மன்னாரிலுள்ள எண்ணெய் களங்களிலிருந்து விரைவில் எண்ணெய் கிடைக்கும் என அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்தாரா?

இலங்கையில் கனிம எண்ணெய் ஆராய்ச்சியானது தற்போது ஆரம்பமான ஒன்றல்ல. 1974ஆம் ஆண்டு, சோவியத் ஒன்றியம் மன்னார் தீவில் பேசாலை பகுதியைச் சுற்றிய பகுதிகளில் எண்ணெய் ஆய்வுகளை ஆரம்பித்தது. 2011ஆம் ஆண்டு மன்னார் படுகையில் செயலில் உள்ள கனிம எண்ணெய் அமைப்பு இருப்பது அறிவியல் ரீதியாக வெளிப்படுத்தப்பட்டாலும், நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் எண்ணெய் உற்பத்தி இன்னும் ஒரு கனவாகவே இருந்து வருகிறது. எனினும், 2025ஆம் ஆண்டு மன்னார் எண்ணெய் களங்களில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி […]

Continue Reading

எரிபொருளுக்கான QR குறியீட்டை பெறும் இணையதளம் குறித்து அவதானமாக செயற்படுங்கள்!

மத்திய கிழக்கில் போர் நிலைமை தீவிரமடைந்துள்ள நிலையில், தற்போதைய எரிபொருள் பயன்பாட்டை முகாமைத்துவம் செய்வதற்காக QR முறையின் மூலம் எரிபொருள் பெறும் ஒரு திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த QR குறியீட்டை பெறும் இணையதளம் என தெரிவித்து இணைப்பொன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிகின்றது. எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Archived Link QR முறையின் மூலம் எரிபொருள் […]

Continue Reading

நெதன்யாகுவின் கையில் ஆறு விரல்கள் என பகிரப்படும் தகவலின்  உண்மை என்ன?

ஈரான் – இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையில் பலத்த போர் சூழல் நிலவி வரும் நிலையில் பல்வேறு காணொளிகள், புகைப்படங்கள் என்பன இந்த போர் நிலையுடன் தொடர்புபடுத்தி தவறாக வழிநடுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிகின்றது. அந்தவகையில் தற்போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இறந்துவிட்டதகவும் அவர் கடந்த தினத்தில் நேரலையில் பேசிய காணொளி செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டது என்றும் அதில் அவரது கையில் ஆறுவிரல்கள் காணப்பட்டதாகவும் தெரிவித்து ஒரு தகவல் […]

Continue Reading

IRIS Bushehr கப்பலில் 300 குழந்தைகள் இருந்ததாக பகிரப்படும் தகவல் உண்மையா?

இலங்கை கடல் எல்லைக்கு அருகில் உள்ள தனிச்சிறப்பு பொருளாதார கடல் மண்டலத்திற்குள் வந்த மற்றுமொரு ஈரான் கப்பலில் 300 குழந்தைகள் இருப்பதாக தெரிவித்து சமூக ஊடகஙடகளில் பல தகவல்கள் பகிரப்பட்டு வந்தமையை காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link கு𝗝𝗨𝗦𝗧 𝗜𝗡: இலங்கை கடல் எல்லைக்கு அருகில் உள்ள தனிச்சிறப்பு பொருளாதார கடல் மண்டலத்தில் […]

Continue Reading

எதிரி விமானங்களைத் ஏமாற்ற ஈரான் 3D படங்களைப் பயன்படுத்துகிறதா?

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தின் பின்னணியில், ஈரான் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஹெலிகாப்டர் மற்றும் F-14 போர் விமானங்களின் படங்களை நிலத்திலேயே முப்பரிமாண (3D) வடிவில் வரைந்து, அவை உண்மையான விமானங்கள் போலத் தோன்றுமாறு செய்து அவற்றை போர்த் தந்திரமாக பயன்படுத்தியதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மையை கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook […]

Continue Reading

இஸ்ரேல் படையினர் CCTV கேமராக்களை அகற்றுவதாக பகிரப்படும் காணொளியின் உண்மை என்ன? 

ஈரான் – இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையில் நிலவும் போர் பதற்மானது மத்திய கிழக்கு நாடுகளையும் தற்போது தாக்கி வருகிறகு இந்த சூழலில் போரை மையப்படுத்தி பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை அவதானிக்க முடிகின்றது. அந்தவகையில் இஸ்ரேலின் ரகசியங்கள் கசியாமல் இருப்பற்காக, அந்நாட்டு குடியிருப்புகளில் பொருத்தப்பட்டுள்ளCCTV கண்காணிப்புக் கேமராக்களை அந்நாட்டுப் படையினர் அதிரடியாக அகற்றி வருவதாக தெரிவித்து ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிகின்றது. எனவே இதன் உண்மையை அறிய ஃபேக்ட் […]

Continue Reading

போர் பதற்றம் காரணமாக இலங்கையை பயணம் செய்ய ஆபத்தான நாடாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளதா?

அமெரிக்காவின் தாக்குதலுக்கு உள்ளான ஈரான் கப்பலில் இருந்த பயணிகளை மீட்க விரைவாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை சர்வதேச அளவில் கவனத்தை பெற்றது. இதற்காக பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்தனர். அதேவேளை, சிலர் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிக்கையில், இந்த நடவடிக்கையின் காரணமாக அமெரிக்காவை ஆதரிக்கும் ஏனைய நாடுகளிடமிருந்து இலங்கைக்கு தேவையற்ற பிரச்சினைகள் உருவாகலாம் என்று கூறப்பட்டது. அந்தவகையில், மத்திய கிழக்கில் நிலவும் போர்முனை நிலைமைகளில் நேரடியாக ஈடுபடாத இலங்கையை, மத்திய கிழக்கு நாடுகளுடன் சேர்த்து பயணிப்பதற்கு ஆபத்திற்குறிய நாடாக குறிப்பிடப்பட்டதாக […]

Continue Reading

சவுதி நாட்டிலிருந்து மக்கள் வெளியேறுவதாக பகிரப்படும் காணொளி உண்மையா?

இஸ்ரேல் – அமெரிக்கா மற்றும் ஈரான் இடையில் நிலவும் இந்த போர் நிலைமையானது மத்திய கிழக்கு நாடுகளையும் பெரிதும் பாதித்துள்ளது. அந்தவகையில் மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள அமெரிக்க தளங்களை நோக்கி ஈரான் பாரிய தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் சவுதி அரேபியாவில் இடம்பெறும் தாக்குதல்கள்கள் காரணமாக சவுதி நாட்டிலிருந்து மக்கள் வெளியேறுவதாக தெரிவித்து காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link  […]

Continue Reading

புர்ஜ் கலீஃபா தாக்கப்பட்டதாக பகிரப்படும் காணொளி உண்மையா?

அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையில் நிலவும் போர் பதற்றம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் மத்திய கிழக்கு நாடுகள் மீதும் தொடர் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  அதனை மையமாகக் கொண்டு பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுவரும் நிலையில்,துபாயில் அமைந்துள்ள உலகின்  மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா மீது 1,800 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட் […]

Continue Reading

தப்பியோடும் இஸ்ரேலிய வீரர்கள் என பகிரப்படும் காணொளி தொடர்பான உண்மை என்ன?

அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரான் இடையிலான பதற்றம் நேரடி முழு போராக மாறவில்லை என்றாலும், அதன் தாக்கம் மத்திய கிழக்கு நாடுகளில் பல வழிகளில் உணரப்படுகிறது. அதனடிப்படையில் தற்போது, ஏவுகணை வீச்சிலிருந்து தப்பிக்க போராடும் இஸ்ரேலிய படை வீரர்கள் என தெரிவிக்கப்பட்டு ஒரு காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மையை கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): […]

Continue Reading

MAS Holdings அதன் சில தொழிற்சாலைகளை மூட தீர்மானம் செய்து, 26,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்ததா?

MAS Holdings குழுமம் நாட்டை விட்டு வெளியேறுகிறது, அதன் செயல்பாடுகளை நிறுத்துகிறது என்ற தலைப்புகளில் அவ்வப்போது சமூக ஊடகங்கள் வழியாக பல தகவல்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. அத்தகைய சூழலில், அந்த குழுமத்திற்குச் சொந்தமான ஆடை உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட மெத்லிய தொழிற்சாலை மற்றும் MAS Holdings தொடர்பாக சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளியாகிவரும் பதிவுகள் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook […]

Continue Reading

நெலுவையில் கணவன் தன் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ததன் பின்னணியில் உள்ள உண்மை என்ன?

உறுதிப்படுத்தப்படாத மற்றும் ஊகங்களின் அடிப்படையில் அமைந்த சில தகவல்கள் வெளியிடப்படுவதன் மூலம் சமூகத்தில் பாரிய குழப்பநிலைகள் ஏற்படுகின்றன. அத்தகைய தகவல் வெளியீடுகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள் உள்ளிட்ட உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. எனினும், மனிதக் கொலை போன்ற  சம்பவங்கள் தொடர்பில் முறையாக உறுதிப்படுத்தப்படாத செய்திகளை பிரதான ஊடகங்களே வெளியிடும் சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன. மேலும், அவை அவர்களின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்குகளில் பகிரப்படும் போது, அவை மிகவும் வேகமாக சமூகத்தில் பரவுகின்றன என்பதும் […]

Continue Reading

இந்தியர்கள் தற்போது விசா மற்றும் ETA இன்றி இலங்கைக்கு வரலாமா?

இந்தியப் பிரஜைகள், இனி இலங்கைக்கு பயணம் செய்ய விசா அல்லது மின்னணு பயண அனுமதி (Electronic Travel Authorisation – ETA) பெற வேண்டிய அவசியமில்லை என்ற தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது. எனவே இந்த நடைமுறை தொடர்பான தெளிவுபடுத்தலை வழங்க ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் முன்வந்தது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் விசா தேவையில்லை. ETA தேவையில்லை. இலங்கைக்கு வரவேற்கிறோம்!  இந்தியப் […]

Continue Reading

ஜனாதிபதி அதிசொகுசு வாகனத்தில் யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்தாரா? 

ஜனாதிபதியின் யாழ் விஜயத்தின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்களுடன் பகிரப்படுகின்றன. எனவே அது தொடர்பான உண்மையை கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் வடக்கு பயணத்திற்காக புதிய சொகுசு வாகனம் ஒன்று பயன்படுத்தப்பட்டதாகக் கூறி, சில புகைப்படங்களுடன் இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி பாதுகாப்பிற்கு நடுவில் வெள்ளை நிற சொகுசு […]

Continue Reading

எப்ஸ்டீனால் கடத்தப்பட்ட துருக்கிய சிறுவன் என பகிரப்படும் காணொளியின் உண்மை என்ன?

எப்ஸ்டீன் கோப்புகள் வெளியானதை தொடர்ந்து பல சர்ச்சையான மற்றும் போலியான தகவல்கள் பகிரப்பட்டு வரும் நிலையில் தற்போது, எப்ஸ்டீனால் கடத்தப்பட்ட துருக்கிய சிறுவன் துன்புறுத்தப்படும் காணொளி என தெரிவிக்கப்பட்டு பகிரப்பட்டு வருகிறது. எனவே இது தொடர்பான உண்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் #EpsteinFiles  ஊடக அறிக்கைகளின்படி, எப்ஸ்டீன் வழக்கிலிருந்து கசிந்த காணொளிகளில் ஒன்றில், எப்ஸ்டீனால் […]

Continue Reading

இந்திய பிரதமர் மோடி, எப்ஸ்டீனுடன் இருக்கும் புகைப்படம் உண்மையா?

2026 ஜனவரி 30ஆம் திகதியன்று அமெரிக்க நீதித்துறை (DOJ) “எப்ஸ்டீன் கோப்புகள்” (Epstein files) என அழைக்கப்படும், ஜெஃப்ரீ எப்ஸ்டீனைச் சேர்ந்த மில்லியன் கணக்கான ஆவணங்களை வெளியிட்டதைத் தொடர்ந்து, பல தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தற்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஒரு பெண், ஜெஃப்ரீ எப்ஸ்டீனுடன் இணைந்து எடுத்துக் கொண்டதாக தெரிவிக்கப்படும் புகைப்படமொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. எனவே இது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை […]

Continue Reading

2025 ஆம் ஆண்டிற்கான ஊழல் உணர்வு குறியீடுகளின் படி, இலங்கையின் இடம் என்ன?

World Economics நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டதாகக் கூறப்படும் ஒரு ஊழல் உணர்வு அறிக்கையை மேற்கோள் காட்டி, ஊழலுக்கு எதிராக கடுமையான கொள்கையுடன் ஆட்சிக்கு வந்த அரசின் கீழும், 2025 ஆம் ஆண்டிற்கான ஊழல் உணர்வு குறியீட்டின் (Corruption Perceptions Index) படி, இலங்கை 24.7 என்ற மிகக் குறைந்த மதிப்பெண்ணை பெற்றுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது.  அதுகுறித்து ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் மேற்கொண்ட ஆய்வறிக்கை பின்வருமாறு தகவலின் விவரம் (What is the claim): Facebook […]

Continue Reading

எப்ஸ்டீன், கொவிட் தொற்றுநோய் ஒத்திகை தொடர்பில் பில் கேட்ஸுடன் உண்மையில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளாரா?

ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகள் (Epstein Files) மூலம் 2017 ஆம் ஆண்டில் பில் கேட்ஸ், ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் வைரஸ் வகையை அடிப்படையாகக் கொண்ட ஒரு தொற்றுநோய் ஒத்திகை குறித்து விவாதித்ததாகக் கூறி சமூக ஊடகங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link எப்ஸ்டீன் – பில் கேட்ஸ் மின்னஞ்சல் கசிவு! […]

Continue Reading

‘வாய்ப்பு கிடைத்தால் சஜித்துடன் இணைவோம்’ என நாமல் தெரிவித்தாரா?

வாய்ப்பு கிடைத்தால் சஜித்துடன் இணைவோம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்ததாக தகவலொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் இலங்கையில் அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இணைவீர்களா என்ற கேள்விக்கு, “வாய்ப்பு கிடைத்தால் பார்ப்போம்” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய […]

Continue Reading

Cow & Gate குழந்தை பால்மா உலகளாவிய ரீதியில் மீளப்பெறப்பட்டுள்ளதா?

நெஸ்லே குழந்தை பால்மா வகைகளில் விஷப்பொருட்கள் அடங்கியுள்ளதாக கூறப்பட்டதை தொடர்ந்து, 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகளாவிய ரீதியில் நெஸ்லே குழந்தை பால்மா தயாரிப்புகள் மீளப்பெறப்பட்டன. அதனைத் தொடர்ந்து சில நாட்களிலேயே, டானோன் நிறுவனத்திற்கு உட்பட்ட மற்றொரு குழந்தை பால்மா தயாரிப்பான Aptamil தொடர்பாகவும் ஒரு செய்தி வெளியானது. இதற்கிடையில், தற்போது Cow & Gate மற்றும் Nutrilon ஆகிய தயாரிப்புகளும் உலகளாவிய ரீதியில்  மீளப்பெறப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்ட தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. எனவே […]

Continue Reading