கொரோனா பரவல் காரணமாக பாடசாலை விடுமுறை அறிவிக்கப்பட்டதா?

Misleading இலங்கை | Sri Lanka

INTRO :
கொரோனா பரவல் காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

tiktok Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் ” விசேட செய்தி 🤭🤭🤭#happy🙈🙈mood “ என இம் மாதம் 08 ஆம் திகதி (08.03.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

இதில் பலர் குறித்த செய்தி புதியதா என்ற கேள்விகள் வினவியுள்ளமையும் காணக்கிடைத்தது.

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

நாம் மேற்கொண்ட தேடலின் போது இது 2021 ஆம் காலப்பகுதியில் கொரோனா பரவலின் போது வெளியான செய்தி என கண்டறியப்பட்டது.

நாம் குறித்த வீடியோ பதிவினை யுடியூப் தளத்தில் மேற்கொண்ட தேடலின் போது கண்டறிந்தோம். 

அதற்கமைய இது கடந்த 2021 ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி அன்று வெளியான பழைய செய்தியினை தற்போது வெளியானதை போன்று மீண்டும் பகிர்ந்து வருகின்றமை உறுதி செய்யப்பட்டது.

எனவே நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், கொரோனா பரவல் காரணமாக பாடசாலை விடுமுறை அறிவிக்கப்பட்டது என்று பரவும்  டிக்டொக் வீடியோ போலியான ஒன்று என உறுதி செய்யப்பட்டுள்ளது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:கொரோனா பரவல் காரணமாக பாடசாலை விடுமுறை அறிவிக்கப்பட்டதா?

Fact Check By: S G Prabu 

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *