INTRO :
அவுஸ்ரேலியா 2022 ஜனவரியை தமிழ் மரபு மாதம் என கூறி தபால் தலை வெளியிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்கள் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் ” ஆஸ்திரேலியா தை மாதம் தமிழ் மரபு மாதம் என்று அறிவித்து,தபால் தலை வெளியிட்டு, திருவள்ளுவரையும், திருக்குறளையும், பொங்கல் விழா மரபுகளையும் போற்றி சிறப்பித்துள்ளது 🙏 “ என இம்மாதம் 14 ஆம் திகதி (14.01.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

நமது குழுவினர் இது தொடர்பாக அவுஸ்ரேலியா தபால் திணைக்களத்தினை தொடர்புக்கொண்டு வினவினோம். அவர்கள் இது பிரத்யேகமாக விண்ணப்பிக்கப்பட்ட தபால் தலை என அறிவித்தனர்.

https://auspost.com.au/

இதனை அவர்களின் இணையத்தள பக்கத்தின் மூலம் விண்ணப்பிக்கம் முடியம் என்றும், அதற்காக சில விதிமுறைகளும் உள்ளன எனவும் எமக்கு அறிய தந்தார்கள்.

மேலும், குறித்த தபால் தலையினை அவுஸ்ரேலிய தபால் நிலையங்களில் எதிலும் வாங்குவதற்கு இல்லை எனவும், இது பொது பாவணைக்காக வெளியிடப்படவில்லை எனவும் தெரிவித்தனர். ஆகவே இது தபால் தலை வெளியீடு இல்லை என அவர்கள் எமக்கு விளக்கமளித்தனர்.

அவுஸ்ரேலிய தபால் தலை வெளியீட்டு பணியகம் அவுஸ்ரேலிய முத்திரை வெளியீட்டுத் திட்டம் மற்றும் அவுஸ்ரேலிய முத்திரை வெளியீட்டுக் கொள்கையின் எல்லைக்குள் முத்திரைகளை வெளியிடுகிறது. குறித்த தபால் தலையானது அவுஸ்ரேலியாவுடன் தொடர்புடைய விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் வெளியீடு செய்யப்படும் எனவும் எமக்கு அறியப்படுத்தினர்.

மேலும் 65c தபால் தலையின் விலையானது கிறிஸ்மஸ் அட்டை அனுப்பும் காலத்திற்கு நவம்பர் 1 முதல் டிசம்பர் 31 வரை மட்டுமே கிடைக்கும் என்பதையும், குறித்த திகதிக்கு பின்னர் தபால்களுக்குப் பயன்படுத்த முடியாது என்பதையும் அவர்கள் எமக்கு உறுதி படுத்தினர்.

அவுஸ்ரேலியாவில் தமிழ் மரபு மாதம் என்று பாராளுமன்றத்தில் அல்லது அதன் அரசாங்கத்தினாலோ எவ்விதமான அறிவிப்பு விடுத்துள்ளதாக செய்திகள் எமக்கு கிடைக்கவில்லை. மாறாக கனடா மற்றும் லண்டன் நாடுகளில் இவ்வாறான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளமை காணக்கிடைத்தது.

The News Minute Link | Tamil Guardian Link I London.gov.uk press release

FactCheck: ஆஸ்திரேலிய அரசு 2022 ஜனவரியை தமிழ் மரபு மாதம் என்று கூறி அஞ்சல் தலை வெளியிட்டதா?

எனவே நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், 823 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் பெப்ரவரி மாதம் என பகிரப்படும் தகவலில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:அவுஸ்ரேலியா 2022 ஜனவரியை தமிழ் மரபு மாதம் என கூறி தபால் தலை வெளியிட்டதா?

Fact Check By: S G Prabu

Result: False