
தற்போது IPL தொடர் நடைபெற்றுவரும் நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவரான ஹர்திக் பாண்டியா இந்திய நடிகையான ராஷ்மிகா மந்தனாவுடன் இருப்பதை போன்ற புகைப்படமொன்று தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் காண முடிந்தது.
எனவே இது தொடர்பான உண்மை அறியும் நோக்கில் ஃபெகட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
குறித்த பதவில் ஹர்திக் பாண்டியா மற்றும் CSK பெண் ரசிகர் என தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.03.27 ஆம் திகதி பதிவேற்றப் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
மேற்குறிப்பிட்ட சமூக ஊடகப் பதிவில் பதிவேற்றப்பட்டிருந்த புகைப்படங்களில் ஒன்றில் ஹர்திக் பாண்டியாவுடன் இந்திய நடிகையான ராஷ்மிகாவும் மற்றைய புகைப்படத்தில் ராஷ்மிகாவின் முக சாயலை ஒத்த மற்றுமொரு பெண்ணும் காணப்பட்டனர்.
எனவே நாம் இந்த புகைப்படங்களை பார்க்கும் போது அவை இயற்கைக்கு மாறாக தென்பட்டமையினால் நாம் குறித்த புகைப்படத்தினை AI Detective Tool ஐ பயன்படுத்தி ஆய்வு செய்த போது குறித்த புகைப்படமானது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.
எனினும் நாம் குறித்த புகைப்படம் தொடர்பில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் இன்ஸ்டகிராம் பக்கத்தை ஆராய்ந்த போது அதில் ஹர்திக் பாண்டியாவுடன் எடுத்துக்கொண்ட எந்தவித புகைப்படங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கவில்லை.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion (முடிவு)
மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் குறித்த சமூக ஊடகப் பதிவில் முப்பை இந்தியன்ஸ் அணியின் தலைவரான ஹர்த்திக் பாண்டியாவுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகை என தெரிவிக்கப்பட்டு பகிரப்பட்ட புகைப்படம் போலியானது என்பதுடன் குறித்த புகைப்படம் செய்ற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டமையும் தெளிவாகின்றது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:CSK ரசிகை ராஷ்மிகா ஹர்திக் பாண்டியாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டாரா?
Fact Check By: suji shabeedharanResult: False
