முன்னாள் நீதிபதி இளஞ்செழியன் தொடர்பில் பகிரப்படும் காணொளியின் உண்மை என்ன?

முன்னாள் நீதிபதியான மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்கள் ஓய்வு பெற்றுச் செல்லும் போது 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் தன்னுயிரை காப்பாற்றிய மெய்பாதுகாவலரையும் அவரது குடும்பத்தினரையும் சந்தித்து அழுகையுடன் விடைபெற்று சென்றதாக ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸாண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.  தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் “அனுரவால் […]

Continue Reading

வேழமாலிகிதன் மதுபோதையில் வாகனத்தை செலுத்தி கைதாகினார் என பரவும் தகவல் உண்மையா ?

INTRO:  வேழமாலிகிதன் மதுபோதையில் வாகனத்தை செலுத்தி கைதாகினார் என சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link சமூக வலைத்தளங்களில் “ நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு மது போதையில் சென்ற சிறிதரனின் வலது கையான […]

Continue Reading

நோர்தன் யுனிவர்சிட்டி  25000 மாணவர்களுக்கு இலவசகல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழங்குகிறதா? 

SLIIT northern பல்கலைக்கழகத்தின் தலைவர் இந்திரகுமார் பத்மநாதன் , ஏழ்மை நிலையில் உள்ள இலங்கையின் 25000 மாணவர்களுக்கு,  இலவச கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழங்குவதாக, சமூக வலைதளங்களில் பரவும் செய்தியொன்றை அவதானிக்க  முடிகிறது.   குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது போலியான என்று, ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link   | Archived Link  சமூகவலைத்தளங்களில் ” இலங்கையில் படிக்க […]

Continue Reading

ஊரடங்கு காலத்தில் இராதாகிருஷ்ணனின் மகனுக்கு திருமணமா?

INTRO :இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் அது தொடர்பாக பல போலியான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமை எமக்கு காணக்கிடைக்கின்றது. இந்நிலையில் கொழும்பு மாவட்டத்தில் கடந்த மாதம் 29 ஆம் திகதி முதல் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்ட நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணனின் மகனுக்கு திருமண ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளதாக சமூகவலைத்தளங்களில் சிலர் செய்தி பரப்பி வருவதை எமக்கு காணக்கிடைத்தது. இதன் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ […]

Continue Reading

101 வருடங்களுக்கு முன்பு உலகம் இதே நிலை என பகிரப்படும் புகைப்படங்கள் உண்மையா?

INTRO :இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் அது தொடர்பாக பல போலியான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமை எமக்கு காணக்கிடைக்கின்றது. இந்நிலையில் 101 வருடங்களுக்கு முன்பு உலகம் இது போன்ற ஓர் நிலையினை சந்தித்த வேளையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என 10 புகைப்படங்கள் அடங்கிய ஒரு புகைப்படத்தொகுப்பு பகிரப்படுவதை நாம் அவதானித்தோம். இதன் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. […]

Continue Reading

இலங்கையின் முதல் முஸ்லீம் பெண் விமானி இவரா?

INTRO :இலங்கையின் முதல் முஸ்லீம் பெண் விமானி ரீமா பாயிஸ் என  இணையத்தில் ஒரு செய்தி பகிரப்படுவது எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Ceylonsri News என்ற பேஸ்புக் பக்கத்தில் ” புதிய காத்தான்குடியை சேர்ந்த லண்டனை வசிப்பிடமாக கொன்ட […]

Continue Reading

கொரோனா பி.எச் அளவு பற்றி ஐ.டி.எச் மருத்துவமனை ஆலோசனையா?

INTRO :இலங்கையில் மீண்டும் கொரோனா தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு தரப்பில் போலி தகவல்கள் பரவி வருகின்றமை எமக்கு காணக்கிடைத்தது. அதில் ஐ.டி.எச் மருத்துவமனையின் ஆலோசனை என சில தகவல்கள் பகிரப்படுவது எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் இது போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link SLMC என்ற பேஸ்புக் பக்கத்தில் […]

Continue Reading

முத்தையா முரளிதரன் மரணமடைந்து விட்டாரா?

INTRO :இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் மரணித்து விட்டதாக மரண அறிவித்தல் புகைப்படம் இணையத்தில் பரவி வருகின்றமை காணக்கிடைத்து. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் இது போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Mailvakanam Parameswaran என்ற பேஸ்புக் கணக்கில்  முத்தையா முரளிதரன் இம்மாதம் 15 ஆம் […]

Continue Reading

சீன பிரதிநிதியிடம் இலங்கை புகைப்படத்தினை கையளித்தாரா மஹிந்த?

INTRO :இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சீன பிரதிநிதியிடம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இலங்கையின் வரைப்படத்தினை வழங்கியவாறு உள்ள புகைப்படம் பலராலும் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் இது போலியான புகைப்படம் என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Carrim Thasim என்ற பேஸ்புக் கணக்கில்  ” மனதில் தோன்றியதை, எழுதுகின்றேன் […]

Continue Reading

குருகந்த பிக்குவுடன் பிரச்சனையில் ஈடுப்பட்ட வியாழேந்திரனுக்கு அமைச்சு பதவியா?

INTRO : இலங்கையில் தற்போது ஜனாதிபதியான கோட்டபாய ராஜபக்ஷ முன்னிலையில் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினாரான சதாசிவம் வியாழேந்திரன்  பின்தங்கிய கிராம அபிவிருத்தி மற்றும் தேசிய கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு வர்த்தக பயிர்ச்செய்கை அபிவிருத்தி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக இம்மாதம் 6 ஆம் திகதி பதவி பிரமாணம் செய்து கொண்டார். இந்நிலையில் பேஸ்புக் மற்றும் சமூகவலைத்தளங்களில் இவரை பற்றிய சில பதிவுகள் பகிரப்பட்டது. அதில் குருகந்த விகாரபதியின் மரண நிகழ்வில் பிரச்சினையினை ஏற்படுத்திய நபருக்கு இராஜாங்க அமைச்சு […]

Continue Reading

இலங்கையில் உள்ள அனுமான் பாதமா இது?

INTRO : இலங்கையில் உள்ள அனுமான் பாதம் என்று ஒரு புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் இது போலியான புகைப்படம் என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Vimal Nila என்ற பேஸ்புக் கணக்கில்  ” இலங்கையில் உள்ள அனுமான் பாதம் ஷேர் கண்ணுங்க நல்ல செய்தி […]

Continue Reading

தனிமைப்படுத்தல் நிலையத்திற்குச் சென்ற பஸ் விபத்து பலர் தப்பி ஓட்டமா?

INTRO : இலங்கையில் தற்போது மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையால் நாடளாவிய ரீதியில் கொரோனா தொடர்பில் பல்வேறுபட்ட போலி தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைக்கின்றது.  இந்நிலையில் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு சென்ற பஸ் விபத்திற்குள்ளான சந்தர்ப்பத்தில் பலர் தப்பி ஓடியதாக ஒரு தகவல் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் இந்த செய்தி போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் […]

Continue Reading

கல்லடி கரைவலையில் சிக்கிய மீன்களா இது?

INTRO : இலங்கையில் மட்டக்களப்பு கல்லடி பகுதியில் மீன்வர்களின் வலையில் சிக்கிய மீன்கள் என ஒரு புகைப்படம் பேஸ்புக்கில் பகிரப்பட்டுவருகின்றமை எமக்கு காணக்கிடைத்து.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் இந்த புகைப்படம் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Kado Kappu என்ற பேஸ்புக் பக்கத்தில்  ” இன்று #மட்டக்களப்பு #கல்லடி கடற்கரையில் […]

Continue Reading

உயர் தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளனவா?

INTRO : இலங்கையில் தற்போது மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையால் நாடளாவிய ரீதியில் கொரோனா தொடர்பில் பல்வேறுபட்ட போலி தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைக்கின்றது.  இந்நிலையில் உயர் தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் ஒத்திவைக்க அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் இந்த செய்தி போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is […]

Continue Reading

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிப்பு; உண்மை என்ன?

INTRO : இலங்கையில் தற்போது மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையால் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கவுள்ளதாக செய்தி ஒன்று பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் இந்த செய்தி போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Lankapuri என்ற பேஸ்புக் கணக்கில்  ” இலங்கை […]

Continue Reading

மஞ்சி சாக்லேட் பிஸ்கட் குழுந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லையா?

இலங்கையில் அதிக விற்பனையாகும் மஞ்சி சாக்லேட் பிஸ்கட்டை குழந்தைகளுக்கு பாதுகாப்பானது இல்லை என தடை செய்து முத்திரை குத்தியுள்ள கத்தார் நுகர்வோர் பாதுகாப்புத் துறை என ஒரு செய்தி பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link East1st  என்ற பேஸ்புக் பக்கத்தில்  ” இலங்கையில் அதிக விற்பனையாகும் மஞ்சி சாக்லேட் பிஸ்கட்டை குழந்தைகளுக்கு பாதுகாப்பானது இல்லை என […]

Continue Reading

இது காத்தான்குடியில் அமைந்துள்ள ஹோட்டலா?

காத்தான்குடியில் கடற்கரை வீதியில் புதியதோர் உதயம் என ஒரு ஹோட்டல் வீடியோ பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link ஜீ சிங்கப்பூர் என்ற பேஸ்புக் பக்கத்தில்  ” #கிழக்கில்_புதியதோர்_உதயம் #காத்தான்குடியில் கடற்கரை வீதியில் புதியதோர் உதயம் #fish_cool_restaurant உங்கள் குடும்பத்துடன் வந்து புது வித அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் ……..”  என்று இம் மாதம் 12 ஆம் […]

Continue Reading

இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய 1000 ரூபாய் இதுவா?

இலங்கையில் புதிதாக வெளியிடப்பட்ட 1000 ரூபாய் என ஒரு புகைப்படம்  பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Puttalam News-புத்தளம் செய்திகள் என்ற பேஸ்புக் பக்கத்தில்  ” அறிமுகப்படுத்தப்பட்டது புதிய 1000 ரூபாய் புதிய 1000 ரூபாய் காசை பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு மத்திய வங்கியின் ஆளுனர் பேராசிரியர் டபிள்யூ.டி லக்ஷ்மன் இன்று (24) வழங்கினார். பிரதமருக்கும் […]

Continue Reading

குறைமாதத்தில் பிறந்த மணமகனின் திருமணப் புகைப்படம்; உண்மை என்ன?

உலகளவில் வைரலான இளம் தம்பதிகளின் புகைப்படத்தினை வைத்து பல்வேறு கதைகள் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Vavuniya Bazaar என்ற பேஸ்புக் பக்கத்தில்  ” எதுவும் தெரியாமல் இந்த இருவரையும் கேலி செய்யப்பவர்களுக்கு நான் சொல்ல வேண்டியது இதுதான்… நாங்கள் 9 – 10 மாதங்கள் கருப்பையில் இருக்கிறோம் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்..ஆனால் 7 […]

Continue Reading

நாமல் ராஜபக்ஷ குழந்தையென பரவும் புகைப்படங்கள் அனைத்தும் உண்மையா?

தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Askeen Fasmil என்ற பேஸ்புக் கணக்கில்  ” பிரதமர் #Mahinda_Rajapaksa மகிந்த ராஜபக்ச அவர்களின் மகன் நாமல் ராஜபக்ச #Namal_Rajapaksa தம்பதிகளின் குழந்தையுடன் (பேரன்) மகிழ்ச்சியில்….” என்று இம் மாதம் 14 ஆம் திகதி  (14.09.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. Fact Check (உண்மை அறிவோம்) நாம் குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமிர்த்தமாக பேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ள புகைப்படங்கள் Google Reverse Image Tool  பயன்படுத்தி தேடுதலில் […]

Continue Reading

Safety pin விழுங்கிய குழந்தைக்கு வாட்ஸ்அப் நிதி உதவியா?

Safety pin  விழங்கிய குழந்தைக்கு வாட்ஸ்அப் நிறுவனம் நிதி உதவி வழங்குவதாக ஒரு குழந்தையின் புகைப்படம் வாட்ஸ்அப் செயலியில் பகிரப்பட்டு வருகின்றமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: குறித்த புகைப்படத்துடன் ஒரு ஒலிப்பதிவும் வாட்ஸ் அப்பில் பகிரப்பட்டு வருகின்றமை எமக்கு காணக்கிடைத்தது. Fact Check (உண்மை அறிவோம்) நாம் குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமிர்த்தமாக Google Reverse Image Tool  பயன்படுத்தி ஆய்வினை […]

Continue Reading

மின்னேரியாவில் பிறந்த இரட்டை யானைகளின் புகைப்படம் இதுவா?

மின்னேரியாவில் பிறந்த தெற்காசியாவின் முதல் இரட்டை யானைகளின் புகைப்படங்கள் என சில புகைப்படங்கள் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Lanka 360ᵒ என்ற பேஸ்புக் பக்கத்தில்  ” மின்னேரியாவில் பிறந்த தெற்காசியாவின் முதல் இரட்டை யானைகள்” என்று  இம் மாதம் 8 ஆம் திகதி  (08.09.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. Fact Check (உண்மை அறிவோம்) நாம் […]

Continue Reading

பதிவு திருமணம் செய்ய பெற்றோர் கையொப்பம் முக்கியமா?

இலங்கையில் பதிவு திருமணம் செய்து கொள்ள பெற்றோர் கையொப்பம் முக்கியம் என புதிய சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Suthan Vijay என்ற பேஸ்புக் கணக்கில்  ” காதலித்து ஒடி போய் கல்யாணம் பண்ணுபவர்களுக்கு இனி ஆப்பு ✍️ பதிவு திருமணம் செய்ய பெற்றோர் கையொப்பம் முக்கியம் புதிய […]

Continue Reading

இப்படி மாறிட்டாங்களா அமைச்சர் அலி சபரியின் மனைவி?

இலங்கை நாட்டின் தற்போதைய நீதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் அலி சப்ரியின் மனைவி தற்போது இஸ்லாமிய கலாசாரத்தினை மறந்துவிட்டதாக, ஒரு வீடியோ பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Mail Online.LK  என்ற பேஸ்புக் கணக்கில்  ” இப்படி மாறிட்டாங்க அமைச்சர் அலி சபரி பொண்டாட்டி வேதனைக்குரிய செயல்” என்று கடந்த மாதம் 24 ஆம் […]

Continue Reading

இலங்கையில் தீ பற்றிய எண்ணெய் கப்பலின் புகைப்படங்களா இவை?

‘விபத்திற்குள்ளாகியுள்ள MT – New Diamond எண்ணெய் கப்பல் என்று 9  புகைப்படங்கள் அடங்கிய ஒரு புகைப்படத் தொகுப்பு பேஸ்புக்கில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link மலையகம் என்ற பேஸ்புக் பக்கத்தில்  ” தீயில் இருந்து மீட்கப்பட்ட கப்பலிலிருந்து சில புகைப்படங்கள் நேற்று தீ பற்றிய கப்பலை காப்பாற்றுவதற்காகவும் இலங்கை கடற்படையினர் விடா முயற்சியினாலும் […]

Continue Reading

அரச வேலை வாய்ப்பை வழங்கும் திட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் புறக்கணிப்பா?

ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பில் ஏற்பட்ட திடீர் திருப்பம் என்ற தலைப்பில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வேலை வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி பேஸ்புக்கில் ஒரு பதிவு பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Yazh News – யாழ் நியூஸ் என்ற பேஸ்புக் பக்கத்தில்  ” ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பில் ஏற்பட்ட திடீர் திருப்பம்! விரிவான […]

Continue Reading

கோட்டபாய ராஜபக்ச மற்றும் ரணசிங்க பிரேமதாச இருவரும் உள்ள புகைப்படமா இது?

இலங்கையின் இரண்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவையும் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவையும் படத்தில் அருகருகே காண்கிறீர்கள் என ஒரு புகைப்படம் பேஸ்புக்கில் பரவி வருகின்றமை காணக்கிடைத்தது. இதை குறித்து நாம் ஆய்வினை மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Ceylon Magazine  என்ற பேஸ்புக் பக்கத்தில்  ” இலங்கையின் 2வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவையும் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட […]

Continue Reading

இலங்கை வீதியெங்கும் டிஜிட்டல் தொழில்நுட்ப கேமராக்களுடன் பொலீஸாரா?

இலங்கை வீதியெங்கும் டிஜிட்டல் தொழில்நுட்ப கேமராக்களுடன் பொலீஸார், அவதானத்துடன் செயற்படுங்கள் என்று பரவும் தகவல் தொடர்பாக எமது ஆய்வினை நாம் மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Suresh Rajendran  என்ற பேஸ்புக் கணக்கில்  ” சாரதிகளே முடிந்தால் இதனை பகிர்ந்து உதவுங்கள் ஓட்டுணர்(ட்ரைவர்மார்)களே..! இனி ஓடவும் முடியாது, ஒழியவும் முடியாது இலங்கை வீதியெங்கும் டிஜிடல் தொழிநுட்ப கேமராக்களுடன் பொலீஸார் அவதானத்துடன் செயற்படுங்கள்…” என்று  கடந்த மாதம் 31 ஆம் திகதி (31.07.2020) […]

Continue Reading

அமரர் ஆறுமுகம் தொண்டமான் இறுதியாக பேசிய வீடியோ இதுவா?

காலம் சென்ற முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் இறுதியாக பேசிய வீடியோ என்று கூறி பேஸ்புக்கில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Moganeswaran Chettiar  என்ற பேஸ்புக் கணக்கில்  ” முன்னால் அமைச்சர் #அமரர் ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் இறுதியாக கூறி விடைபெற்றது என்ன…? #கீழ்_காணும்_linkஐ_தட்டுக 👇 https://m.facebook.com/story.php?story_fbid=165316265068766&id=101653828101677” என்று  இம் மாதம் 3 […]

Continue Reading

ராஜித மற்றும் மனோ தேர்தலில் தோல்வியா?

நடந்த முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன மற்றும் மனோ கணேசன் ஆகிய இருவரும் தோல்வியடைந்ததாகக் கூறி பேஸ்புக்கில் ஒரு பதிவு பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Mohamed Nassar என்ற பேஸ்புக் கணக்கில்  ”கடந்த பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பல பெரிய நபர்கள் இந்த முறை தோற்கடிக்கப்பட்டனர்! 1. ராஜித சேனரத்ன 2. […]

Continue Reading

சஜித் பிரதமரானால் பாங்கோசைக்கு தடை விதிப்போம் என்று ரஞ்சன் ராமநாயக தெரிவிப்பா?

சஜித் பிரேமதாச பிரதமரானால் முஸ்லிம் பள்ளிவாசல்களில் பாங்கோசைக்கு தடை உத்தரவு கொண்டுவருவதாக ரஞ்சன் ராமநாயக தெரிவித்ததாக பேஸ்புக்கில் ஒரு பதிவு பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Carrim Thasim என்ற பேஸ்புக் கணக்கில்  ” சஜித் பிரேமதாச பிரதமராகினால் முஸ்லிம் பள்ளிவாயல்களில் பாங்கோசையை 5 நேரங்களிலும் ஒளிபெருக்கியில் கூறுவதற்கான தடை உத்தரவை நாம் கொண்டுவருவோம். ரஞ்சன் ராமநாயக […]

Continue Reading

ஹந்தானை இளைஞர்களை கேவலப்படுத்தினாரா ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் வேலு குமார்?

கண்டி ஹந்தானை இளைஞர்களை ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளரான வேலுகுமார் கேவலப்படுத்தியதாக தெரிவித்து பேஸ்புக்கில் தொலைபேசி அழைப்பின் ஒலிப்பதிவு, என பேஸ்புக்கில் ஒரு பதிவு பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link தமிழர்களின் உரிமை குரல் என்ற பேஸ்புக் பக்கத்தில் ”ஹந்தானை இளைஞர்களை கேவலப்படுத்திய வேலு குமார்” என்று நேற்று (04.08.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. <iframe src=”https://archive.org/embed/screencast-www.facebook.com-2020.08.05-07_43_41″ width=”640″ […]

Continue Reading

இணையத்தில் பகிரப்படும் மாதிரி வாக்குச் சீட்டு சரியானதா?

இலங்கையில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் களமிறங்கியுள்ள ஜீவன் தொண்டைமானின் ஆதரவாளர்களால் பகிரப்படும் மாதிரி வாக்குச் சீட்டு தொடர்பாக எமது ஆய்வினை நாம் மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Raja Guy என்ற பேஸ்புக் கணக்கில்  ” VOTE FOR JEEVAN 3 X 🌷X ” என்று  கடந்த மாதம் 31 ஆம் திகதி (31.07.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. மேலும் இது வட்ஸ் அப் போன்ற செயலிகளில் பகிரப்பட்டு வருகின்றது. […]

Continue Reading

திருக்கேதீஸ்வரத்தில் அடித்து நொறுக்கப்பட்டதா பிள்ளையார் சிலை?

திருக்கேதீஸ்வரத்தில் மத வெறியர்களால் அடித்து நொறுக்கப்பட்ட பிள்ளையார் சிலை என்று கூறி ஒரு புகைப்படம் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவதைக் கண்டோம். குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Aa thee fm என்ற பேஸ்புக் பக்கத்தில்  ” மேன்மை கொள் சைவ நீதி திருக்கேதீஸ்வரத்தில் மத வெறியர்களால் இன்று அதிகாலை அடித்து நொருக்கப்பட்ட பிள்ளையார்!!” என்று  கடந்த மாதம் 31 ஆம் திகதி […]

Continue Reading

உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த கருணாவின் செய்தி?

உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த கருணாவின் செய்தி என ஒரு வீடியோ  பதிவு பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவது எமக்கு காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Mohamed Rizwan என்ற பேஸ்புக் கணக்கில்  ”BREAKING NEWS SRILANKA உலகமே திரும்பி பார்க்கவைத்த கருணாவின் செய்தி…😂😂 ” என்று  கடந்த மாதம் 22 ஆம் திகதி (22.06.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. Fact Check […]

Continue Reading

மனித தோற்றத்துடன் பிறந்த பூனையா?

மனித தோற்றத்துடன் பிறந்த பூனை என்ற ஒரு தகவல் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவதை நமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link 𝐆𝐮𝐞𝐬𝐭 𝐓𝐫𝐨𝐥𝐥 𝐕𝐚𝐯𝐮𝐧𝐢𝐲𝐚 என்ற பேஸ்புக் பக்கத்தில்  ” அவன் செய்த வேலயாத்தான் இருக்கும் 🤔 #Guesttrollvavuniya #TR😎 ” என்று ஜுன் மாதம் 11 ஆம் திகதி (11.06.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. குறித்த பதிவை பலரும் பகிர்ந்துள்ளமை […]

Continue Reading

முஸ்லிம் பெண்களுக்கு முதல் குழந்தை பிரசவித்தவுடன் கருத்தடை; சம்பிக்க ரணவக்க தெரிவிப்பா?

ஜுன் மாதம் ஏற்பட்ட சூரிய கிரகணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ என ஒரு வீடியோ பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவதை நமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Abdul Latheef என்ற பேஸ்புக் கணக்கில்  ” முஸ்லிம் பெண்களுக்கு முதல் குழந்தை பிரசவித்தவுடன் கருத்தடை செய்வதை கட்டாயமாக்க வேண்டும்!🤔 நேற்று மஹரகம பகுதியில் நடைபெற்ற சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தின் […]

Continue Reading

ஆட்சிக்கு வந்தவுடன் புர்காவுக்கு தடை விதிப்பேன் என்று விமல் வீரவன்ச கூறினாரா?

ஆட்சிக்கு வந்தவுடன் புர்க்காவுக்கு தடை விதிப்போம் என விமல் வீரவன்ச தெரிவித்ததாக பேஸ்புக்கில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை நமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Malek Amen என்ற பேஸ்புக்  கணக்கில் ” மிளகாய்த்தூள் மீண்டும் பாராளுமன்றம் ஏறுமா?” என்று இம்மாதம் 13 ஆம் திகதி (13.06.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. குறித்த பதிவில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த புகைப்படத்தில் ” […]

Continue Reading

முஸ்லிம்களின் வாக்குகளுக்காக ஒருபோதும் கையேந்த மாட்டோம் – விமல் வீரவன்ச தெரிவிப்பா?

‘’முஸ்லிம்களின் வாக்குகளுக்காக நாம் ஒருபோதும் கையேந்த மாட்டோம். ஊடகவியளாலர் சந்திப்பில் விமல் வீரவன்ச அதிரடிப் பேச்சு,’’ என்ற தலைப்பில் ஒரு வீடியோ பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவது எமக்கு காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  எஸ். எம் மரிக்கார் என்ற பேஸ்புக்  கணக்கில் ” முஸ்லிம்களின் வாக்குகளுக்காக நாம் ஒருபோதும் கையேந்த மாட்டோம். ஊடகவியளாலர் சந்திப்பில் விமல் வீரவன்ச அதிரடிப் பேச்சு.” […]

Continue Reading

இலங்கை ராணுவம் சீனாவுக்கு உதவும் என்று ராணுவ தளபதி சவேந்திர சில்வா கூறினாரா?

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் போர் ஏற்பட்டால் இலங்கை ராணுவம் சீனாவுக்கு உதவுவதாக இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்ததாக, ஒரு செய்தி பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவது எமக்கு காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  ‎ இராவணன் இராச்சியம்  என்ற பேஸ்புக் கணக்கில் ” புலிகளை அழிக்க ஸ்ரீலங்காவிற்கு உதவிய இந்தியாவிற்கு விழுந்தது செருப்படி என்ற பதிப்போடு அதில் பதிவேற்றம் செய்திருந்த […]

Continue Reading

முத்தையா முரளிதரன் பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியா?

எதிர்வரும் பொதுத்தேர்தலில் முத்தையா முரளிதரன் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட போவதாக, ஒரு செய்தி பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவது எமக்கு காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  ‎ மூதூர் வசந்தம் என்ற பேஸ்புக் பக்கத்தில் ” பொதுத்தேர்தலில் போட்டியிடுவதாக முரளிதரன் அறிவித்தார்.. கிரிக்கட் நட்சத்திரம் முத்தையா முரளிதரன் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில் […]

Continue Reading

மெட்ரோ நியூஸ் பத்திரிக்கையில் வெளியான செய்திகள் உண்மையா?

இலங்கையில் பிரபல பத்திரிக்கையில் ஒன்றான மெட்ரோ நியூஸ் பத்திரிக்கையின் பெயரில் பேஸ்புக் பக்கங்களில் முஜிபுர் ரஹ்மான் மற்றும் அசாத் சாலி ஆகியவர்களின் பெயர்களில் சில செய்திகள் பகிரப்பட்டு வருவது எமக்கு காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  ‎ Carrim Thasim என்ற பேஸ்புக் கணக்கில் ” ஞானசாரவும் ரிஸ்வி முப்தியும் ஆடையில் மட்டுமே வேறுபட்டவர்கள் – முன்னாள் பா.உ முஜிபுர் […]

Continue Reading

சுடர் ஒளி பத்திரிக்கை பெயரில் வெளியான செய்திகள் உண்மையா?

சுடர் ஒளி பத்திரிகையின் பெயரில் சஜித் பிரேமதாச,மனோ கணேசன் மற்றும் ரிஷ்வி முப்தி ஆகியவர்கள் தெரிவித்தாக பல செய்திகள் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவது எமக்கு காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  ‎ Ilyas Sana என்ற பேஸ்புக் கணக்கில் ” ரிஷ்வி முப்தி கோட்டாவின் கைக்கூலி முஸ்லிம்களே அகில இலங்கை ஜம்மியதுல் உலமா தலைவருடைய விடயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருந்து […]

Continue Reading

சம்பிக்க ரணவக்க பற்றி மெட்ரோ பத்திரிக்கையில் வெளியான செய்தி உண்மையா?

சஜித் பிரேமதாசா தலைமையிலான எங்கள் ஆட்சி நூறுவீதம் பௌத்த ஆட்சி என்று சம்பிக்க ரணவக்க தெரிவித்ததாக மெட்ரோ பத்திரிக்கையின் செய்தி வெளியாகியுள்ள புகைப்படம் ஒன்று பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவது எமக்கு காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  ‎Ahm Faisar என்ற பேஸ்புக் கணக்கில் ” இத நாங்க சொன்னா எங்கள மஹிந்த வாதி என்பார்கள் கஞ்ஞி பாய்மார் இதையும் பொய்யென்று […]

Continue Reading

ஜனாதிபதி தெரிவித்ததாக விடிவெள்ளி பத்திரிக்கையில் வெளியான செய்தி உண்மையா?

கொரோனா ஒரு தேசிய பிரச்சினை – கோட்டபாய ராஜபக்ச  என்ற தலைப்பில் விடிவெள்ளி பத்திரிக்கையின் முதற்பக்கத்தில் செய்தி வெளியாகியுள்ள புகைப்படம் ஒன்று பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவது எமக்கு காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  ‎ Mohamd Asnaf என்ற பேஸ்புக் கணக்கில் ”  கொரோனா ஒரு தேசிய பிரச்சினை- கோடாபய ராஜபக்ச முஸ்லிம்களுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது இறந்தவர்களின் உடல்களை […]

Continue Reading

சுமந்திரன் நாடகமாடுவதை நிறுத்த வேண்டும் என்று ரவூப் ஹக்கீம் கூறினாரா?

சுமந்திரன் நாடகமாடுவதை நிறுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்ததாக, ஒரு செய்தி பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவது எமக்கு காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  ‎ Thalam News என்ற பேஸ்புக் கணக்கில் ” றனில் விக்கிரமசிங்கவை பலப்படுத்துவதற்காக சுமந்திரன் நாடாகமாடுவதை நிறுத்த வேண்டும் – தலைவர் ரவூப் ஹக்கீம். எமது சமூகத்தின் பிரச்சினைகளை […]

Continue Reading

மட்டக்களப்பு கல்லடி பாலம் திறப்பு நிகழ்வின் அரிய புகைப்படமா இது?

மட்டக்களப்பு கல்லடி பாலம் திறப்பு நிகழ்வின் அரிய புகைப்படம் என ஒரு புகைப்படம் ஒன்று பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவதை எமக்கு காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link   எங்கட யாழ்ப்பாணம் என்ற பேஸ்புக் கணக்கில் ” 1928ம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின்போது #மட்டக்களப்பு #கல்லடி பாலம் திறப்பு நிகழ்வின் அரிய புகைப்படம் … 😍👍” என்று இம் மாதம் 4 ஆம் […]

Continue Reading

இது திருகோணமலை மத்திய வீதியா?

ஊரடங்கிற்கு பிறகு திருகோணமலை மத்திய வீதி என புகைப்படம் ஒன்று பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவதை எமக்கு காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  ‎எழில் கொஞ்சும் திருகோணமலை என்ற பேஸ்புக் கணக்கில் ” இது வெளிநாடு அல்ல…ஊரடங்குக்கு பிறகு திருகோணமலை மத்திய வீதி🙄🙏😎” என்று இம் மாதம் 4 ஆம் திகதி (04.05.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. குறித்த செய்தி பலராலும் பகிரப்பட்டிருந்தமை […]

Continue Reading

இசைப்பிரியாவின் மகள் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தி- உண்மையா?

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஊடகவியலாளராக பணியாற்றிய இசைப்பிரியாவின் மகள் செல்வி சிவாபிரபு இசைப்பிரியா க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் அதிவிசேட சித்தியினைப் (#9A) பெற்றுச் சித்தியடைந்தள்ளதாக ஒரு செய்தி பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவதை எமக்கு காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  ‎Jegan Sivanantharasa என்ற பேஸ்புக் கணக்கில் ” #மாவீரர் மறைச்செல்வன் அவர்களின் அன்பு மகள் செல்வி சிவாபிரபு இசைப்பிரியா […]

Continue Reading

பாடசாலைகள் சில தனிமைப்படுத்தல் மத்திய நிலையமாக மாற்றமா?

கொழும்பில் உள்ள, ஐந்து பாடசாலைகளை தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களாக மாற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவதை எமக்கு காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  ‎Jameel Kalkudah என்ற பேஸ்புக் கணக்கில் ” கொழும்பு ரோயல் கல்லூரி, D.S. சேனநாயக்க , இந்துக்கல்லூரி போன்றவையும் தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களாக… 27-4-2020 கொழும்பில் உள்ள, ஐந்து பாடசாலைகளை தனிமைப்படுத்தல் […]

Continue Reading

வெளியுறவு அமைச்சகத்தின் கடிதம் உண்மையா?

கத்தார் வாழ் இலங்கை மக்களுக்கு மிகமுக்கியமான அறிவித்தல் என்று இலங்கை வெளிநாட்டு உறவுகள் அமைச்சினால் வெளியிடப்பட்ட கடிதம் என்று ஒரு பிரதி புகைப்படம் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவதை எமக்கு காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  ‎Sri Lanka VS Qatar என்ற பேஸ்புக் பக்கத்தில் ” #Ministry #of #Foreign #Relations – #SriLanka 🇶🇦🤝🇱🇰” என்று கடந்த 14 […]

Continue Reading

யாழ் இளைஞர்கள் கள்ளுக்காக கெஞ்சும் வீடியோ உண்மையா?

யாழில் இளைஞர்கள் கள்ளுக்கு கெஞ்சும் வீடியோ ஒரு செய்தி பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவதை எமக்கு காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  ‎Sudar Seithy‎ என்ற பேஸ்புக் பக்கத்தில் ” யாழில் பனைக்கு கீழ் கொத்து கொத்தாக இளைஞர்கள் கள்ளுக்கு கெஞ்சும் வீடியோ: வடிவா பாருங்கோ !” என்று கடந்த 9 ஆம் திகதி (09.04.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. குறித்த செய்தி […]

Continue Reading

வற்றாப்பளை கண்ணகி அம்மன்; ஆலய குருக்களின் கனவில் கூறியது உண்மையா?

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் குருக்களின் கனவில் கூறியதாக ஒரு செய்தி பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவதை எமக்கு காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  ஈழத்து குயில் என்ற பேஸ்புக் பக்கத்தில் ” #வற்றாப்பளை_கண்ணகி_அம்மாவின்_புதுமை ஆலய குருக்களின் கனவில் சென்று கூறிய புதுமை 🙏கோதுமைமா🙏அரிசிமா🙏மஞ்சள்மா🙏போன்றவற்றினை(தூய்மையான நீரினை)இட்டு இறுக குழைத்து 🙏சிட்டி போன்ற வடிவத்தில் அமைத்து 🙏வீட்டின் முற்பகுதியில் அவ்வாறு அமைக்கப்பட்ட சிட்டி […]

Continue Reading

அம்மன் கண்களில் இருந்து ரத்த கண்ணீர்; உண்மை என்ன?

வவுனியாவில் அம்மன் சிலையிலிருந்து ரத்த கண்ணீர் வருவதாக ஒரு வீடியோ பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவதை எமக்கு காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Sathyakala Kamalakanthan என்ற பேஸ்புக் பக்கத்தில் ” சற்றுமுன் வவுனியாவிலுள்ள அம்மன் ஆலயம் ஒன்றில் நடந்த உண்மைச் சம்பவம்…” என்று கடந்த 4 ஆம் திகதி (04.04.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. குறித்த பதில் கீழ் காணப்படும் வீடியோவும் […]

Continue Reading

இந்தியாவில் கொரோனா வைரஸால் இறந்த 2 சடலங்கள் அடக்கம்; உண்மை என்ன?

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட இறந்த இருவரை இந்தியாவில் அடக்கம் செய்தாக ஒரு புகைப்படம் பேஸ்புக்கில் பலராலும் பகிர்ந்த வண்ணம் உள்ளமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Thooimai1st என்ற பேஸ்புக் பக்கத்தில் ” Two Muslim victim of the Covid 19 in India that the Janaza had been cremating according the Muslims […]

Continue Reading

A9 வீதி சாவகச்சேரியில் மகிழ்ச்சியாக இருக்கும் மான்களா?

ஏ9 வீதி சாவகச்சேரியில் மனிதர்கள் வீட்டிற்குள் முடங்கியதால் மகிழ்ச்சியாக இருக்கும் மான்கள் என சிலர் ஒரு புகைப்படத்தை பேஸ்புக்கில் பகிர்ந்த வண்ணம் உள்ளமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Mathutangan Lingam என்ற பேஸ்புக் கணக்கில் ” மனிதர்கள் வீட்டிற்குள் முடங்கியதால் மகிழ்ச்சியாக இருக்கும் மான்கள்..😍 இடம்-A9 வீதி சாவகச்சேரி” என்று இம்மாதம் 22 ஆம் திகதி (22.03.2020) […]

Continue Reading

கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரா?

கொரோனா வைரஸ் தடுப்பூசி தயார். ஊசி போட்ட 3 மணி நேரத்திற்குள் நோயாளியை குணப்படுத்தும் திறன் கொண்டது. அமெரிக்க விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு என்று சில தகவல்கள் பேஸ்புக்கில் பலராலும் பகிர்ந்த வண்ணம் உள்ளமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Jaffna Kopi என்ற பேஸ்புக் பக்கத்தில் ” #கொரோனா_வைரஸ்_தடுப்பூசி_தயார் #ஊசி_போட_நீங்கள்_தயாரா 🙏💉💉💉💉🙏 கொரோனா வைரஸ் தடுப்பூசி தயார். ஊசி […]

Continue Reading

கொரோனா வைரஸை தடுக்க வானூர்திகள் மூலம் கிருமி நாசினி தெளிக்க திட்டமா?

கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க இலங்கை பூராகவும் வானூர்திகள் மூலம் ஒருவகையான கிருமி நாசினி தெளிப்பு இடம்பெறவுள்ளது என்று ஒரு செய்தி பரவுவதை நாம் காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  புது யுகம் சுல்பிகார் என்ற பேஸ்புக் கணக்கில் ” #இலங்கை_வாழ்_அனைத்து_மக்களுக்கும் #ஓர்_முக்கிய_அறிவித்தல் இரவு 12 மணியளவில் இலங்கை பூராகவும் தற்போது உலகம் பூராகவும் பரவி வரும் Corona (Covid-19) […]

Continue Reading

கொரோனா வைரஸ் பற்றி யுனிசெப் முன்னெச்சரிக்கை- உண்மையா?

’கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் யுனிசெப் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ளதாக சிலர் தகவல்களை பகிர்ந்த வண்ணம் உள்ளமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  அரியாலை இணையம் என்ற பேஸ்புக் கணக்கில் ” கொரோனா வைரஸ்..! கொரோனா வைரஸ் 400-500 மைக்ரோ விட்டம் கொண்ட பெரிய அளவில் உள்ளது. எந்த முகமூடியும் (Mask) அதன் நுழைவைத் தடுத்து […]

Continue Reading

இலங்கையில் உள்ள திருகோணேஸ்வர ஆலயத்தின் புகைப்படம் இதுவா?

இலங்கையில் திருகோணமலையில் அமைந்துள்ள திருகோணேஸ்வர கோவிலின் புகைப்படம் என்று ஒரு புகைப்படம் பேஸ்புக்கில் பகிரப்படுவது எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Rrpestcontrol Raja  என்ற பேஸ்புக் கணக்கில் ”இது ஸ்ரீலங்காவின் திருகோனமலையில் உள்ள கொனேஸ்வரம் கோவில். இந்த கோயில் ராவணனால் கட்டப்பட்டது. பெரிதாக்கி, கோவிலின் நுழைவாயிலைப் பார்க்கவும்… இது ஆச்சரியமாக பிரம்மிப்பூட்டும் வகையில் இருக்கிறது… பாறை மீது கோயில் […]

Continue Reading

கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடித்தாரா யாழ்ப்பாணத்து தமிழச்சி?

சீனாவின் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸால் தற்போது ஆயிரக்கணக்கில் உயிரினை பழிவாங்கியுள்ளதோடு, இன்னும் உலக மக்களுக்கு ஓர் அச்சுறுத்தலாகவே இருந்து வருகின்றது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் கிருமியை அழிக்கும் மருந்தை ஈழத் தமிழ் பெண் கண்டுபிடித்தார் என்று ஒரு பதிவு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  சுட சுடசெய்திகள் என்ற பேஸ்புக் பக்கத்தில் […]

Continue Reading

பதுளை முஸ்லிம் புடவை கடை; பெண்கள் ஆடை மாற்றுவதை வீடியோ எடுத்த இளைஞர் கைதா?

பதுளையில் முஸ்லிம் புடவை கடை ஒன்றில் பெண்கள் புடைவை மாற்றுவதை வீடியோ எடுத்த இளைஞர் ஒருவர் கைது என்று பேஸ்புக் பக்கங்கள் பகிரப்படுவதை நாம் அவதானித்தோம். குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Tamil People – தமிழ் மக்கள்  என்ற பேஸ்புக் பக்கத்தில் ” பதுளை நகரில் சிங்கள பெண்களை புடவை கடவையில் ஆடைமாற்றும் அறையில் கமரா வைத்து வீடியோ எடுத்த […]

Continue Reading

இலங்கையில் காதலர்கள் தினத்திற்கு தடை விதிப்பா?

உலகளாவிய ரீதியில் இன்று கொண்டாடப்பட்ட காதலர் தினத்திற்கு இலங்கை ஜனாதிபதி தடை விதித்துள்ளதாக பேஸ்புக்கில் தகவல் பகிரப்பட்டுள்ளதை நாம் அவதானித்தோம். குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Risha Risha என்ற பேஸ்புக் கணக்கில் ” எதிர்வரும் பிப்ரவரி மாதம் 14 திகதி இலங்கையில் beech. Park தியேட்டர் போன்ற இடங்களில் இராணுவ பாதுகாப்பினை பலபடுத்துமாறு ஜனாதிபதி கோத்தாபாய அதிரடி அறிவிப்பு காதல் […]

Continue Reading

மண்கும்பானில் மணல் கொள்ளை உழவு இயந்திரம் தீக்கிரையா?

யாழ்.தீவகம் மண்கும்பான் பகுதியில் தொடர்ச்சியாக மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்தவர்களை வழிமறித்த பிரதேச மக்கள் மணல் கடத்தியவர்களின் உழவு இயந்திரங்களை தீயிட்டு கொழுத்திய புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link | News link | Archived Link DelftMedia DM என்ற பேஸ்புக் கணக்கில் ” மண்கும்பானில் மணல் கொள்ளை உழவு இயந்திரம் தீக்கிரை ” என்று […]

Continue Reading

பசறை மண்சரிவில் தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதா?

பதுளை மாவட்டத்திற்கு உட்பட்ட பசறை பிரதேசத்தில் எமது நாட்டுக்கே உரித்தான விலைமதிக்க முடியாத தொல்பொருள் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் பரப்பப்படுகின்றது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Ųmāř Hāžāňi என்ற பேஸ்புக் பக்கத்தில் ” பதுளை ( பசறை ) பிரதேசத்தில் வெளியான எமது நாட்டுக்கே உரித்தான விலைமதிக்க முடியாத தொல்பொருள் எச்சங்களான புதையல்கள்! “புதையல்கள் ” 👇👇👇 தொல்லியல் களம் […]

Continue Reading

இலங்கையில் மயில்கள் கொல்லப்படுகின்றதா?

இலங்கையில் இடம்பெற்ற கொடூரம்! ஈவிரக்கமின்றி கொல்லப்பட்ட மயில்கள் என இணைய செய்தியொன்று பகிரப்படுவது எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link | News Link | News Archived Link JVP News என்ற பேஸ்புக் பக்கத்தில் ” இலங்கையில் இடம்பெற்ற கொடூரம்! ஈவிரக்கமின்றி கொல்லப்பட்ட மயில்கள்” என்று இம் மாதம் 20 ஆம் திகதி (20.01.2020) அன்று பதிவேற்றம் […]

Continue Reading

சஜித்திற்கு ஆதரவாக பேசினாரா நடிகர் ரஜினி?

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக இலங்கை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கிய சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவாக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த உரையாடியதாக கூறப்பட்டு ஒரு வீடியோ பதிவு ஒன்று யூடியுப் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Youtube Link | Archived Link  Puratchi SL என்ற யூடியுப் கணக்கில் ” இலங்கை சஜித் பிரேமதாசவை பற்றி ரஜினிகாந்த் உரையாடல் (ஆங்கில […]

Continue Reading

குண்டர்களால் தாக்கப்பட்டாரா முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க?

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ரஞ்சன் ராமநாயக்க குண்டர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாவையில் அனுமதிக்கப்பட்டார் என்று சில புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  நாட்டின் அரசியல் இன்று என்ற பேஸ்புக் கணக்கில் ” குரல் வழி சர்ச்சையை தொடர்ந்து குண்டர்களால் தாக்கப்பட்டார் முன்னால் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்,” என்று  09.01.2020 அன்று பதிவேற்றம் […]

Continue Reading

ஹப்புத்தளை விபத்துக்குள்ளான விமானம் இதுவா?

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளராக முத்தையா முரளிதரன், வடமாகணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாக பல செய்திகள் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  முதல்வன் என்ற பேஸ்புக் பக்கத்தில் ” இலகுரக விமானம் வீழ்ந்து நால்வர் சாவு – ஹப்புத்தளையில் சம்பவம்” என்று  நேற்று (03.01.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. குறித்த பதிவோடு முதல்வன் செய்தி லிக்கினையும் இணைத்துள்ளமை […]

Continue Reading

வடமாகாண ஆளுநராக முரளிதரன் நியமனமா?

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன், வடமாகணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாக பல செய்திகள் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம் Facebook Link | Archived Link  Hari Haran என்ற பேஸ்புக் கணக்கில் ” நியமனம் பெற்றுள்ள தமிழர் முத்தையா முரளிதரன் அவர்களுக்கு எமதினிய வாழ்த்துக்கள்.” என்று கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் திகதி (26.11.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. […]

Continue Reading

அரச உத்தியோகஸ்தர்கள் கடமை நேரத்தில் சமூக வலைத்தளம் பாவித்தால் தண்டப்பணமா?

அரச உத்தியோகத்தர்கள் கடமை நேரத்தில் சமூக வலைத்தளம், Youtube channel போன்றவற்றில் உலவினால் ரூபாய் 5000/- தண்டப்பணம் விதிக்கப்படும் என தகவல் பேஸ்புக் பக்கத்தில் வெளியாகியிருந்தது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Try Practice Try Practice என்ற பேஸ்புக் கணக்கில் ”இன்று முதல் அரச உத்தியோகத்தர்கள் கடமை நேரத்தில் சமூக வலைத்தளம் , You tube chanell போன்றவற்றில் வலம்வந்தால் […]

Continue Reading

அரச அலுவலகத்தில் உறங்கியவருடன் செல்பி எடுத்தாரா ஜனாதிபதி?

அரச அலுவலகத்தினுள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச திடீரென சென்ற தருணம் உழைத்து களைத்து ஓய்வெடுப்பவருடன் செல்பி எடுத்த புகைப்படம் என்று இணையத்தில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  நம்ம யாழ்ப்பாணம் என்ற பேஸ்புக் பக்கத்தில் ” அரச அலுவலகத்தினுள் ஜனாதிபதி திடீரென சென்ற தருணம் உழைத்து களைத்து ஓய்வெடுப்பவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்த போது 😂😁😁😁 […]

Continue Reading

2018 ஆண்டின் சிறந்த செய்தி இணையத்தளத்திற்கான விருது யாருக்கு?

2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் விழாவில் வருடத்துக்கான சிறந்த செய்தி இணையதளத்துக்கான விருது மெட்ரோ நியூஸ் இணைய தளத்திற்கும் வீரகேசரி, விடிவெள்ளி ஆகிய இணையத்தளங்களுக்கு சிறந்த செய்தி இணையத்தளத்துக்கான திறமை சான்றிதழ் விருது கிடைத்ததுள்ளதாக தகவல் பேஸ்புக் பக்கங்களில் செய்தி பரவி வருகின்றன. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Mahendran Kutty என்ற பேஸ்புக் கணக்கில் வாழ்த்துக்கள் […]

Continue Reading

மட்டக்களப்பில் மழைக்கு முதலை வந்ததா?

தொடர் மழையின் போது மட்டக்களப்பு பகுதியில் மக்கள் வசிக்கும் வீடு பகுதிக்குள் முதலைகள் வந்ததாக புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருந்தன. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  மட்டக்களப்பு என்ற பேஸ்புக் பக்கத்தில் ” எங்க #ஊர்ல எல்லாம் 😎மழைக்கு #முதலை🐊🐊🐊 தான் டா வரும் 😁 🧐” என்று  கடந்த மாதம் 30 ஆம் திகதி (30.11.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. குறித்த பதிவில் வெவ்வேறு […]

Continue Reading

முல்லைத்தீவில் உடைந்த பாலம் இதுவா?

கடந்த வாரம் தொடர்ந்த மழையினால் பரந்தன்- முல்லைத்தீவு பிரதான வீதியிலுள்ள பாலமொன்று உடைந்ததாக புகைப்படத்துடன் செய்தி வெளியாகின. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  | News Link |  News Archived Link கிளிநொச்சி நெற்  என்ற பேஸ்புக் பக்கத்தில் ” முல்லைத்தீவு பிரதான வீதியிலுள்ள பாலம் உடைந்தது- பொதுமக்களுக்கு எச்சரிக்கை” என்று  கடந்த 6 ஆம் திகதி (06.12.2019) பதிவேற்றம் […]

Continue Reading

சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் வேண்டும் என்று வாசுதேவ முகநூலில் பதிவிட்டாரா?

இலங்கையில் நடந்தது முடிந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இலங்கை தேசிய கீதம் தொடர்பில் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அதில் வாசுதேவ நாணயக்கார சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் என தெரிவித்து பேஸ்புக்கில் பதிவிட்டதாக செய்தி வெளியாகிருந்தது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுப்பட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Fast Gossip – ஃபாஸ்ட் கிசுகிசு என்ற பேஸ்புக் பக்கத்தில் “சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம்.. […]

Continue Reading

இலங்கையில் உள்ள ராவணன் கோட்டையின் புகைப்படம்- உண்மை என்ன?

இலங்கையில் அமைந்துள்ள ராவணன் கோட்டையில் அமைந்துள்ள பாரிய படிகள் என்றும் அதை கட்டியவனும், அதில் நடந்தவனும் எத்தனை பெரிதாய் இருந்திருப்பான் என ஒரு புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பரவுவதை நாம் அவதானித்தோம். குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுப்பட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Batti memes factory என்ற பேஸ்புக் பக்கத்தில் “இலங்கை ராவணன் கோட்டை தான்… ஆனா இந்த படி எங்க இருக்கு என்டு எனக்கே தெரியல….😲😲 […]

Continue Reading

பண்டாரகொஸ்வத்தையில் முஸ்லிம் ஒருவரின் கடை எரிப்பா?

இலங்கையில் கடந்த சனிக்கிழமை (16.11.2019) அன்று நடந்த ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் கடந்த ஞாயிற்றுகிழமை அன்று உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும், குறித்த தினத்தில் முஸ்லிம் ஒருவரின் கடையெரிப்பு என செய்தி பேஸ்புக்கில் பரப்பப்பட்டுள்ளது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  SL muslim media என்ற பேஸ்புக் பக்கத்தில் “பண்டாரகொஸ்வத்தையில் முஸ்லிம் ஒருவரின் கடையெரிப்பு.” என்று கடந்த ஞாயிற்று கிழமை  (17.11.2019) பதிவேற்றம் […]

Continue Reading

தமிழில் தேசிய கீதம் பாட தடையா?

இலங்கையில் கடந்த சனிக்கிழமை (16.11.2019) அன்று நடந்த ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் இலங்கையின் ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ச கடந்த திங்கள் கிழமை (18.11.2019) பதிவி பிரமானம் செய்துகொண்டார். இதேவேளையில் சிலர் பேஸ்புக் மற்றும் சில இணையத்தளங்களில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச இலங்கை தேசிய கீதம் சிங்களத்தில் மாத்திரமே பாடவேண்டும் என தெரிவித்ததாக செய்திகள் வெளியிட்டிருந்தன. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுப்பட்டோம். தகவலின் […]

Continue Reading

மெசேஜ் ஷேர் செய்தால் 10 பைசா கிடைக்குமா?

எனக்கு இதயப் புற்று நோய் உள்ளது. இதற்கு அறுவை சிகிச்சை செய்ய 6 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு ஷேருக்கும் 10 பைசா எனக்கு கிடைக்கிறது என பேஸ்புக் பக்கத்தில் ஒரு செய்தி பரவி வருகின்றது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுப்பட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Saravana L என்ற பேஸ்புக் கணக்கில் “pls share pannunga  0771926984 என் பெயர் *NIROSA* […]

Continue Reading

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மரணமா?

இலங்கையின் தற்போதைய எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச மரணித்ததாக பேஸ்புக்கில் தகவல் பரவி வருகின்றது. இது தொடர்பான உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் எமது ஆய்வினை மேற்கொள்ள திட்டமிட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Kinniya King FirdhouZe என்ற பேஸ்புக் கணக்கில் “இலங்கை முன்னாள் ஐனாதிபதி மகிந்த ராஜபக்ஷ காலமானார். இருளில் மூழ்கியது இலங்கை“ என்று நேற்று (12.11.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. மேலும் குறித்த பதிவேற்றத்தில் EELAMALAR.COM இன் […]

Continue Reading

அம்பலன்கொடை தேர்தல் தொகுதியில் சஜித் பிரேமதாஸவுக் கூடிய மக்களா இது?

இலங்கையின் 8 ஆவது ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் மிக முக்கியமான ஜனாதிபதி தேர்தல் வருகின்ற 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. குறித்த தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவினால் காலி மாவட்டத்தில் அம்பலன்கொடை தேர்தல் தொகுதியில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு வருகை தந்த மக்கள் தொகையினர் என சில புகைப்படங்கள் பேஸ்புக் பக்கங்களில் பகிரப்படுகின்றது. இது தொடர்பான உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் எமது ஆய்வினை மேற்கொள்ள திட்டமிட்டோம். தகவலின் விவரம்: Facebook […]

Continue Reading

தமிழர்களும், முஸ்லிம்களும் உடமைகளுடன் வெளியேற வேண்டும் என ஞானசார தேரர் சொன்னாரா?

பொதுபல சேனாவின் தலைவர் கலகொட அத்த ஞானசார தேரர் ”கோட்டபாய ராஜபக்சவுக்கு வாக்களிக்காவிட்டால் தமிழர்களும், முஸ்லிம்களும் உடமைகளுடன் வெளியேற வேண்டி ஏற்படும்” என்று தெரிவித்ததாக ஒரு பதிவு பேஸ்புக் பக்கங்களில் பகிரப்பட்டு வருகின்றது. கடந்த மாதம் 30 ஆம் திகதி (30.10.2019) நடந்த ஊடக சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்தாக குறிப்பிட்டப்பட்டுள்ளது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Navaa Yugha என்ற பேஸ்புக் […]

Continue Reading

டட்யானா கையில் ஏந்தியுள்ள குழந்தை யாருடையது?

இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரான மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் – ரோஹித்த மற்றும் டட்யானா தம்பதியினருக்கு கடந்த மாதம் 30 ஆம் திகதி (30.10.2019) காலை ஆண் குழந்தை பிறந்தது. இதன்போது, டட்யானா கையில் குழந்தையினை ஏந்தியவாறு ஒரு புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Sivarajah Ramasamy என்ற பேஸ்புக் கணக்கில் “எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் […]

Continue Reading

இஸ்லாத்தை தழுவினாரா ஷிராந்தி ராஜபக்ச?

முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ச அவர்களின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ச இஸ்லாம் மதத்தினை தழுவியதாக பேஸ்புக் பக்கங்களில் பகிரப்படுகின்றது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுப்பட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Hussain Jasmeen என்ற பேஸ்புக் பக்கத்தில் “இன்று வெள்ளிக் கிழமை நல்ல நாள் என்பதால் இஸ்லாத்தை தழுவினார்.. முன்னாள் ஜனாதிபதி #மஹிந்த #ராஜபக்ச வின் மனைவி #சிறாந்தி #ராஜபக்ச !! “அல்ஹம்துலில்லாஹ”” என்று கடந்த வெள்ளிக்கிழமை […]

Continue Reading

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டாரா ஹிருனிகா?

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ஹிருனிகா பிரேமசந்திர இஸ்லாம் மதத்தினை தழுவியதாக பேஸ்புக் பக்கங்களில் பகிரப்படுகின்றது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுப்பட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Kalmunai Pasanga என்ற பேஸ்புக் பக்கத்தில் “இன்று வெள்ளி கிழமை ஜும்மாவை தொடர்ந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஹிருனிகா… அதிகமாக செயார் செய்யுங்கள்… ” என்று இன்று (25.10.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. Fact Check (உண்மை அறிவோம்)  இது […]

Continue Reading

பலாங்கொடையில் கோட்டபாய ராஜபக்ச கூட்டத்தின்போது இலங்கை கொடியில் மாற்றமா?

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டபாய ராஜபக்சவின் தேர்தல் பிரச்சார கூட்டம்  கடந்த 16 ஆம் திகதி (16.10.2019) பலாங்கொடையில் நடைப்பெற்றது. குறித்த கூட்டத்தின் போது இலங்கை தேசிய கொடியில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை குறிக்கும் பச்சை மற்றும் செம்மஞ்சள் நிறங்கள் அகற்றப்பட்ட கொடி ஏந்தியதாக பேஸ்புக் பக்கத்தில் புகைப்படங்கள் பகிரப்படுகின்றன. இது தொடர்பான உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் ஆய்வினை மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  […]

Continue Reading

முஸ்லீம் பகுதிகளின் அபிவிருத்திகளை தடுக்க, கோட்டபாயவிற்கு வாக்களிக்க வேண்டும் என்றாரா நாமல்?

கடந்த சனிக்கிழமை மன்னாரில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டபாய ராஜபக்ஷவிற்கு ஆதரவாக மேற்கொண்ட பிரசாரத்தின் போது” முஸ்லீம் பகுதிகளின் அபிவிருத்திகளை தடுப்பதற்கு, நீங்கள் கோத்தாபாயவிற்கு வாக்களிக்க வேண்டும்.” என தெரிவித்தாக UTV Tamil செய்தி வெளியிட்டிருந்தது. குறித்த செய்தி தொடர்பான உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் ஆய்வினை மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  கிரிகெட் தல என்ற பேஸ்புக் கணக்கில் […]

Continue Reading

காலிமுகத்திடல் கூட்டத்திற்காக வந்தவரை கோட்டபாய தரப்பினர் தாக்கினரா..?

இலங்கையில் தற்போது ஜனாதிபதி தேர்தலில் நிமிர்த்தமாக தேர்தல் பிரசார நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவின் முதலாவது கூட்டம் காலி முகத்திடலில் கடந்த 10 ஆம் திகதி (10.10.2019) அன்று நடைப்பெற்றது. குறித்த கூட்டத்திற்கு வந்த ஒரு நபரை தாக்கியதாக சில புகைப்படங்கள் பேஸ்புக் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. இது குறித்தான உண்மை தன்மையினை கண்டறிய நாம் ஆய்வினை மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  […]

Continue Reading

பௌத்த புனித சின்னத்தை அவமதித்த அரபு கல்லூரி மாணவர்களுக்கு பாரபட்சமின்றி தண்டனையா?

பௌத்த புனித சின்னத்தை அவமதித்த அரபு கல்லூரி மாணவர்களுக்கு பாரபட்சமின்றி தண்டனை வழங்க வேண்டும் என வீரகேசரி இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தாக ஒரு ஸ்கிரின் ஷாட் (screenshot) ஒன்று பேஸ்புக் தளத்தில் பரப்பப்பட்டு வருகின்றது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிய நாம் ஆய்வினை மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Rizal Max என்ற பேஸ்புக் கணக்கில் “பௌத்த புனித சின்னத்தை அவமதித்த அரபு கல்லூரி மாணவர்களுக்கு பாரபட்சமின்றி தண்டனை வழங்க […]

Continue Reading

கடந்த உள்ளூராட்சி தேர்தல் வாக்குகளின் எண்ணிக்கை சரியா?

இலங்கையில் தற்போது தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.  இந்நிலையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இன்று (09.10.2019) இலங்கை சுகந்திர கட்சியும் இணைந்தது. தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Niyas Shifat என்ற பேஸ்புக் கணக்கில் “கை ; மொட்டு இணைந்துள்ளது கடந்த உள்ளுராட்சி தேர்தல் வாக்குளின் கருத்துக்கணீப்பின் படி இலகுவான வெற்றியை ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபாய ராஜபக்ச பெறுவார்.-அரசியல் விமர்சகர் ஜோன் பிரீஸ்- ” என்று இன்று (09.10.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அத்துடன் […]

Continue Reading

ஜனாதிபதி தேர்தலில் அஸாத் சாலி களமிறங்குகிறாரா?

இலங்கையில் 7 ஆவது ஜனாதிபதி தேர்தல் வருகின்ற மாதம் 16 ஆம் திகதி (16.11.2019) அன்று  நடப்பெறவுள்ளது. இந்நிலையில் அஸாத் சாலி தலைமையிலான தேசிய ஐக்கிய முன்னணி அணி களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த செய்தி தொடர்பில் உண்மை தன்மையினை கண்டறிய நாம் ஆய்வினை மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Madawala News என்ற பேஸ்புக் பக்கத்தில் “ஜனாதிபதி தேர்தலில் அஸாத் சாலி தலைமையிலான நுஆ போட்டி!!” என்று கடந்த முதலாம் […]

Continue Reading

அதுரலிய ரத்ன தேரர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவா..?

இலங்கையில் 8 ஆவது ஜனாதிபதி தெரிவு செய்வதற்காக வருகின்ற மாதம் 16 ஆம் திகதி (16.11.2019) அன்று ஜனாதிபதி தேர்தல் நடப்பெறவுள்ளது. இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாச அவர்களுக்கு அதுரலிய ரத்ன தேரர் ஆதரவு வழங்குவதாக பேஸ்புக் சமூகவலைத்தளத்தில் செய்திகள் வெளிவந்துள்ளன. குறித்த செய்தி தொடர்பில் உண்மை தன்மையினை கண்டறிய நாம் ஆய்வினை மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Haala Media என்ற பேஸ்புக் பக்கத்தில் […]

Continue Reading

ஐ.தே.க வுடன் இணைந்தாரா சுசந்த புஞ்சிநிலமே..?

இலங்கையில் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச அறிவிக்கப்பட்டதன் அடுத்து சில கட்சி தாவுதல்கள் இடம்பெற்று வருகின்றனர்.  அதில்,இலங்கை சுகந்திர கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சுசந்த புஞ்சிநிலமே ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு அளிப்பதாக பேஸ்புக் சமூகவலைத்தளத்தின் ஊடாக செய்திகள் பரவி வருவது தொடர்பில் உண்மை தன்மையினை கண்டறியும் முயற்சியில் ஈடுப்பட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link […]

Continue Reading

முல்லைத்தீவில் கரையொதுங்கிய புள்ளிச்சுறா இதுவா?

இலங்கையின் முல்லைத்தீவு கடற்கரையில் கரையொதுங்கிய புள்ளி சுறாவை குறித்த பகுதி மீனவர்கள் பாதுகாப்பாக மீண்டும் கடலுக்குள் விட்டுள்ளதாக கடந்த மாதம் 4 ஆம் திகதி (04.09.2019) இணையத்தில் செய்திகள் வெளியாகியிருந்தன. அந்த செய்தியில் பகிரப்பட்ட புள்ளி சுறாவின் புகைப்படம் தொடர்பில் உண்மைதன்மையினை கண்டறியும் முயற்சியில் எம் குழு இறங்கியது. தகவலின் விவரம்: Facebook Link | Archived Link செட்டிகுளம் என்ற பேஸ்புக் பக்கத்தில் “முல்லைத்தீவு கடற்கரயில் கரையொதுங்கிய புள்ளிச்சுறா; மீனவர்கள் செயல் பாராட்டப்படவேண்டியது !” என்று […]

Continue Reading

இலங்கை தமிழர் கோயிலில் சிங்கள இனவெறித் தாக்குதலா?

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தினுள் அடாத்தாக குருகந்த புராண ரஜமகா பௌத்த விகாரை எனும் பெயரில் விகாரை அமைத்து அங்கு தங்கியிருந்த சர்ச்சைக்குரிய பௌத்த பிக்குவான மேதாலங்கார கீர்த்தி புற்று நோய் காரணமாக கொழும்பில் 21 ஆம் திகதி (21.09.2019) காலை காலமானார். அவருடைய பூதவுடலை முல்லைத்தீவுக்கு கொண்டு வந்து நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அண்மித்த பகுதியில் இறுதி கிரியைகளை முன்னெடுத்து உடலை தகனம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றன. இதனால் குறித்த பகுதியில் […]

Continue Reading

எல்ல காட்டுப்பகுதியில் தீயென பரவிய புகைப்படம் உண்மையா..?

கடந்த ஆகஸ்ட் மாதம் உலக மக்களே பேசிக் கொண்டிருந்த ஒரு சம்பவம் என்றால் அமேசான் காடுகளில் பரவிய தீ என்பது யாவரும் அறிந்த உண்மையே. அக்காலத்தில் இலங்கையில் எல்ல காட்டு பகுதியிலும் தீ பரவியதாக சில நபர்கள் பரப்பிய செய்தி நாம் காணக்கூடியதாக இருந்தது. இதன் உண்மைத்தன்மையினை நாம் கண்டறிய ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விபரம் : Nawalapitiya Memes | Archived Link Nawalapitiya Memes என்ற பேஸ்புக் பக்கத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 22 […]

Continue Reading

கோட்டபாய ராஜபக்சவை கைது செய்ய சிஐடி மனு தாக்கலா?

இலங்கை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டபாய ராஜபக்ஷவை கைது செய்ய சிஐடி தாக்கல் செய்த மனு நீதிமன்றத்தால் நிராகரிப்பு செய்யப்பட்டது என்ற செய்தி வெளியாகி சமூகவலைத்தளங்களில் இது குறித்து பரபரப்பாக பேசப்பட்டது. தகவலின் விவரம்: Madawala News | Archived Link Madawala News என்ற பேஸ்புக் பக்கம் கோட்டபாய ராஜபக்‌ஷவை கைது செய்ய C I D தாக்கல் செய்த மனு நீதிமன்றத்தால் நிராகரிப்பு என்ற செய்தியை கடந்த செப்டெம்பர் மாதம் 20 ஆம் […]

Continue Reading

கடந்த தேர்தல்களில் ஜனாதிபதிகள் பெற்ற வாக்கு சதவீதம் உண்மையா?

கடந்த கால ஜனாதிபதி தேர்தல்களில் ஜனாதிபதிகள் பெற்ற வாக்குகளின் சதவீதத்தினை கொண்ட புகைப்படம் ஒன்று பேஸ்புகில் பகிரப்பட்டு வருவதை காணக்கிடைக்கின்றது. தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Ceylon Magazine என்ற பேஸ்புக் பக்கத்தில் ”கடந்த தேர்தல்களில் ஜனாதிபதிகள் பெற்ற வாக்குகள் சதவீதம்” என்ற பதிப்போடு இலங்கை ஜனாதிபதிகளின் புகைப்படங்கள் மற்றும் அவர்கள் பெற்ற வாக்கு சதவீதங்கள் இடப்பட்ட புகைப்படம் ஒன்றும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. குறித்த பதிப்பானது கடந்த 11 ஆம் (11.09.2019) அன்று […]

Continue Reading

தெஹிவளை மிருகக் காட்சி சாலையிலிருந்து தப்பிச் சென்றதா சிங்கம்?

கொழும்பு தெஹிவளை மிருகக்காட்சி சாலையிலிருந்து சிங்கம் ஒன்று தப்பிச்சென்றுள்ளதாகவும், குறித்த சிங்கம் இரவு வேளையில் தெஹிவளை சந்தியில் திரிந்ததாக ஒரு புகைப்படத்துடன் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்ட பதிவு பலராலும் பகிரப்பட்டிருந்தது. தகவலின் விவரம்: Abdul Hakeem Sha | Archived Link Abdul Hakeem Sha என்ற நபரின் பேஸ்புக் கணக்கில் “colombo Dehiwala junction…,.. சில தினங்களுக்கு முன் – தெஹிவளை மிருகக் காட்சிசாலையிலிருந்து தப்பிச் சென்ற சிங்கம் தெஹிவளை சந்தியால் இரவில் வலம் வரும் […]

Continue Reading