
INTRO :
சந்திராயன் 3 அனுப்பிய பூமியின் புகைப்படம் என சமூக வலைத்தளங்களில் புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் “#viralpost | நிலவிலிருந்து சந்திரயான் 3 அனுப்பிய புகைப்படம்…
நான்கு லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நமது பூமி.🌍
#RJSaru #BreakingNews “ என இம் மாதம் 27 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு (27.08.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இது தொடர்பாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்ட போது, முதலில் சந்திராயன் 3 தொடர்பாக உத்தியோகப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டும் இஸ்ரோவின் X சமூகவலைத்தளத்தினை நாம் ஆய்வு செய்தபோது, இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றவாறு நிலவில் இருந்து பூமி தென்படும் எவ்விதமான புகைப்படங்களையும் அவர்கள் வெளியிடவில்லை என்பது உறுதியானது.
அவர்கள் இதுவரையில் நிலவின் மேற்பரப்பு தோற்றம் மற்றும் ரோவர் நிலவில் பயணித்த பாதையின் தடம் மற்றும் விக்ரம் லேன்டரின் புகைப்படங்களை வெளியிட்டிருந்தமை காணக்கிடைத்து.
மேலும் இணையத்தில் வைரலாகியுள்ள குறித்த புகைப்படத்தினை நாம் கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வுசெய்த போது, wionews.com என்ற ஊடகம் சந்திரயான் 3 நிலவில் தரையிறங்குவதற்கு முன்னதாகவே நிலவின் மேற்பரப்பில் இருந்து பூமியை பார்த்தால் எப்படி இருக்கும் என்று செயற்கை நுண்ணறிவைப் (AI Technology ) பயன்படுத்தி உருவாக்கப்பட்ட படங்கள் என்று குறிப்பிட்டுப் பதிவை வெளியிட்டிருப்பது காணக்கிடைத்தது.

நாம் மேற்கொண்ட ஆய்வறிக்கையின் படி, சந்திரயான் 3 அனுப்பிய பூமியின் புகைப்படம் என தெரிவித்து இணையத்தில் பகிரப்படும் புகைப்படம் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட படம் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
இது தொடர்பாக எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:சந்திரயான் 3 அனுப்பிய பூமியின் புகைப்படம் என பரவும் புகைப்படம் உண்மையா?
Written By: S G PrabuResult: False

Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team