
INTRO :
மெக்சிகோ பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாட்டு மக்கள் வறுமையில் உள்ளதாக கூறி தனது உடைகளை ஒவ்வொன்றாக களைந்தார் என ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

“ மெக்சிகோ பாராளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவர் விவாதத்தின் போது தன்னுடைய உடைகளை ஒவ்வொன்றாக களைந்தார்.
“என்னை பார்க்க உங்களுக்கு வெட்கமாக, கேவலமாக இருக்கிறது, ஆனால் உங்களுக்கு நம் மக்களை தெருக்களில் நிர்வாணமாக, காலில் செருப்பில்லால், வேலையில்லாமல், பசியுடன் ஆதரவற்ற நிலையில் பார்க்கும் போது வெட்கமாக இல்லை, அவர்களிடம் இருந்த எல்லா பணத்தையும் உடமைகளையும் பறித்து தெருவில் நிற்க வைத்த போது கேவலமாக இல்லை“ என்றார்
இங்கேயும் சில ஜென்மங்கள் இருக்கே மயிலு வாத்து நாய் தஞ்சாவூர் பொம்மை சொல்லிகிட்டு” என கடந்த வருடம் ஒக்டோம்பர் மாதம் 15 ஆம் திகதி பதிவிட்டுள்ளனர். (15.10.2020) இது மீண்டும் தற்போது மக்கள் மத்தியில் பரவி வருகின்றமை காணக்கிடைத்தது.
இது உண்மையென நம்பி பலரும் இதனை பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
இணையத்தில் பகிரப்பட்டு வருகின்ற குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் புகைப்படத்தினை நாம் கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வுக்கு உட்படுத்திய போது, இது மெக்சிகன் நாட்டில் எழுந்த எண்ணெய் துறை தொடர்பாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவிற்கு எதிர்ப்பினை வெளிகாட்ட பிஆர்டி-யைச் சேர்ந்த அமைச்சர் அன்டோனியா கார்சியா கோனேஜோ, குறித்த முன்மொழியினை நிராகரிப்பதைக் காட்ட அவருடைய ஆடைகளை கழட்டி உள்ளாடையுடன் நின்றுள்ளார்.
இது குறித்து பிபிசி இணையத்தளம் வெளியிட்டிருந்த செய்தி அறிக்கை எமக்கு கிடைக்கப்பெற்றது.
குறித்த செய்தி அறிக்கையின் படி 2013 ஆம் ஆண்டு மெக்சிகோவின் ஆளும் கட்சி தனியார் நிறுவனங்களுக்கு மசகு எண்ணெய் எடுப்பதற்கு அனுமதி அளிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட யோசனைக்கு எதிராக இவர் இவ்வாறு ஆடைகளை களைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது

குறித்த உரையினை அவர் நிகழ்த்தும் போது எடுக்கப்பட்ட வீடியோவும் எமக்கு கிடைக்கப்பெற்றது.
நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், மெக்சிகோ பாராளுமன்ற உறுப்பினர் நாட்டு மக்கள் படும் கஷ்டம் தொடர்பாக பாராளுமன்றத்தில் உடைகளை களைந்தார் என பகிரப்படும் செய்தி முற்றிலும் போலியானது என்று கண்டறியப்பட்டுள்ளது.
எமது சிங்கள பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும்
வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:மெக்சிகோ பாராளுமன்ற உறுப்பினர் எதற்காக ஆடைகளை களைந்தார் தெரியுமா?
Fact Check By: Nelson ManiResult: Misleading