
கடந்த நாட்களில் தித்வா புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையினால், மொரகஹகந்த நீர்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டன. அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக, மொரகஹகந்த அணைக்கு முன்பாக (மொரகஹகந்த – களுகங்கை ஆற்றோற்ட்டத்தின், அம்பன் கங்கைக்கு மேல் பகுதியில் அமைந்துள்ள) பாலம் உடைந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின.
எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):

மொரகஹகந்த பாலம் தற்போதைய நிலை என தெரிவித்து கடந்த 2025.11.28 ஆம் திகதி குறித்த படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது.
மேலும் பலரும் அதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை எம்மால் காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
Explainer (விளக்கமளித்தல்)
இருப்பினும், இடிந்து விழுந்தது மொரகஹகந்த-லக்கல பாலம் அல்ல, எனவும் மாறாக பாலத்தின் வலது பக்கத்தில் உள்ள பாதையும் கரையுமே இவ்வாறு சேதமடைந்துள்ளது என மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் படிப்படியாக மூடப்பட்டு நீர்மட்டம் குறைந்து வருவதுடன், சமூக ஊடக பயனர்கள் அங்கு எடுக்கப்பட்ட காட்சிகளுடன் சுட்டிக்காட்டுகின்றனர்.

மகாவலி அதிகாரசபையின் பிரதான அணைகள் மற்றும் நீர்த்தேக்க செயல்பாட்டு பணிப்பாளர்
எனவே இது தொடர்பான தெளிவினைபெற்றுக்கொள்ள, மகாவலி அதிகாரசபையின் பிரதான அணைகள் மற்றும் நீர்த்தேக்க செயல்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் டி.எம். தர்மதாசவை நாம் தொடர்புகொண்டு வினவியிருந்தோம்.
இதன்போது, மொரகஹகந்த பாலம் சேதமடையவில்லை, ஆனால் நீர் பாய்ந்த திசையில் இருந்து பார்க்கும்போது வலது பக்கம் பாலத்திற்குச் செல்லும் பாதையின் ஒரு பகுதி உடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
பிராந்திய ஊடகவியலாளர்கள்
இது குறித்து நாம் மாத்தளையைச் சேர்ந்த சில ஊடகவியலாளர்களிடம் வினவினோம், இதன்போது மொரகஹகந்த பாலம் உடையவில்லை எனவும், மாறாக அதை இணைக்கும் பாதையின் ஒரு பகுதியே இவ்வாறு உடைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும் மொரகஹகந்த-களுகங்கை-ஹெட்டிபொல வீதியின் அம்பன் கங்கைக்கு மேலே உள்ள பாலம் உடைந்ததாகக் கூறப்பட்டாலும், உடைந்திருப்பது அந்த பாலம் அல்ல, மாறாக மண் அணையின் ஒரு பகுதியே உடைந்துள்ளதாக ஊடகவியலாளர் ருமேஷ் வீரசேகர தெரிவித்தார். இதைக் தெளிவுப்படுத்த அவர் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார். புகைப்படத்தை ஆராயும்போது, பாலத்தின் முனை உடைந்த நிலத்துடன் இணைக்கும் பகுதியைக் காண முடிகிறது.
பாலத்தின் தற்போதைய நிலையைக் காட்டும் மற்றொரு காணொளி சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தது. அதில் இருந்த காட்சி பின்வருவமாறு

பாலத்தின் அடிக்குச் செல்லும் பாதை வெள்ளத்தால் சேதமடைந்துள்ளதாகவும், ஆனால் பாலம் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை என்றும் ஊடகவியலாளர் ருமேஷ் வீரசேகர கூறினார். மகாவலி அதிகாரசபையின் பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் வந்து பாலத்தை மீண்டும் அளவீடு செய்துள்ளதாகவும், பாலம் வெள்ளத்தால் சேதமடையவில்லை என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். இது தொடர்பான காணொளியும் அவரது பேஸ்புக் பக்கத்தில் பின்வருமாறு பதிவேற்றப்பட்டிருந்தது.
2024 ஆம் ஆண்டு மொரகஹகந்த பாலத்தில் எடுக்கப்பட்ட ஒரு காணொளி பின்வருமாறு.
மேலே உள்ள காணொளியை நன்கு ஆராயும்போது, பாலத்தின் இரண்டு தூண்கள் பாலத்தின் நடுவில் அமைந்திருப்பதை காணமுடிகின்றது.

மொரகஹகந்த பாலத்தில் வீதி இடிந்து விழுந்த பிறகு பதிவு செய்யப்பட்ட காணொளியிலிருந்து நாங்கள் பெற்ற screenshot ஐ (Flip செய்யப்பட்டுள்ளது) ஆய்வு செய்தபோது, மேலே உள்ள பாலத்தின் நடுவில் இரண்டு பாலத் தூண்கள் தெரியும்படி இருந்தது, மேலும் 1 எனக் குறிக்கப்பட்ட பாலத் தூணின் முன்னாள் உள்ள பகுதிக்கு பின் தெரியும் வீதியுடன் இணைக்கப்பட்ட பஸ் தடுப்பு இடிந்து விழுந்திருப்பதைக் காண முடிந்தது.

Google Maps மூலம் அதை ஆராயும்போது, பாலத்துடன் இணைக்கும் பகுதி, பாலத்திற்குப் பின் உள்ள வளைவு மற்றும் அதற்குப் பின் உள்ள பகுதி உட்பட, ஒரு பெரிய மண் மேடு உடைந்திருப்பதைக் காணலாம். (உடைந்த மண் பகுதி மற்றும் பாலம் நிலத்துடன் இணைக்கப்பட்ட பகுதி சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது)

இது தொடர்பில் கிடைக்கப்பெறும் மேலதிக தகவல்களுடன் இந்த கட்டுரையை புதுப்பிக்க காத்திருக்கின்றோம்.
எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.
Title:மொரகஹகந்த பாலம் உடைந்ததாக பகிரப்படும் தகவலின் உண்மை என்ன?
Fact Check By: Suji shabeedharanResult: Insight


