முக்கிய மத வழிப்பாட்டுத் தலங்களில் பாதுகாப்பு நீக்கப்பட்டதா..?

False இலங்கை | Sri Lanka


INTRO:  
தற்போதைய அரசாங்கம் பிரதான மத வழிபாட்டுத் தலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்பை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சமூக ஊடங்களிலும் வேறு ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தன இது தொடர்பான உண்மைத் தன்மையை கண்டறிய நாம் நடவடிக்கை எடுத்தோம்.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

மத வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாப்பதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரை அப்புறப்படுத்த அநுரகுமார அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சமூக ஊடகங்களில் இவ்வாறு கருத்துக்கள் பரப்பட்டிருந்தன.

A screenshot of a computer

Description automatically generated

Facebook | Archived Link

இவ்வாறு நீக்கப்படும் இராணுவ வீரர்களுக்குப் பதிலாக சமூக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளை உள்ளடக்கிய பாதுகாப்புக் குழுக்களை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சில இணையத்தள செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.

பிரதான மத வழிப்பாட்டு தலங்கள் உள்ளிட்ட மத வழிபாட்டுத் தலங்களுக்கு துடைப்பதற்கும், சமைப்பதற்கும் அதேபோன்று வாகனம் ஓட்டுவது போன்ற எல்லாவற்றுக்கும் இராணுவத்தினர்  பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், சில ஆலயங்களில் இருபதுக்கும் மேற்பட்ட படையினர் இருப்பதும் தெரியவந்துள்ளது.

இராணுவத்தினரும் கடற்படையினரும் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அதிக இராணுவ ஆதரவுடனும் அதிக இராணுவத்தினரை கொண்ட ஆலயங்கள் தாங்கள் உயர் நிலையில் இருப்பதைக் காட்டுவதற்காக இதனைப் பயன்படுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. Link | Archived Link

இது தொடர்பான உண்மைகளை ஆய்வு செய்ய நாம் நடவடிக்கை எடுத்தோம்.

Fact Check (உண்மை அறிவோம்)
இது தொடர்பில் ஆராயும் வகையில், தீவின் சில முக்கிய மத வழிபாட்டுத் தலங்களுக்கு  வழங்கப்பட்டிருந்த பொலிஸ் மற்றும் இராணுவப் பாதுகாப்பு அகற்றப்பட்டுள்ளதா என நாம் விசாரணை செய்தோம். அதன்போது அந்த வழிபாட்டுத் தலங்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு அப்படியே காணப்படுகின்றது என்பதை அவர்கள் உறுதி செய்தனர்.

இதனை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், எமது நாட்டின் பாதுகாப்பிற்கு பொறுப்பான உத்தியோகபூர்வ பிரிவினரினை தொடர்புக்கொண்டு இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டோம்.

பாதுகாப்பு அமைச்சின் ஊடக பேச்சாளர்

பாதுகாப்பு அமைச்சின் ஊடக பேச்சாளர் கேணல் நளீன் இது போலியான தகவல் எனவும், பிரதான மத ஸ்தலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு எந்த வகையிலும் அகற்றப்படவில்லை எனவும் எமக்கு உறுதிப்படுத்தினார்.

பத்தரமுல்லை அக்குரேகொட இராணுவ தலைமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த இராணுவ ஊடக பேச்சாளர் ரசிக்க குமார, நாடு முழுவதிலுமுள்ள விகாரைகள் மற்றும் ஏனைய மத ஸ்தலங்களில் பாதுகாப்பு மற்றும் கட்டட நிர்மாண பணிகளுக்காக இராணுவ அதிகாரிகள் மற்றும் இரரணுவ வீரர்கள் 1584 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் பாதுகாப்பு பணிகளுக்காக மாத்திரம் 364 பேரும் கட்டட நிர்மாண பணிகளுக்காக 1220 பேர் ஒன்பது மாகாணங்களை உள்ளடக்கிய 16 மாவட்டங்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

விகாரைகள், கத்தோலிக்க தேவாலயங்கள், முஸ்லிம் பள்ளிகள், இந்து ஆலயங்கள் மற்றும் பல்வேறு மத வழிபாட்டுத் தலங்களில் வருடாந்தம் நடைபெறும் சமய நிகழ்வுகளுக்கு இலங்கை இராணுவத்தினரால் வழங்கப்படும் பாதுகாப்பு ஒருபோதும் குறைக்கப்பட மாட்டாது எனவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். Link 1 | Link 2

இது தொடர்பாக வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை இங்கே.

A close-up of a document

Description automatically generated

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுத்தாரா என நாம் ஜனாதிபதி ஊடகப் பிரிவிடம் வினவியபோது, ஜனாதிபதி மத வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பை நீக்குவதற்கு எவ்விதமான தீர்மானத்தையும் எடுக்கவில்லையென அவர்கள் உறுதிப்படுத்தினார்கள்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion: முடிவுமத வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரை அகற்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளியான செய்திகளை பாதுகாப்பு அமைச்சு, பொலிஸ் பிரிவு மற்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு ஆகியன மறுத்துள்ளன. மேலும், மத வழிபாட்டு தலங்களிடம் நாங்கள் நடத்திய விசாரணையில், அந்த இடங்களின் பாதுகாப்பு அகற்றப்படவில்லை என்பது உறுதியானது.

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:முக்கிய மத வழிப்பாட்டுத் தலங்களில் பாதுகாப்பு நீக்கப்பட்டதா..?

Written By: S G Prabu  

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *