
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் ” இலங்கை கிரிக்கெட் தனது புதிய வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக பிரட் லீயை தேர்வு செய்துள்ளது. ஆஸ்திரேலிய தொடருக்கு பிறகு அவர் அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. “ என இம் மாதம் 22 ஆம் திகதி 2022 ஆம் ஆண்டு (22.10.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் முதலில் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசகராக அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பிரட் லீ நியமிக்கப்பட்டுள்ளதாக செய்தி எதும் நம்பகத்தனமான ஊடகங்களில் வெளியாகியுள்ளதாக அவதானித்தோம்.
2019 ஆம் ஆண்டில் இதே போன்ற செய்தி ஊடகங்களில் வெளியாகியிருந்தமை எம்மால் காணக்கிடைத்தது.
Island cricket | Archived Link
Hiru news | Archived link
எனினும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து ஆலோசகராக பிரட் லீ நியமிக்கப்படவில்லை என்பது எமது ஆரம்ப ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது.
மேலும், இதனை நாம் உறுதி செய்துகொள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் ஊடக முகாமையாளரான பிரசன்ன ரோட்ரிகோவிடம் வினவிய போது, அவுஸ்ரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான பிரட் லீ உடன் அவ்வாறான எந்தவிதமான பேச்சும் இல்லை என்பதோடு, அவரை வேகப்பந்து பயிற்சியாளராக சேர்க்கும் எண்ணமுமில்லை என தெரிவித்தார்.
இவ்வருட T20 உலகக்கோப்பை தொடரில் கிறிஸ் சில்வர் ஹூட் தலைமை பயிற்றுவிப்பாளராகவும், நவீத் நவாஸ் உதவிப் பயிற்றுவிப்பாளராகவும், மஹேல ஜயவர்த்தன நிபுணத்துவப் பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியில் இணைந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், தர்ஷன கமகே தற்போது இலங்கையின் வேகப்பந்து பயிற்றுவிப்பாளராகவும், பியால் விஜேதுங்க சுழற்பந்து பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றி வருகின்றனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து பயிற்றுவிப்பாளராக பிரட் லீ செயல்படப் போகிறாரா என்பதை அறிய அவரது உத்தியோகபூர்வ சமூக ஊடக கணக்குகளை நாங்கள் ஆய்வு செய்த போது, அவருடைய உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கிலும் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் கணக்கிலும் அத்தகைய பதிவு எதுவும் எம்மால் காண முடியவில்லை.
மேலும் அவுஸ்ரேலியாவில் நடைபெற்று வருகின்ற இருபதுக்கு20 உலகக்கோப்பை தொடரில், போட்டி வர்ணனையாளராக பிரட் லீ பணியாற்றுவதை நாம் அவதானித்தோம்.
https://www.instagram.com/p/CkDqQSUpxzQ/
இதற்கமைய இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய வேகப்பந்து பயிற்சியாளராக பிரட் லீ தெரிவு என பகிரப்பட்ட செய்தி போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எமது சிங்கள பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய வேகப்பந்து பயிற்சியாளராக பிரட் லீ தெரிவா?
Fact Check By: S.G.PrabuResult: False

Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team