ஈத் தொழுகையின்போது மசூதிக்குள் நுழைந்த இந்து பெண்ணால் சலசலப்பு என பரவும் தகவல் உண்மையா?

சமயம் சமூக ஊடகம்

INTRO :

ஈத் தொழுகையின் போது மசூதிக்குள் நுழைந்த இந்து பெண்ணால் சலசலப்பு என வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் “வர்ஜீனியாவில் (அமெரிக்கா) ஒரு இந்துத்துவா பெண் ஈத் தொழுகையின் போது மசூதிக்குள் நுழைந்து, பிரசங்க மேடையில் ஏறி, சலசலப்பை உருவாக்கி, இஸ்லாமிய வெறுப்பு வார்த்தைகளைப் பேசினார், பின்னர் கைது செய்யப்பட்டார். “ என இம் மாதம் 22 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு  (22.04.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

நாம் முதலில் குறித்த வீடியோவில் இருந்து சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி அதனை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி ஆய்வுக்கு உட்படுத்திய போது, பல பேஸ்புக் கணக்குகளில் குறித்த வீடியோ பதிவிடப்பட்டிருப்பதைக் காண முடிந்தது. அதில் Mohamed Bin Latheef  என்ற ஐடி கொண்டவர் வெளியிட்டிருந்த பதிவு நமக்கு கிடைத்தது. 

அதில், “அமேரிக்காவில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றில் நடைபெற்ற பெருநாள் தொழுகையை நிறுத்த இந்து பெண் ஒருவர் முயற்சி செய்தார் என வீடியோ ஒன்று பகிரப்பட்டு வருகின்றது… ஆனால் அந்த பெண் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த மனநலம் குன்றிய முஸ்லிம் பெண் என்பதை அந்த பள்ளிவாசல் நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.  உறுதிப்படுத்தி வெளியிட்டுள்ள அறிக்கையை இதே வீடியோவில் எடிட் செய்து இணைத்துள்ளேன்.

குறித்த பதிவில் இருந்த ஊடக அறிக்கையில் ஒரு வரியை பயன்படுத்தி பேஸ்புக்கில் நாம் தேடிய போது, All Dulles Area Muslim Society (ADAMS) என்ற பேஸ்புக் பக்கத்தில் கடந்த 22 ஆம் திகதி ஏப்ரல் மாதல் 2023 (22.04.2023) வெளியிட்டிருந்த ஊடக அறிக்கை எமக்கு கிடைத்தது. அதில், 21 ஆம் திகதி ஈத் தொழுகையின் போது இடையூறு ஏற்படத்திய பெண் இஸ்லாம் சமூகத்தைச் சார்ந்தவர் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம். அந்த பெண்மணியின் குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளோம். 

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் நம்மிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர். இது தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவும் வீடியோக்களை அகற்றும்படி அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த வீடியோ தங்கள் குடும்பத்தின் தனிநபர் சுதந்திரத்தை பாதிக்கிறது என்றும் இதன் காரணமாகக் கூடுதல் மன அழுத்தம் ஏற்படுகிறது என்றும் தெரிவித்துள்ளனர்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் ஈத் தொழுகையின் போது மசூதிக்குள் நுழைந்த இந்து பெண்ணால் சலசலப்பு என பரவும் வீடியோவில் உள்ள பெண் மனநிலை பாதிக்கப்பட்ட முஸ்லிம் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:ஈத் தொழுகையின்போது மசூதிக்குள் நுழைந்த இந்து பெண்ணால் சலசலப்பு என பரவும் தகவல் உண்மையா?

Fact Check By: S G Prabu 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *