செம்மணி மனித புதைக்குழியில் குழந்தையை தாய் அணைத்தப்படி மனித எச்சம் கிடைக்கப்பெற்றதா?

இலங்கை | Sri Lanka
Facebook-07-02-2025_10_55_AM.png


INTRO :

செம்மணி மனித புதைக்குழியில் குழந்தையை தாய் அணைத்தப்படி மனித எச்சம் கண்டுபிடிக்கப்பட்டதாக ஒரு புகைப்படமொன்று சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின்விவரம் (What is the claim):

Rj-Thushanthan-செம்மணி-அன்னையின்-அன்பு-குருதி-காய்ந்து-Facebook-07-02-2025_11_16_AM.png

 Facebook Link  | Archived Link


சமூகவலைத்தளங்களில் “🥹செம்மணி 🥹
அன்னையின் அன்பு ❤

குருதி காய்ந்து, சதை மட்கி,
காலம் உருவத்தைச் சிதைத்த பின்னும்,
அரவணைப்பு மட்டும் அப்படியே உள்ளது – அது
அன்னை எனும் சொல்லின் மெய்யே உள்ளது. “என கடந்த மாதம் 28 ஆம் திகதி 2025 ஆம் ஆண்டு  (28.07.2025) பதிவேற்றம்செய்யப்பட்டிருந்தது. 

இதுஉண்மையெனநினைத்துபலர்பகிர்ந்திருந்தமையும்காணக்கிடைத்தது.

Fact Check (உண்மைஅறிவோம்)

யாழ்ப்பாணம் செம்மணி பிரதேசத்தின் மனித புதைக்குழு தொடர்பாக அகழ்வாராய்ச்சிகள் தற்போது இடம்பெற்று வருகின்ற நிலையில், குறித்த பகுதியில் குழந்தையினை தாய் மார்போடு அணைத்தபடி மனித எச்சங்கள் மீட்கப்பட்டதாக தெரிவித்து ஒரு புகைப்படம் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

இது தொடர்பாக நாம் உண்மைத்தன்மையினை கண்டறிய குறித்த பகுதியில் இருக்கும் ஊடகவியலாளர்களை தொடர்புக்கொண்டு வினவியபோது, அவ்வாறான எவ்விதமான மனித எச்சங்களும் தற்போது வரை மீட்கப்படவில்லை என தெரிவித்தனர்.

குறித்த அகழ்வாராய்ச்சி பிரதேசத்தில் புகைப்படங்கள் வெளியிடும் பிரபாகரன் டிலக்சனை நாம் தொடர்புக்கொண்டு வினவியபோது, குறித்த புகைப்படமானது போலியானது எனவும், இது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என தெரிவித்தார்.

மேலும் செம்மணி மனித புதைகுழியில் அடையாளம் காணப்படும் என்புத் தொகுதிகளுக்கு மாற்றீடாக செயற்கை நுண்ணறிவினை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தங்களில் தொடர்ச்சியாக பகிர்பவர்கள் மீது, நிலுவையில் உள்ள வழக்கில் நீதிமன்றத்தினை அவமதித்தார் என்ற அடிப்படையில் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என செம்மணி புதைகுழி வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தமையும் எம்மால் காணக்கிடைத்தது

மேலும் நாம் இது தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸ் பிரிவினை தொடர்புக்கொண்டு வினவியபோது, அவ்வாறான எவ்விதமான எச்சங்களும் மீட்கப்படவில்லை என தெரிவித்தனர். 

நாம் குறித்த புகைப்படத்தினை செயற்கை நுண்ணறிவு கண்டறியும் tool இணை பயன்படுத்தி ஆய்வு செய்தபோது, குறித்த புகைப்படமானது செயற்கை நுண்ணறிவினை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என கண்டறியப்பட்டது.

-wasitai-·-AI-image-detector-07-02-2025_08_06_PM.png

இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் செம்மணி மனித புதைக்குழியில் குழந்தையை தாய் அணைத்தப்படி மனித எச்சம் கிடைக்கப்பெற்றதாக பரவும் தகவலானது செயற்கை நுண்ணறிவினை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என கண்டறியப்பட்டுள்ளது.

எங்களதுசமூகவலைதளபக்கங்களைபின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok

Conclusion: முடிவு

எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Avatar

Title:செம்மணி மனித புதைக்குழியில் குழந்தையை தாய் அணைத்தப்படி மனித எச்சம் கிடைக்கப்பெற்றதா?

Written By: S G Prabu  

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *