முதலைகள் நீரில் மூழ்குவது போல் நடித்து மனிதர்களை வேட்டையாடும் என பரவும் காணொளி உண்மையா?

Insight சர்வதேசம் | International


INTRO:

முதலைகள் நீரில் மூழ்குவது போல் நடித்து மனிதர்களை வேட்டையாடும் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link  | Archived Link 

சமூக வலைத்தளங்களில் “இந்தோனேசியாவில் முதலைகள் மனிதர்களை வேட்டையாட நீரில் மூழ்குவது போல் நடிக்கக் கற்றுக்கொண்டுள்ளன.

”இம் மாதம் 06 ஆம் திகதி 2025 ஆம் ஆண்டு (06.05.2025) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்) 

இந்தோனேசியாவின் Barito நதியில் நீந்திய முதலையின் விசித்திரமான நடத்தையைக் வெளிகாட்டும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

அதன் படி, ஒரு முதலை நீரில் மூழ்கும் மனிதனைப் போல தண்ணீரில் சுற்றித் திரிந்து, தண்ணீருக்கு மேலே தனது கைகளை உயர்த்தி, தன்னை மீட்க வரும் நபர்களை வேட்டையாடுகின்றது என கருத்துக்கள் பதிவேற்றி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

முதலைகள் அவற்றின் புத்திசாலித்தனத்திற்கு பெயர் பெற்றவை, மேலும் அவை “நவீன வேட்டைக்காரர்கள்” என கருதப்படுகின்றன, ஆனால் அவை மனிதர்களை வேண்டுமென்றே தண்ணீருக்குள் இழுக்கும் விதமாக நடிக்கும் என்ற கருத்தை நிபுணர்கள் நிராகரித்துள்ளனர்.

அதன்படி, மிசோரி பல்கலைக்கழகத்தின் நோயியல் மற்றும் உடற்கூறியல் அறிவியல் பேராசிரியர் கேசி ஹாலிடே, முதலைகள் வேண்டுமென்றே செயல்படுகின்றன என்று சொல்வது ஒரு “பைத்தியக்காரத்தனமான” கருத்து என தெரிவித்துள்ளார்.

LAD பைபிள் வலைத்தளத்தின் அறிக்கையின்படி, விலங்கியல் நிபுணர் கிரஹாம் வெப் இந்த யோசனை முற்றிலும் கற்பனையானது என்றும் உண்மையில் எந்த அடிப்படையும் இல்லை என்றும் கூறியுள்ளார். முதலையின் வாலை வேறொரு விலங்கு பிடித்தது அல்லது அது சாதாரணமாக நீந்த முடியாமல் தத்தளித்த போது எடுக்கப்பட்ட காணொளியாக இருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


அவுஸ்திரேலியாவில் உள்ள சார்லஸ் டார்வின் பல்கலைக்கழகத்தில் முதலை நிபுணரான பிராண்டன் சைட்லியூ கூறுகையில், முதலையின் வாயில் இரை (உணவு) இருந்திருக்கலாம், அதனால் தான் அது இவ்வளவு அசாதாரண நடத்தையைக் கொண்டிருக்கலாம்.

சில ஆறுகளில் முதலைகள் நீருக்கடியில் வட்டமிடுவதைக் தான் கண்டதாகவும், அது குறித்து மேற்கொண்ட அவதானிப்புகளின்படி, முதலைகளின் தாடைகளில் உணவை வைத்திருக்கும் போது கைகளை உயர்த்திப் பிடிப்பது போல் தோன்றலாம் என்றும், இந்த சம்பவத்தில், முதலையின் வாயில் பல இரை பொருட்கள் இருந்திருக்கலாம் அல்லது ஒரு நரம்பியல் நிலையாக இருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

‘அசாதாரண’ நடத்தையை முன்பு பார்த்திருந்தாலும், அதற்கெல்லாம் ஒரு நியாயமான விளக்கம் இருப்பதாகவும், முதலைகள் மிகவும் புத்திசாலியாக இருந்தாலும், அவை இரையை ஈர்க்க நீரில் மூழ்கி நடித்து நபரைப் பிடிக்காது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

குறித்த காணொளியுடன் தொடர்புப்படுத்தி பரவுகின்ற தவறான தகவல்கள் முதலைகளை எண்ணிக்கையை பாதிக்கும் அளவிற்கு செல்ல முடியும் என தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவை விட குறைவான முதலைகளைக் கொண்ட இந்தோனேசியாவில் ஆண்டுதோறும் சுமார் 100 பேர் முதலைகளால் கொல்லப்படுகிறார்கள் என்று நிபுணர் தெரிவித்தார்.


முதலைகள் நீரில் மூழ்குவது போல் நடித்து மனிதர்களை வேட்டையாடும் சம்பவங்கள் ஏதேனும் பதிவாகியுள்ளதா?

உலகளவில் ஆண்டுதோறும் சுமார் 1000 முதலைகள் இறப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

முதலைகளால் ஏற்படும் மிகக் கடுமையான மரணங்கள் பெரும்பாலும் முதலைகள் அதிக எண்ணிக்கையிலும் மனித நடமாட்டத்திலும் உள்ள பகுதிகளிலே நிகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் உலகளவில் முதலை தாக்குதல்களில் மரணங்கள் அதிகம் இந்தோனேசியாவில் இடம்பெறுவதாகவும், அதிலும் குஸ்டாவ் என்ற முதலையினால் மாத்திரம் புருண்டியில் 300க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.

Source | Source

இருப்பினும் முதலைகள் நீரில் மூழ்குவது போல் நடித்து மனிதர்களை வேட்டையாடுவதாக உலகில் எந்த ஆதாரமும் பதிவு செய்யப்படவில்லை.

இலங்கையில் முதலைகளால் உயிரிழப்புகள்

நாட்டில் மனிதர்கள் மற்றும் வனவிலங்கு இடையேயான மோதல்களுடன் ஒப்பிடும் போது முதலை தாக்குதல்கள் ஒப்பீட்டளவில் அரிதானவை. இருப்பினும், 2017 இல் அருகம் விரிகுடாவில் ஒரு பிரிட்டிஷ் பத்திரிகையாளரின் மரணம் மற்றும் 2020 இல் நில்வலா நதியில் ஒரு பொலிஸ் அதிகாரியின் மரணம் உள்ளிட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

Source | Source

இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், முதலைகள் நீரில் மூழ்குவது போல் நடித்து மனிதர்களை வேட்டையாடும் யுத்தி என பரவும் வீடியோ தொடர்பாக எவ்விதமான ஆதாரங்களும் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion: முடிவு

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:முதலைகள் நீரில் மூழ்குவது போல் நடித்து மனிதர்களை வேட்டையாடும் என பரவும் காணொளி உண்மையா?

Written By: S.G.Prabu 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *