INTRO :
இலங்கைக்கு வந்தவரின் நிலை என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் இந்த நாட்டுக்கு Trip வந்தவன் எல்லாமே பிச்சைக்காரனா மாருரானே கடவுளே “ என கடந்த வரும் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி (10.12.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

முதலில் நாம் குறித்த புகைப்படத்தினை பார்வையிட்ட போது இது பட்டிபொல புகையிரத நிலையம் என்பது எம்மால் உறுதி செய்யப்பட்டது.

அம்பேவெல புகையிரத நிலையத்திற்கும் ஒஹிய புகையிரத நிலையத்திற்கும் இடையில் அமைந்துள்ள பட்டிபொல புகையிரத நிலையத்தின் பொறுப்பதிகாரியான சுரங்க சேனாதீரவிடம் எமது குழுவினர் தொடர்புகொண்டு இது தொடர்பாக விசாரித்தனர்.

இணையத்தில் பகிரப்படும் குறித்த புகைப்படமானது 2018 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகவும், இதனை தவறான கருத்தில் இணையவாசிகள் தற்போது பகிரந்து வருவதாகவும் அவர் எமக்கு தெரிவித்தார்.

மத்திய மாகாண சபையின் கலாசார, சுற்றுலா, வியாபாரம் மற்றும் வர்த்தகம் தொடர்பான அமைச்சு , புகையிரத திணைக்களத்துடன் இணைந்து 2014 ஆம் ஆண்டு பட்டிப்பொல புகையிரத நிலையத்தில் சுற்றுலா வசதி நிலையமொன்றை அமைத்துள்ளது.

இது குறித்த புகையிரத நிலையத்தின் பெயர் பலகைக்கு அருகாமையில் நிலத்திற்கு கீழ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

ஆயினும் குறித்த இடத்திற்கு வருகை தரும் வெளிநாட்டு பயணிகள் அங்கு இருக்கும் இயற்கையினை ரசிக்க இவ்வாறு பொது வெளியில் தான் அதிகம் ஓய்வு எடுப்பதாக அவர் எமது குழுவிற்கு தெரிவித்தார்.

மேலதிக தகவல்களுக்காக எமது குழுவினர் மத்திய மாகாண சுற்றுலாத் திணைக்களத்தின் நுவரெலியா பிரதேச அதிகாரி திருமதி ஷிராணி ஹெட்டியாராச்சி அவர்களையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது தொடர்பாக வினவினோம்.

மத்திய மாகாண சுற்றுலாத் திணைக்களத்தினால் புகையிரத நிலையங்களில் ஓய்வறைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றின் பராமரிப்பு சம்பந்தப்பட்ட நிலையங்களால் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட குறித்த புகைப்படம் 2018 இல் எடுக்கப்பட்டது என்றும், ஏற்கனவே அந்த நிலையத்தில் சுற்றுலா மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.

இருப்பினும், பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் நிலையத்தின் இயற்கை அழகை ரசிப்பதில் ஆர்வம் அதிகம் கொண்டமையினால் வெளியில் நேரத்தை செலவிடுவதாகவும், இதனால் அவர்கள் பெரும்பாலும் ஓய்வறைக்கு வெளியே தங்குவதாகவும் அவர் கூறினார்.

எனினும் 2018 ஆம் ஆண்டு சமூக வலைத்தளங்களில் பரவிய இந்தப் புகைப்படம் காரணமாக அப்போதைய சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க விசேட குழுவொன்றை பட்டிபொல புகையிரத நிலையத்திற்கு அனுப்பி இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டார்.

சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் சுற்றுலா பயணிகள் ஓய்வறை பாழடைந்த நிலையில் இல்லை என தெரிவித்தனர். ரயில்வே திணைக்களம் அதன் மேம்பாடுகளில் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும், தளத்தை முறையாக பராமரிக்க ஊழியர்கள் 24 மணி நேரமும் உழைத்து வருவதாகவும் அவர் எமக்கு தெரிவித்தார். இது தொடர்பாக வெளியான செய்தி பின்வருமாறு.

ft.lk | Archived Link

எனவே நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், சுற்றுலா மையங்களில் வசதியின்மையால் தள்ளுவண்டியில் ஓய்வெடுக்கும் வெளிநாட்டவர் என பகிரப்படும் புகைப்படம் போலியானது என்று கண்டறியப்பட்டுள்ளது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel

இது தொடர்பாக எமது சிங்கள பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:Fact Check : சுற்றுலா மையங்களில் வசதியின்மையால் தள்ளுவண்டியில் ஓய்வெடுக்கும் வெளிநாட்டவரா?

Fact Check By: S G Prabu

Result: Misleading