
INTRO :
இலங்கையில் ஆள்கடத்தும் ஒரு கூட்டம் பாடசாலை சிறுவர்கள் சிறுமிகளை கடத்துவதற்கு முயற்சிப்பதாக என ஒரு தகவல் சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் ” அவசரமாக இச்செய்தி அனைவருக்கும் போய் சேர அதிகமாக பதியுங்கள்.
இலங்கையில் பல மாவட்டங்களில்,
◾கொழும்பு,
◾கண்டி,
◾குருனாகல்,
◾யாழ்ப்பாணம்,
◾கம்பஹா,
◾மட்டக்களப்பு,
◾அம்பாறை
போன்ற பிரதேசங்களில் *’ஆள்கடத்தும் ஒரு கூட்டம்’ கடந்த சில நாட்களாக பாடசாலை சிறுவர்கள், சிறுமிகளை* கடத்துவதற்கு முயன்றுள்ளனர்.
ஆகவே ,
உங்கள் குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ளவும்.
*📌 NOTE 😘
*இலங்கை பொலிஸாரின் வேண்டுகோளுக்கமைய பதிவேற்றம் செய்துள்ளோம்.*
🚨 *SRI LANKA AIR FORCE EMERGENCY NUMBER – 116*
🚨 *SRI LANKA POLICE EMERGENCY NUMBER – 119* “ என கடந்த மாதம் 25 ஆம் திகதி (25.03.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
நாம் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்ற குறித்த தகவலின் குறிப்பிட்டுள்ளதன் படி இலங்கை பொலிஸால் குறித்த தகவல் பகிரப்பட தெரிவித்துள்ளதான என உறுதி செய்துக்கொள்ள நாம் பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவவிடம் வினவினோம்.
அதன் போது, குறித்த தகவல் முற்றிலும் போலியானது எனவும் இலங்கையில் தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடி காலக்கட்டத்தில் இவ்வாறான பல போலி தகவல்கள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றதாக எமக்கு தெரிவித்தார்.
எனவே நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், இலங்கையில் பாடசாலை சிறுவர்கள் மற்றும் சிறுமிகளை கடந்து சம்பவம் தொடர்பாக பொலிஸார் வேண்டுக்கோளிற்கு இணங்க பகிரப்படும் தகவல் என்று பகிரப்படும் குறிப்பு போலியான ஒன்று என உறுதி செய்யப்பட்டுள்ளது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:இலங்கையில் பாடசாலை சிறுவர், சிறுமிகளை கடத்தல் சம்பவம் ஆரம்பமா?
Fact Check By: S G PrabuResult: False

Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team