO:  கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வெயாங்கொட வந்துரவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகள் தொடர்பில் பலவிதமான மாற்று கருத்துக்கள் பொதுமக்களிடையே பரவலாக பேசப்பட்டு வந்ததன் பின்னணியில் அது குறித்த தவறான சில தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்ததனையும் எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே உண்மையில் வெயாங்கொட வந்தரவ பிரதேசத்தில் இடம்பெற்ற அகழ்வுப்பணிகளின் பின்னணி தொடர்பில் தெளிவுப்படுத்தும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.   தகவலின் விவரம் (What is the claim): Facebook […]

Continue Reading

இலங்கையில் நடந்த மாவீரர் நினைவேந்தலில் எடுக்கப்பட்ட புகைப்படமா இது?

INTRO:  இலங்கையில் நடந்த மாவீரர் நினைவேந்தலில் எடுக்கப்பட்ட புகைப்படம் என சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link சமூக வலைத்தளங்களில் “பொக்கிஷமான சகோதரத்துவத்தின் பந்தம் .” என சிங்களத்தின் பதிவிட்டு இம் மாதம் 24 […]

Continue Reading

தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவான பெண் உறுப்பினர்கள் யார்?

INTRO: இம்முறை பாராளுமன்றத்தில் பெண் உறுப்பினர்களின் அங்கத்துவம் பெரிதும் பேசப்பட்ட ஒன்றாகவே உள்ளது. அந்தவகையில் பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் தேசிய மக்கள் சக்தி சார்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவான பெண்கள் என குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பகிரப்படுப்படும் படத்துடனான பதிவொன்றை எம்மால் அவதானிக்க முடிந்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மை தொடர்பில் ஆராயும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link குறித்த பதிவில் […]

Continue Reading

ஜனாதிபதி அனுரவின் பிறந்த நாள் கொண்டாட்டம் என பரவும் தகவல் உண்மையா?

INTRO:  ஜனாதிபதி அனுரவின் பிறந்த நாள் கொண்டாட்டம் என சமூகவலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “ஜனாதிபதி அனுரட பிறந்த நாள் கொண்டாட்டம்  இலங்கையில் இடம்பெற்ற ஸ்வீடனின் பிரபல இசைக்குழுவின் நிகழ்வில் […]

Continue Reading

துப்பரவுப்பணியில் ஈடுபட்ட சுகாதார அமைச்சர் என பரவும் தகவல் உண்மையா?

INTRO:   சுகாதார அமைச்சரான நலிந்த ஜயதிஸ்ஸ கண்டி போதான வைத்தியசாலையில் துப்பரவுப்பணியில் ஈடுபட்டார் என சமூகவலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “துப்பரவுப்பணியில் ஈடுபட்ட சுகாதார அமைச்சர்! புதிய சுகாதார அமைச்சரான […]

Continue Reading

பத்தாவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகர் பிமல் ரத்நாயக்கவா?

INTRO:   பத்தாவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகர் பிமல் ரத்நாயக்க என சமூகவலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் ஆகின்றார் பிமல் ரத்நாயக்க!  10வது பாராளுமன்றத்தின் சபாநாயகராக தேசிய […]

Continue Reading

 பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா பௌத்த சமயத்தைச் சேர்ந்தவரா?

INTRO:  பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவின் சமயம் பௌத்தம் என, பாராளுமன்ற இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் படத்துடனான பதிவொன்று பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மை தொடர்பில் ஆராயும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link குறித்த பதிவில் பாராளுமன்ற இணையதளத்தில் புதிய எம்.பிக்களின் விபரங்களை நோக்கினால், டாக்டர் அர்ச்சுனாவின் […]

Continue Reading

சம்பளம் இன்றி பணியாற்றவுள்ள அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உண்மை என்ன தெரியுமா?

INTRO:   சம்பளம் இன்றி பணியாற்றவுள்ள அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் என சமூகவலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “சம்பளம் இன்றி பணியாற்றவுள்ள அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி அநுர […]

Continue Reading

கையடக்கத் தொலைபேசியை சார்ஜ் செய்து கொண்டு ஹெட்போன் பயன்படுத்தியதால் உயரிழந்த நபர்! உண்மை என்ன?

INTRO: உறங்கும் போது கையடக்கத் தொலைபேசியை சார்ஜ் செய்து கொண்டு ஹெட்போன் பயன்படுத்திய நபர் ஒருவர் உடம்பில் இரத்தக் காயங்கள் ஏற்பட்டு உயிரிழந்தமை தொடர்பிலான புகைப்படத்துடன் கூடிய காணொளி ஒன்று சமூகஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. றித்த தகவலின் உண்மைத் தன்மை தொடர்பில் ஆராயும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): <iframe frameBorder=’0′ width=’640′ height=’360′ webkitallowfullscreen mozallowfullscreen allowfullscreen src=”https://www.awesomescreenshot.com/embed?id=33892427&shareKey=36096df894460737c33943c998b36469“></iframe> Archived Link […]

Continue Reading

ஒருவருக்கு வழங்கப்படும் அரிசியின் அளவை 03  கிலோவாக மட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் தீர்மானமா?

INTRO:   நம் நாட்டில் கடந்த காலங்களில் அரிசி தொடர்பில் வெகுவாக பேசப்பட்டு வந்தது, காரணம் நாட்டின் பிரதான உணவாக சோறு உட்கொள்ளப்படுவதனால் அரிசி விலை அதிகரிப்பு மற்றும் அரசி தட்டுப்பாடு என்பன மக்களை பெரிதும் பாதிக்கும் காரணியாகவே உள்ளது. இதன் பின்னணியில் தற்போது ஒருவருக்கு வழங்கப்படும் அரிசியின் அளவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் பல்வேறு பதிவுகள் பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மை தொடர்பில் ஆராயும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ […]

Continue Reading

தோல்வியை கொண்டாடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் என பரவும் உண்மையா?

INTRO:  பாராளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தனது தோல்வியை கொண்டாடும் வீடியோ என சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “தோல்வியை கொண்டாடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் […]

Continue Reading

கற்கோவளம் இராணுவ முகாம் அகற்றப்படுவதன் பின்னணி என்ன?

INTRO:   யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கற்கோவளம் இராணுவ முகாமை 14 நாட்களுக்குள் அகற்றி, குறித்த காணியை உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளமை தொடர்பான தகவல்கள் சமூக ஊடகங்களில் அதிகளவில்  பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மை தொடர்பில் ஆராயும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  குறித்த பதிவில் கற்கோவளம் பகுதியில் தனியார் […]

Continue Reading

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜே.வி.பி தலைமை பொறுப்பில் இருந்து விலகினாரா?

INTRO:   தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்ததையடுத்து அரசு மற்றும் அக்கட்சியின் முடிவுகள் குறித்து பல்வேறு தவறான கருத்துக்கள் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன. கடந்த 14ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று வெற்றி பெற்றுள்ள நிலையில் இது போன்ற பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஜே.வி.பியின் தலைமைத்துவம் குறித்தும் பகிரப்பட்ட அத்தகைய கருத்துக்கள் குறித்தும் நாங்கள் ஆய்வினை மேற்கொண்டோம். தகவலின் விவரம் (What is the claim): […]

Continue Reading

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தின் உண்மை என்ன?

INTRO:  யாழ். தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரை சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள்  சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த தகவலின் உண்மை தன்மை தொடர்பில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  காங்கசந்துறை வரலாற்றுச் சிறப்புமிக்க திஸ்ஸ ரஜமஹா விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, போர்வீரர்களைக் கொலைகாரர்கள் எனக் குற்றம் சுமத்தி சிங்கள-தமிழ் […]

Continue Reading

2019 ஆம் ஆண்டிருந்த அமைச்சரவை என பரவும் புகைப்படத்தின் உண்மை தெரியுமா?

INTRO:  2019 ஆம் ஆண்டிருந்த அமைச்சரவையும் இன்று அமைந்துள்ள அமைச்சரவையும் என பரவும் இரு புகைப்படங்களை ஒப்பிட்டு ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த அறிக்கை போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link |  Archived Link  சமூகவலைத்தளங்களில் இன்று இடம்பெற்ற புதிய அமைச்சரவை நியமனத்தினை தொடர்ந்து எடுத்துகொண்ட […]

Continue Reading

இலங்கையில் மாவீரர் தினத்தை நடத்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முழு அனுமதி வழங்கினாரா? உண்மை என்ன?

INTRO:   இலங்கையில் மாவீரர் தினத்தை நடத்துவதற்கு, தமிழ் மக்களுக்கு இனி எந்தவொரு தடையும் இல்லையென தெரிவித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் ஜனாதிபதியின் கையெழுத்துடன் கூடிய கடிதமொன்று பகிரப்பட்டடு வருவதனை எம்மால் காணமுடிந்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த அறிக்கை போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim):  Archived Link  குறித்த அறிக்கையின்படி […]

Continue Reading

பாராளுமன்ற அங்குத்துவத்தை இழந்த மூத்த தமிழ் உறுப்பினர்கள் மற்றும் அங்கத்துவம் பெற்ற புதிய தமிழ் உறுப்பினர்கள்

நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் மூத்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் தமது பாராளுமன்ற அங்கத்துவத்தை இழந்துள்ளனர். அந்த வகையில் எம்.ஏ.சுமந்திரன், டக்ளஸ் தேவானந்தா, பிள்ளையான், அங்கஜன் இராமநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன்,சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் மனோ கணேசன் ஆகியோர் மக்களால் நிராகரிக்கப்பட்டு மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிரதானமாக வடக்கு மற்றும் கிழக்கில் பலம்பொருந்திய உறுப்பினர்களாக இருந்த பலர் இன்று பாராளுமன்ற அங்கத்துவத்தை இழந்துள்ளனர். எம்.ஏ.சுமந்திரன் இவர் 2020 ஆம் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலின் ஊடாக […]

Continue Reading

பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் தனது சொந்த மக்களால் டக்ளஸ் தேவானந்தா தாக்கப்பட்டாரா?

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்து காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றமையை எம்மால் அவதானிக்க முடிந்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது தவறானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): நேற்று (14) நடைப்பெற்ற பாராளுமன்றத் தேர்தலின் பின்னணியில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாண மக்களால் தாக்கப்பட்டதாக […]

Continue Reading

வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்திய 2024 பாராளுமன்றத் தேர்தல்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 2024 பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று வெற்றியை தன்வசப்படுத்தியுள்ளது. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 10 ஆவது பாராளுமன்றத்திற்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தலின் வாக்களிப்பு நேற்று (14) இடம்பெற்றது. 1981 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் கீழ், பாராளுமன்றம் கலைக்கப்பட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நவம்பர் 14 திகதி  தேர்தல் தினம் அறிவிக்கப்பட்டு  வர்த்தமானி வௌியிடப்பட்டது. பாராளுமன்றத்திற்கு […]

Continue Reading

பாராளுமன்ற தேர்தலில் 173 ஆசனங்களை NPP பெற்றதா ?

INTRO:  நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 173 ஆசனங்களை பெற்றதாக ஒரு புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link சமூக வலைத்தளங்களில் “சிரமதானம் பண்ண சொன்னா பள்ளத்த தோண்டி புதைச்சி விட்டானுகள்” […]

Continue Reading

பிள்ளையான் தேர்தல் பிரச்சாரத்திற்காக இலவசமாக பியர் வழங்கினாரா? உண்மை என்ன?

INTRO:   2024 பாராளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (2024.11.14) காலை ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றன.  எனவே குறித்த தேர்தலை முன்னிலைப்படுத்தி அரசியல் கட்சிகள் தமது பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. இதன் பின்னணியில் கிழக்கு மாகாண அரசியல் கட்சிகளில் ஒன்றான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்  கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) தேர்தல் பிரச்சார ஸ்ட்டிக்கர் ஒட்டப்பட்ட பியர் கேன்களுடனான படத்துடன் கூடிய பதிவொன்று சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றது. குறித்த தகவலின் […]

Continue Reading

இதயத்தில் பிரச்சினை உள்ள குழந்தைகளுக்கு ஒரு வாரத்திற்குள் இலவச அறுவை சிகிச்சை என கராப்பிட்டிய வைத்தியசாலை அறிவிப்பா?

INTRO:  இதயத்தில் பிரச்சினை உள்ள குழந்தைகளுக்கு ஒரு வாரத்திற்குள் இலவச அறுவை சிகிச்சை என கராப்பிட்டிய வைத்தியசாலை அறிவித்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “ கராப்பிட்டிய வைத்தியசாலையின் அறிவிப்பு இதயத்தில் பிரச்சினை […]

Continue Reading

திரிபோஷ நிறுவனத்தை மூடும் தீர்மானம் தொடர்பான உண்மை என்ன?

INTRO:  பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசாங்கம் சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் விடயங்கள் தொடர்பில் உரிய விதத்திலான ஆய்வுகளை மேற்கொள்ளாமல் வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிடுவதால்   தவறான தகவல்கள் சமூகத்தில் பரப்பப்படுகின்றன. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): திரிபோஷா நிறுவனத்தை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை! எனும் தலைப்பில் சமூக ஊடகங்களின் ஊடாக […]

Continue Reading

டொனால்ட் ட்ரம்பின் வெற்றியை தொடர்ந்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே சங் திரும்ப அழைக்கப்பட்டாரா?

INTRO:  அமெரிக்க தூதுவரை இலக்கு வைத்து சமூக ஊடகங்களில் பல்வேறு தவறான வதந்திகள் பரவி வருகின்றன. டொனால்ட் ட்ரம்பின் வெற்றியுடன் இலங்கையில் சமூக ஊடகங்களின் மூலம் ஜூலி ஜே சங் தொடர்பாக, பொய் பிரசாரங்கள் பரவி வருகின்றன. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): X Link  | Archived […]

Continue Reading

“சுமந்திரனுக்கு 120 கோடி ரூபாய் வழங்கப்பட்டது ” என்ற செய்தியின் உண்மைத் தன்மை என்ன?

INTRO:   தேர்தல் காலப்பகுதியில் தவறான தகவல்கள் பிரச்சார நோக்கில் பரப்பப்படுகின்றன.  யாழ்ப்பாணத்தின் பிரபல பத்திரிகையான உதயன் பத்திரிகையின் வெளியீட்டை ஒத்த வடிவமைப்புடன்   ” போர்க்குற்ற விசாரணையில் மகிந்தவைக் காப்பாற்றுவதற்காக , சுமந்திரனுக்கு  120 கோடி வழங்கப்பட்டது  ” எனும் செய்தி வெளியிடப்பட்டு,  சமூக வலைத்தளங்களில்  பகிரப்படுகிறது. இந்த செய்தியின் உண்மைத்தன்மை தொடர்பான தேடலில் fact crescendo நிறுவனம் ஈடுபட்டது. முடிவில், இச்செய்தி போலியானது என்று உறுதிப்படுத்தப்பட்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook […]

Continue Reading

இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது என்பது பற்றி தெளிவின்றி உள்ளீர்களா?

பாராளுமன்றத் தேர்தலில் எவ்வாறு சரியான முறையில் வாக்களிப்பது தொடர்பில் மக்களை தெளிவுப்படுத்தும் விதத்தில் நாம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு இம்முறை பாராளுமன்றத் தேர்தலின் போது பொலன்னறுவை, மொனராகலை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களின் வாக்குச்சீட்டுக்கள் ஒரே நிரலில் காணப்படுகின்றன மாதிரி படம் E ஏனைய மாவட்டங்களின் வாக்குச்சீட்டுக்கள் இரண்டஜ நிரல்களாக அச்சிடப்பட்டுள்ளன மாதிரி படம் இதுகுறித்து தேர்தல்கள் ஆணைக்குழு வெளியியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு வாக்களிக்கும் சரியான முறை கட்சிக்கு வாக்களித்தல் விருப்பு வாக்குகளை வழங்கும் முறை மாதிரி […]

Continue Reading

பாராளுமன்ற தேர்தலில் ஆசனங்கள் எவ்வாறு வழங்கப்படுகிறது

பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ள 225 உறுப்பினர்களுக்காக இம்முறை பாராளுமன்ற தேர்தலில் 8888 பேர் போட்டியிடுகின்றனர். நீங்கள் வழங்கும் வாக்குகளின் மூலம் பாராளுமன்றத்திற்கு எவ்வாறு  உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர் என்பது தொடர்பில் விரிவாக பார்க்கலாம். முதலில் நீங்கள் வழங்கிய வாக்குகளில் நிராகரிக்கப்பட்ட அல்லது செல்லுபடியற்ற வாக்குகள் நீக்கப்படும். செல்லுபடியற்ற வாக்குகள் நீக்கப்பட்டதன் பின்னர் எஞ்சிய வாக்குகள் கிடைக்கப்பெற்ற வாக்கு வீதம் என அழைக்கப்படும். குறித்த வாக்குகளே பாராளுமன்ற உறுப்பினர்களின் தெரிவிற்காக கணக்கிடப்படும் வாக்குகள் ஆகும் உதாரணமாக – ஒரு […]

Continue Reading

முக்கிய மத வழிப்பாட்டுத் தலங்களில் பாதுகாப்பு நீக்கப்பட்டதா..?

INTRO:  தற்போதைய அரசாங்கம் பிரதான மத வழிபாட்டுத் தலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்பை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சமூக ஊடங்களிலும் வேறு ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தன இது தொடர்பான உண்மைத் தன்மையை கண்டறிய நாம் நடவடிக்கை எடுத்தோம். குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): மத வழிபாட்டுத் […]

Continue Reading

10 வருடங்களுக்கு மேலாக ஒரே தேசிய பாடசாலையில் பணியாற்றிய 9000 ஆசிரியர்கள் அடுத்த வருடம் இடமாற்றம் செய்யப்படவுள்ளனரா?

INTRO:  பாடசாலை ஆசிரியர்களின் ஆசிரியர் இடமாற்றங்கள் கல்விச் செயல்முறையை மிகவும் திறம்பட மேற்கொள்ளவும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை உறுதிப்படுத்தவும் மேற்கொள்ளப்படுகின்றது. இந்த இடமாற்றங்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பாக கடந்த காலங்களில் மிகவும் சர்ச்சையான சூழ்நிலை காணப்பட்டது. இதனிடையே ஆசிரியர்கள் இடமாற்றம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல்களின் உண்மை தன்மையை ஆராய நாம் நடவடிக்கை எடுத்தோம். குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது […]

Continue Reading

ஹிரு தொலைகாட்சிக்கு அரசாங்கத்தினால் சிவப்பு அறிவித்தலா?

INTRO:  சில முக்கிய ஊடகங்களின் தவறான செய்தி அறிக்கைகளால் பலர் தவறான தகவல்களை உண்மை என்று கருதுகின்றனர். அவ்வாறான செய்திகளை வெளியிட்ட ஊடக அமைப்பு தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியான மற்றுமொரு தகவலின் உண்மைத்தன்மையை கண்டறிய நாம் நடவடிக்கை எடுத்தோம். குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  […]

Continue Reading

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மத்திய குழுவின் தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டாரா?

INTRO:  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மத்திய குழுவின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே. எம். ஏ . ரஸாக்(ஜவாத்) நீக்கப்பட்டார் என்ற செய்தி, சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. இந்த தகவல் பொய்யானது என்பதை, எமது அணியால் கண்டறியப்பட்டுள்ளது  தகவலின் விவரம் (What is the claim): Facebook Link   | Archived Link  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மத்திய குழுவின் தலைவர் கே. எம். […]

Continue Reading

அரியநேந்திரன் பயங்கரவாதத் தடுப்புபிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டாரா?

பயங்கரவாதத் தடுப்பு பிரிவால் பாக்கியச்செல்வம்  அரியநேந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தனர் என்ற செய்தி வெளியாகியிருந்தமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): website Link   | Archived Link ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்ப்பாளராக  போட்டியிட்ட அரியநேந்திரன், பயங்கரவாதத் தடுப்புப்பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். என்ற செய்தி, Tamil  […]

Continue Reading

நோர்தன் யுனிவர்சிட்டி  25000 மாணவர்களுக்கு இலவசகல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழங்குகிறதா? 

SLIIT northern பல்கலைக்கழகத்தின் தலைவர் இந்திரகுமார் பத்மநாதன் , ஏழ்மை நிலையில் உள்ள இலங்கையின் 25000 மாணவர்களுக்கு,  இலவச கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழங்குவதாக, சமூக வலைதளங்களில் பரவும் செய்தியொன்றை அவதானிக்க  முடிகிறது.   குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது போலியான என்று, ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link   | Archived Link  சமூகவலைத்தளங்களில் ” இலங்கையில் படிக்க […]

Continue Reading

சத்தியலிங்கம் ஊழல் பெருச்சாளி என சிவமோகன் தெரிவித்த குற்றச்சாட்டு என பரவும் தகவல் உண்மையா?

சத்தியலிங்கம் ஊழல் பெருச்சாளி என சிவமோகன் தெரிவித்த குற்றச்சாட்டு என ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link சமூக வலைத்தளங்களில் “வட மாகாண சபையில்.பதவி பறிக்கப்பட்ட ஊழல் பெருச்சாளி, முன்னாள் மாகாண அமைச்சர் சத்தியலிங்கம் […]

Continue Reading

அரச ஊழியரை தாக்கிய அங்கஜன்இராமநாதன் ; உண்மை தெரியுமா ?

அரச ஊழியரை தாக்கிய அங்கஜன் இராமநாதன் என ஒரு வீடியோ சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link சமூக வலைத்தளங்களில் “பா. உ என்றால் அரச உத்தியோகத்தரை கன்னத்தில் அறையலாமா? Corrupted Jaffna MP Angajan Ramanathan […]

Continue Reading

பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியில் அஷேன் சேனாரத்ன போட்டியா ?

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியில் அஷேன் சேனாரத்ன போட்டி என சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Tiktok Link  | Archived Link சமூக வலைத்தளங்களில் “Ashen Sri Lanka AKD NPP #npp #akd #forupage #friends #youtubers […]

Continue Reading

ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்தத் தலைவர் பதவி ரணிலுக்கா ?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் பதிவி கிடைக்கவுள்ளதாக சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link சமூக வலைத்தளங்களில் “ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்தத் தலைவர் பதவி ரணிலுக்கு!. ” கடந்த மாதம் […]

Continue Reading

அரச ஊழியர்களுக்கு 2025 ஆண்டிலிருந்து சம்பள உயர்வு தொடர்பாக புதிய அரசாங்கத்தினால் அறிவிப்பா..?

அரச ஊழியர்களுக்கு 2025 ஆண்டிலிருந்து சம்பள உயர்வு தொடர்பாக புதிய அரசாங்கத்தினால் அறிவிப்பு என சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link சமூக வலைத்தளங்களில் “அரச ஊழியர்களுக்கு 2025 ஆண்டிலிருந்து சம்பள உயர்வு” கடந்த மாதம் 25 […]

Continue Reading

கண்காணிப்பு பணிக்காக 25 மாவட்டங்களுக்கு தலா 10 பேர் விதம் ஜனாதிபதியால் நியமனம் செய்யப்பட்டனரா?

நாட்டின் 25 மாவட்டங்களுக்கு தலா 10 பேர் விதம் ஜனாதிபதியின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் நியமனம் என சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link சமூக வலைத்தளங்களில் “சம்பவம் சிறப்பு 🔥🔥🔥 நாட்டின் 25 நிருவாக மாவட்டங்களுள் […]

Continue Reading

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வெற்றியால் கண்கலங்கிய அவரின் தந்தை என பரவும் வீடியோ உண்மையா?

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வெற்றியால் கண்கலங்கிய அவரின் தந்தை என ஒரு வீடியோ சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link சமூக வலைத்தளங்களில் “தனது மகன் அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற செய்தியை […]

Continue Reading

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் விரைவில் சேர்ந்து பயணிப்போம் என ஹரீஸ் தெரிவித்தாரா?

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் விரைவில் சேர்ந்து பயணிப்போம் என ஹரீஸ் தெரிவித்தாக ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link சமூக வலைத்தளங்களில் “ஜனாதிபதி அனுரவுக்கு வாழ்த்து தெரிவித்த ஹரிஷ்  ” இம் மாதம் […]

Continue Reading

ஜனாதிபதி தேர்தலில் 50.30% பெற்று அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் உள்ளாரா?

ஜனாதிபதி தேர்தலில் அனுர குமார திசாநாயக்க 50.30% வாக்குகளை பெற்றுள்ளதாக ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link சமூக வலைத்தளங்களில் “*முழுமையான தேர்தல் முடிவுகள்* *💫அநுர – 7017058 (50.30%)* *💫சஜித் – 5083968 […]

Continue Reading

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாட்டை விட்டு சிலர் தப்பி சென்றதாக பரவும் தகவல் உண்மையா..?

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் சில வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் நாட்டை விட்டு தப்பி சென்றதாக ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link சமூக வலைத்தளங்களில் “அமெரிக்காவுக்கு பசில், பூட்டானுக்கு கோதா, ஜப்பானுக்கு இராஜ், கொரியாவுக்கு உமாண்தா. […]

Continue Reading

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ரவி மற்றும் கிரியெல்ல நாட்டை விட்டு சிலர் தப்பி சென்றதாக பரவும் தகவல் உண்மையா..?

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ரவி கருணாநாயக்க மற்றும் லக்ஷ்மன் கிரியெல்ல நாட்டை விட்டு தப்பி சென்றதாக ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link சமூக வலைத்தளங்களில் “அமெரிக்காவுக்கு பசில், பூட்டானுக்கு கோதா, ஜப்பானுக்கு இராஜ், […]

Continue Reading

சஜித் பிரேமதாசவிற்கு பொது பல சேனா கட்சியின் ஆதரவு என பரவும் தகவல் உண்மையா..?

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவிற்கு பொது பல சேனா கட்சியின் ஆதரவு என ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link சமூக வலைத்தளங்களில் “ஒட்டுமொத்த இனவாதிகளையும் ஒன்று சேர்த்த சஜித் […]

Continue Reading

ஒன்றரை வருடத்திற்குள் நாடு கவிழ்ந்தால் ஆட்சியை துறப்பதாக அனுரகுமார அறிவித்தாரா?

ஜனாதிபதி வேட்பாளர்கள் பங்கேற்கும் அரசியல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சமூகத்தில் இன்று பல வழிகளில் விவாதிக்கப்படுகின்றன. அவ்வாறானதொரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிரதான வேட்பாளர்களில் ஒருவரான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்ததாக கூறப்படும் கருத்தொன்றின்  உண்மைத்தன்மையை ஆராய நாம் நடவடிக்கை எடுத்தோம். குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link சமூக வலைத்தளங்களில் […]

Continue Reading

வாக்களிக்கப்பதற்கு பயன்படுத்த முடியுமான அடையாள அட்டைகள்

∘ ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டை ∘ செல்லுபடியான கடவுச்சீட்டு ∘ செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம் ∘ ஓய்வூதியர் அடையாள அட்டை ∘ சமூக சேவைத் திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரஜைகள் அடையாள அட்டை ∘ ஆட்களைப் பதிவு செய்கின்ற ஆணையாளரினால் விநியோகிக்கப்பட்டுள்ள மத குருமார் அடையாள அட்டை ∘ மாவட்ட பிரதி  உதவி தேர்தல் ஆணையாளர்களினால் வெளியிடப்பட்டுள்ள தற்காலிக அடையாள அட்டைகள் ∘ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தினால் தேசிய அடையாள […]

Continue Reading

தேர்தல் குற்றங்கள் என்ன தெரியுமா..?

இலங்கை தண்டனைகள் சட்டக்கோவையின் பாராளுமன்றச் சட்டங்களில் அனைத்து தேர்தல்களிலும் இழைக்கப்படும் குற்றங்கள் தொடர்பான விடயங்கள்  குறிப்பிடப்பட்டுள்ளன.  இச்சட்டங்கள் அனைத்துத் தேர்தல்களுக்கும் பொதுவான சட்டங்களாகும்.   குறிப்பிடப்பட்டுள்ள சட்டங்கள் ஒவ்வொரு பிரிவிற்கும் இணங்க இலக்கங்கள் மாறுபட்டிருக்கும்.  இந்த தேர்தல் குற்றங்கள் முக்கிய பல பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளன. தேர்தல் குற்றங்கள் பிறிதொரு நபருக்காக அல்லது பிறிதொரு நபராகத் தோற்றி வாக்களிக்கச் செல்லல் மற்றும் வாக்குச் சீட்டினை சேதப்படுத்துதல், வாக்குச் சீட்டினை மாற்றியமைத்தல்,  வாக்குச் சீட்டினைக் காட்டுதல் போன்ற குற்றங்களைப் புரிதல்  என்பன […]

Continue Reading

வெளிநாடு சென்றிருந்து வருகை தந்துள்ள வாக்காளர் ஒருவருக்கு வாக்களிக்கின்ற போது தடங்கல்கள் ஏற்படுவதைத் தவிர்த்துக் கொள்வது எப்படி?

ஒவ்வொரு வாக்காளருக்கும் தபால்மூலம் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையொன்றை அனுப்பி வைக்கின்றபோது வெளிநாடு சென்றுள்ள வாக்காளர்கள் என அறிக்கையிடப்பட்டிருப்பின் “வெளிநாடு சென்ற வாக்காளர் ஒருவர் என அறிவிக்கப்பட்டுள்ளது” என்ற குறிப்பு இடப்பட்டிருக்கும். இத்தகைய குறிப்புக்களில் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையில் இடப்பட்டுள்ள வாக்காளர்கள் வெளிநாட்டில் இருந்து வருகை தந்திருப்பின் வாக்களிப்பு நிலையத்திற்குச் செல்கின்ற போது தனது செல்லுபடியான வெளிநாட்டுக் கடவுச்சீட்டினை எடுத்துச் செல்லல் அவசியமாகும். ஏனெனில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்ததாக நிரூபிப்பதற்கு அது பயனுள்ள ஒன்றாதலால் ஆகும். வெளிநாட்டிலிருந்து வருகை […]

Continue Reading