
INTRO :
குழந்தைகளை பாதிக்கும் மாத்திரைகள் லுப்போ கேக்கில் கலக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் ” *_எச்சரிக்கை..!_*
LUPPO லுப்போ என்ற பெயரில் ஒரு வகை “கேக்” சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. அதில் இரண்டு சிறிய மாத்திரைகள் உள்ளது. அது குழந்தைகளை முடக்கும் டேப்லெட் என்று சிலர் சொல்கிறார்கள்.
தயவுசெய்து, இந்த வீடியோவை பார்த்து புரிந்துக்கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். மேலும், இது பள்ளிக்கூடம் பகுதியில் மட்டுமே விற்கப்படுகிறது என்றும் தகவல் வருகிறது.
இதுபோன்ற சந்தேகமானவற்றை உங்கள் குழந்தைகள் வாங்கித் திண்ணாமல், கவனமாய் பார்த்து கொள்ளுங்கள். “ என இம் மாதம் 24 ஆம் திகதி (24.09.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் முதலில் குறித்த பதிவில் இருந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ள Luppo வகையான கேக் இலங்கை சந்தையில் வாங்க முடியுமா என்று ஆராய்ந்தோம். ஆனால் இலங்கை சந்தையில் Luppo வர்த்தக நாமத்தின் கீழ் எந்தவொரு உணவு வகையும் உள்ளதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.
அப்போது இந்த லுப்போ சிற்றுண்டி வகை எந்த நாட்டில் தயாரிக்கப்படுகிறது என்பது கவனிக்கப்பட்டது. அதன்படி, அது இஸ்தான்புல்லில் அமைந்துள்ள Şölen என்ற துருக்கிய நிறுவனம் என்பதைக் காண முடிந்தது.
மேலும், உள்ள வீடியோவைப் பார்க்கும்போது, கண்ணாடி மேசைக்கு கீழே ‘ Aspilic ‘ என்ற மற்றொரு தயாரிப்பு காணப்பட்டது.
உறைந்த பொதி செய்யப்பட்ட இறைச்சியை விற்பனை செய்யும் துருக்கி நிறுவனம் எனவும், இந்நாட்டில் காணப்படாத உற்பத்தி நிறுவனம் என எம்மால் கண்டறியப்பட்டது.
இதன்படி இந்த காணொளி எம் நாட்டில் இடம்பெற்ற சம்பவமல்ல என்பது மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் குறித்த வீடியோ தொடர்பாக சில வருடங்களுக்கு முன்பு சர்வதேச உண்மை கண்டறியும் நிறுவனங்கள் ஆய்வு செய்திருந்தமையும் காணக்கிடைத்தது.
அதில், இந்த வீடியோ போலியாக எடுக்கப்பட்டது என்றும், கேமராவை திருப்பி மாத்திரை வைக்கப்பட்ட கேக்கை காண்பித்து ஏமாற்றுவதாகவும் குறிப்பிட்டிருந்தனர். மேலும், கேக் தயாரிக்கும் போது மாத்திரை ஏதும் உள்ளே இருந்திருந்தால் அது உருகியிருக்கும். ஆனால் வீடியோவில் உள்ள இந்த பொடி மாத்திரை புதிதாக உள்ளது என்று குறிப்பிட்டிருந்தனர்.
மேலும், சம்பந்தப்பட்ட கேக் தயாரிப்பு நிறுவனத்தை தொடர்புகொண்டு இந்த தகவல் தவறானது என்பதை உறுதி செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தனர். இந்த கேக் ஈராக்கில் குர்திஷ் பகுதியில் விற்பனை செய்யப்படுவதாகவும், துருக்கியில் தயாரிக்கப்பட்டு ஈராக் கொண்டு வரப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
ஈராக்கில் விற்பனை செய்யப்படும் கேக் பாக்கெட்டில் மாத்திரைகள் உள்ளதா என்று ஈராக்கில் குர்திஷ் பகுதி அரசாங்கம் நடத்திய சோதனையில் கேக்கில் பாக்கெட்டில் அப்படி எந்த ஒரு மாத்திரையும் கிடைக்கவில்லை என்றும், கேக்கில் அபாயமான ரசாயனம் எதுவும் இருப்பதாக தகவல் இல்லை என்றும் உண்ண தகுந்தது என்றும் குறிப்பிட்டிருந்தனர். இந்த கேக் ரசாயன பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் அதில் குறிப்பிட்டிருந்தனர்.
இதற்கமைய குழந்தைகளை பாதிக்கும் மாத்திரைகள் லுப்போ கேக்கில் கலக்கப்பட்டுள்ளதாக பகிரப்படும் தகவல் போலியானது மேலும் இலங்கையில் குறித்த கேக் வகை பாவணையில் இல்லை எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
எமது சிங்கள பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:குழந்தைகளை பாதிக்கும் மாத்திரைகள் லுப்போ கேக்கில் கலக்கப்பட்டுள்ளதா?
Fact Check By: S G PrabuResult: Misleading

Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team