MAS Holdings அதன் சில தொழிற்சாலைகளை மூட தீர்மானம் செய்து, 26,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்ததா?

MAS Holdings குழுமம் நாட்டை விட்டு வெளியேறுகிறது, அதன் செயல்பாடுகளை நிறுத்துகிறது என்ற தலைப்புகளில் அவ்வப்போது சமூக ஊடகங்கள் வழியாக பல தகவல்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. அத்தகைய சூழலில், அந்த குழுமத்திற்குச் சொந்தமான ஆடை உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட மெத்லிய தொழிற்சாலை மற்றும் MAS Holdings தொடர்பாக சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளியாகிவரும் பதிவுகள் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook […]

Continue Reading

நெலுவையில் கணவன் தன் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ததன் பின்னணியில் உள்ள உண்மை என்ன?

உறுதிப்படுத்தப்படாத மற்றும் ஊகங்களின் அடிப்படையில் அமைந்த சில தகவல்கள் வெளியிடப்படுவதன் மூலம் சமூகத்தில் பாரிய குழப்பநிலைகள் ஏற்படுகின்றன. அத்தகைய தகவல் வெளியீடுகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள் உள்ளிட்ட உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. எனினும், மனிதக் கொலை போன்ற  சம்பவங்கள் தொடர்பில் முறையாக உறுதிப்படுத்தப்படாத செய்திகளை பிரதான ஊடகங்களே வெளியிடும் சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன. மேலும், அவை அவர்களின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்குகளில் பகிரப்படும் போது, அவை மிகவும் வேகமாக சமூகத்தில் பரவுகின்றன என்பதும் […]

Continue Reading

இந்தியர்கள் தற்போது விசா மற்றும் ETA இன்றி இலங்கைக்கு வரலாமா?

இந்தியப் பிரஜைகள், இனி இலங்கைக்கு பயணம் செய்ய விசா அல்லது மின்னணு பயண அனுமதி (Electronic Travel Authorisation – ETA) பெற வேண்டிய அவசியமில்லை என்ற தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது. எனவே இந்த நடைமுறை தொடர்பான தெளிவுபடுத்தலை வழங்க ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் முன்வந்தது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் விசா தேவையில்லை. ETA தேவையில்லை. இலங்கைக்கு வரவேற்கிறோம்!  இந்தியப் […]

Continue Reading

ஜனாதிபதி அதிசொகுசு வாகனத்தில் யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்தாரா? 

ஜனாதிபதியின் யாழ் விஜயத்தின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்களுடன் பகிரப்படுகின்றன. எனவே அது தொடர்பான உண்மையை கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் வடக்கு பயணத்திற்காக புதிய சொகுசு வாகனம் ஒன்று பயன்படுத்தப்பட்டதாகக் கூறி, சில புகைப்படங்களுடன் இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி பாதுகாப்பிற்கு நடுவில் வெள்ளை நிற சொகுசு […]

Continue Reading

எப்ஸ்டீனால் கடத்தப்பட்ட துருக்கிய சிறுவன் என பகிரப்படும் காணொளியின் உண்மை என்ன?

எப்ஸ்டீன் கோப்புகள் வெளியானதை தொடர்ந்து பல சர்ச்சையான மற்றும் போலியான தகவல்கள் பகிரப்பட்டு வரும் நிலையில் தற்போது, எப்ஸ்டீனால் கடத்தப்பட்ட துருக்கிய சிறுவன் துன்புறுத்தப்படும் காணொளி என தெரிவிக்கப்பட்டு பகிரப்பட்டு வருகிறது. எனவே இது தொடர்பான உண்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் #EpsteinFiles  ஊடக அறிக்கைகளின்படி, எப்ஸ்டீன் வழக்கிலிருந்து கசிந்த காணொளிகளில் ஒன்றில், எப்ஸ்டீனால் […]

Continue Reading

இந்திய பிரதமர் மோடி, எப்ஸ்டீனுடன் இருக்கும் புகைப்படம் உண்மையா?

2026 ஜனவரி 30ஆம் திகதியன்று அமெரிக்க நீதித்துறை (DOJ) “எப்ஸ்டீன் கோப்புகள்” (Epstein files) என அழைக்கப்படும், ஜெஃப்ரீ எப்ஸ்டீனைச் சேர்ந்த மில்லியன் கணக்கான ஆவணங்களை வெளியிட்டதைத் தொடர்ந்து, பல தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தற்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஒரு பெண், ஜெஃப்ரீ எப்ஸ்டீனுடன் இணைந்து எடுத்துக் கொண்டதாக தெரிவிக்கப்படும் புகைப்படமொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. எனவே இது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை […]

Continue Reading

2025 ஆம் ஆண்டிற்கான ஊழல் உணர்வு குறியீடுகளின் படி, இலங்கையின் இடம் என்ன?

World Economics நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டதாகக் கூறப்படும் ஒரு ஊழல் உணர்வு அறிக்கையை மேற்கோள் காட்டி, ஊழலுக்கு எதிராக கடுமையான கொள்கையுடன் ஆட்சிக்கு வந்த அரசின் கீழும், 2025 ஆம் ஆண்டிற்கான ஊழல் உணர்வு குறியீட்டின் (Corruption Perceptions Index) படி, இலங்கை 24.7 என்ற மிகக் குறைந்த மதிப்பெண்ணை பெற்றுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது.  அதுகுறித்து ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் மேற்கொண்ட ஆய்வறிக்கை பின்வருமாறு தகவலின் விவரம் (What is the claim): Facebook […]

Continue Reading

எப்ஸ்டீன், கொவிட் தொற்றுநோய் ஒத்திகை தொடர்பில் பில் கேட்ஸுடன் உண்மையில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளாரா?

ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகள் (Epstein Files) மூலம் 2017 ஆம் ஆண்டில் பில் கேட்ஸ், ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் வைரஸ் வகையை அடிப்படையாகக் கொண்ட ஒரு தொற்றுநோய் ஒத்திகை குறித்து விவாதித்ததாகக் கூறி சமூக ஊடகங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link எப்ஸ்டீன் – பில் கேட்ஸ் மின்னஞ்சல் கசிவு! […]

Continue Reading

‘வாய்ப்பு கிடைத்தால் சஜித்துடன் இணைவோம்’ என நாமல் தெரிவித்தாரா?

வாய்ப்பு கிடைத்தால் சஜித்துடன் இணைவோம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்ததாக தகவலொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் இலங்கையில் அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இணைவீர்களா என்ற கேள்விக்கு, “வாய்ப்பு கிடைத்தால் பார்ப்போம்” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய […]

Continue Reading

Cow & Gate குழந்தை பால்மா உலகளாவிய ரீதியில் மீளப்பெறப்பட்டுள்ளதா?

நெஸ்லே குழந்தை பால்மா வகைகளில் விஷப்பொருட்கள் அடங்கியுள்ளதாக கூறப்பட்டதை தொடர்ந்து, 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகளாவிய ரீதியில் நெஸ்லே குழந்தை பால்மா தயாரிப்புகள் மீளப்பெறப்பட்டன. அதனைத் தொடர்ந்து சில நாட்களிலேயே, டானோன் நிறுவனத்திற்கு உட்பட்ட மற்றொரு குழந்தை பால்மா தயாரிப்பான Aptamil தொடர்பாகவும் ஒரு செய்தி வெளியானது. இதற்கிடையில், தற்போது Cow & Gate மற்றும் Nutrilon ஆகிய தயாரிப்புகளும் உலகளாவிய ரீதியில்  மீளப்பெறப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்ட தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. எனவே […]

Continue Reading

நுகேகொடை Golden Brown Sugar விற்பனை நிலையம் மூடப்பட்டுவிட்டதா?

அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி அவர்களினால் திறந்துவைக்கப்பட்ட Ceylon Golden Brown Sugar விற்பனை நிலையம் திறந்து ஒரு சில மாதங்களிலேயே மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் அரசால் திறக்கப்பட்ட சீனி விற்பனை நிலையம் மூடப்பட்டது. தற்போது அரசால் ” வாயால் மட்டுமே […]

Continue Reading

கோட்டாபய ராஜபக்ஷ துறவற வாழ்க்கையில் ஈடுபட திட்டமிட்டுள்ளாரா?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ துறவற வாழ்க்கையில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய துறவற வாழ்க்கையில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 30 ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் பங்காற்றிய அவர், பதவி […]

Continue Reading

பாராளுமன்றத்தில் அர்ச்சுனா கூறிய வார்த்தை தொடர்பான தெளிவுபடுத்தல்

கடந்த நாட்களில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றத்தில் பேசும் போது தெரிவித்த வார்த்தை சமூக ஊடகங்களில் பாரிய பேசுபொருளாகவே மாறியது.  எனவே அவர் தெரிவித்த விடயம் தொடர்பான தெளிவினை வழங்க ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook| Archived Link கடந்த 20 ஆம் திகதி பாராளுமன்றில் ஆற்றிய உரையில் “புக” என்ற வார்த்தைக்கு உங்கள் மொழியில் வேறு அர்த்தம் இருக்கலாம் ஆனால் தமிழில் “புக“ […]

Continue Reading

வீதியை விட உயர்வாக அமைக்கப்பட்ட கால்வாய் – எஹலியகொடா, கீனகஹவெல வீதியின் உண்மை  நிலை!

எஹலியகொட பகுதியில் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் ஒரு வீதி தொடர்பாக சமீப நாட்களில் சமூகத்தில் கடும் விவாதம் உருவாகியுள்ளது. அந்தச் வீதியின் வடிகால் (கால்வாய்) அமைப்பு, வீதியை விட உயரமான மட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி பல பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதே இதற்குக் காரணமாக அமைந்துள்ளது. எனவே இது தொடர்பான உண்மையை கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் […]

Continue Reading

வெங்காயத்தில் காணப்படும் கருப்பு பூஞ்சை மியூகோமைகோசிஸ் எனப்படும் உயிருக்கு ஆபத்தான பூஞ்சையா?

கருப்பு நிற பூஞ்சை படிந்திருக்கும் வெங்காயத்தை உட்கொள்வது ஆபத்தானது என தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மையை கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் கருப்பு_பூஞ்சை படர்ந்த #வெங்காயம்…. கருப்பு லேயர் படித்த வெங்காயத்தை சாப்பிடலாமா? இதில் இவ்வளவு விஷயம் இருக்கா?? நம் அன்றாட சமையலில் உபயோகிக்கும் காய்கறிகளில் ஒன்று வெங்காயம். நமது […]

Continue Reading

போலி மற்றும் உண்மையான 2000 ரூபா நாணயத்தாள்கள் என பகிரப்படும் படம் உண்மையா?

இலங்கை மத்திய வங்கி தனது 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு புதிய 2000 ரூபாய் நாணயத்தாளை வெளியிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் இரண்டு 2000 ரூபாய் நாணயத்தாள்களை ஒப்பிடும் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. அதில், உண்மையான நாணயத்தாளில் பாதுகாப்பு நூல் (Security Thread) நேர்க்கோடாக இருக்கும் எனவும்  போலி நாணயத்தாளில் அது இடைவெளிகளைக் கொண்ட கோடுகளாக (dashed line) இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே இது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ […]

Continue Reading

ஜனாதிபதி வருகையால் யாழ்ப்பாணத்தில் பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டதா?

தமிழர் திருநாளான தைப்பொங்கலை முன்னிட்டு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ததையடுத்து பல்வேறு கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிகின்றது. அந்தவகையில் யாழ்ப்பாணம் – குறிகாட்டுவான் இடையேயான இலங்கை போக்குவரத்து சபை பஸ் மதியம் 2.30 மணி சேவை யாழ்ப்பாணத்தில் இருந்து கடந்த 16 ஆம் திகதி ஜனாதிபதி வருகையை முன்னிட்டு இடம்பெறவில்லை என தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. எனவே அது குறித்து உண்மையை கண்டறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ […]

Continue Reading

அலிசா கார்சன் தொடர்பில் பகிரப்படும் தகவல்களின் உண்மை என்ன?

உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் விண்வெளி பயணம் தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அவற்றில், அமெரிக்காவின் நாசா ஒரு முன்னணி நிறுவனமாகக் கருதப்படுகிறது.  செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை ஏற்றிச் செல்லும் விண்கலத்தை நாசா முதன்முறையாக தரையிறக்கத் தயாராகி வருவதாகவும், அந்த செவ்வாய் கிரகப் பயணத்திற்கு முதல் பெண்ணாக அலிசா கார்சன் என்ற 20 வயது பெண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்றும் சமீபத்திய நாட்களில் தொடர் பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மையை […]

Continue Reading

புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ் பாடசாலை பாடப்புத்தகத்தில் உள்ள ஒரு பாடப் பகுதியா இது?

புதிய கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் பாடசாலை பாடத்திட்டங்களின் உள்ளடக்கங்கள் தொடர்பில் தொடர்ந்து  சர்ச்சையான விவாதங்கள் நடைபெற்று வரும் இக்காலகட்டத்தில், தற்போது 6ஆம் தர ஆங்கில பாடநூலில் குடும்பம் என்று கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கம் தொடர்பில் சர்ச்சைக்குரிய பல தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் புதிய […]

Continue Reading

நெஸ்லே குழந்தை பால் மா மீளப்பெறப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளதா?

நெஸ்லே நிறுவனத்தினால் சந்தையில் வெளியிடப்படும் குழந்தைகளுக்கான பால்மா தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் சர்வதேச அளவில் பாரிய அச்சத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த விடயம் தொடர்பான விரிவான தெளிவுபடுத்தலை வழங்கும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link பொதுமக்களுக்கு எச்சரிக்கை! குழந்தை பால் பவுடர் ஃபார்முலாவை திரும்பப் பெற்றது நெஸ்லே நிறுவனம்! ஐரோப்பிய நாடுகள் பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் போன்றவை), மத்திய கிழக்கு […]

Continue Reading