
INTRO:
தற்போதைய அரசு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நிதியுதவி அளித்து வருவதாக சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):
18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு நபருக்கும் 100,000 ரூபாய் அரசாங்க உதவியைப் பெற இப்போதே பதிவு செய்ய வேண்டும் என்று சமூக ஊடகங்களில் ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் பரவியது.
Facebook | Archived Link Facebook | Archived Link
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
முதலில், நாம் 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொருவருக்கும் நிதியுதவி வழங்கும் திட்டம் தொடர்பாக செய்திகள் எதுவும் முக்கிய ஊடகங்கள் வெளியாகியுள்ளதா என சோதனை நடத்தினோம்.
ஆனால் அத்தகைய திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டதாக எந்த செய்தியும் எமது ஆய்வின் மூலம் கிடைக்கப்பெறவில்லை.
மேலே உள்ள நிதி திட்டத்திற்கு பதிவு செய்ய கொடுக்கப்பட்ட இணைய இணைப்பைச் சரிபார்த்தபோது, அது அத்தகைய நிதி திட்டத்திற்கு பரிந்துரை செய்யப்பட்ட இணைய முகவரி அல்ல என்பதோடு போலியான இணைய இணைப்பு முகவரி என்பதும் கண்டறியப்பட்டது.
இது தொடர்பான மேலதிக தகவல்களை உறுதிப்படுத்த ஜனாதிபதி ஊடகப் பிரிவினரிடம் வினவியபோது, மேற்படி சமூக வலைத்தளப் பதிவு போலியான பதிவு எனவும், 18 வயதுக்கு மேற்பட்ட நபர் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு இலட்சம் ரூபா பண உதவி வழங்கும் திட்டத்தை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை எனவும் எமக்கு உறுதி செய்தனர்.
ஃபிஷிங் என்றால் என்ன?
ஃபிஷிங் என்பது ஒருவரின் தனிப்பட்ட தகவல்களைத் திருடுவதற்கான முயற்சியாகும் அல்லது ஏமாற்றும் நோக்கமுடைய மின்னஞ்சல்கள், மெசேஜ்கள், விளம்பரங்கள் அல்லது நீங்கள் ஏற்கெனவே உபயோகித்த தளங்களின் போலி இணைப்புகளைப் பயன்படுத்தி ஆன்லைன் கணக்குகளில் உள்நுழைவதாகும். உதாரணத்திற்கு, ஃபிஷிங் மின்னஞ்சல் உங்கள் பேங்க்கில் இருந்து வருபவை போன்று இருக்கக்கூடும். அத்துடன் உங்கள் பேங்க் அக்கவுண்ட் தொடர்பான தனிப்பட்ட தகவல்களையும் கேட்கக்கூடும்.
ஃபிஷிங் மெசேஜ்கள் அல்லது உள்ளடக்கம் பின்வருபவற்றைச் செய்யலாம்:
- உங்கள் தனிப்பட்ட அல்லது நிதித் தகவல்களைக் கேட்கலாம்.
- இணைப்புகளைக் கிளிக் செய்யுமாறோ மென்பொருளைப் பதிவிறக்குமாறோ கேட்கலாம்.
- நீங்கள் உபயோகிக்கும் சமூக வலைதளம், உங்கள் பேங்க், உங்கள் பணியிடம் போன்ற நற்பெயருள்ள நிறுவனங்களின் தோற்றத்தில் மோசடி செய்யலாம்.
- குடும்பத்தினர், நண்பர் அல்லது உடன் பணிபுரிபவர் போன்ற உங்களுக்குத் தெரிந்தவரின் தோற்றத்தில் மோசடி செய்யலாம்.
- ஒரு நிறுவனமோ உங்கள் நம்பிக்கைக்குரிய ஒருவரோ அனுப்பிய மெசேஜைப் போன்றே அச்சு அசலாகத் தோற்றமளிக்கலாம்.
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 100,000 நிதியுதவி என பகிரப்படும் தகவல் ஒரு மோசடி என கண்டறியப்பட்டது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team