
ஆட்சிக்கு வந்தவுடன் புர்க்காவுக்கு தடை விதிப்போம் என விமல் வீரவன்ச தெரிவித்ததாக பேஸ்புக்கில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை நமக்கு காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:
Malek Amen என்ற பேஸ்புக் கணக்கில் ” மிளகாய்த்தூள் மீண்டும் பாராளுமன்றம் ஏறுமா?” என்று இம்மாதம் 13 ஆம் திகதி (13.06.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
குறித்த பதிவில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த புகைப்படத்தில் ” சவூதி இளவரசி வந்தாலும் ஹிஜாப் கழட்டி தான் வரணும் இது பவுத்த நாடு முஸ்லிம் நாடு இல்லை விமல்
முடிந்த அளவு ஷேர் பண்ணுங்க ”
அத்தோடு, நாம் ஆட்சிக்கு வந்தவுடன் புர்க்காவுக்கு தடை விதிப்போம். என பதியப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இலங்கையில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் நெருங்கிய நிலையில் விமல் வீரவன்ச தெரிவித்தாக சில தகவல் பேஸ்புக் பக்கங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
நாம் விமல் வீரவன்ச அமைச்சரின் சமூக வலைத்தள பொறுப்பதிகாரியினை தொடர்பு கொண்டு வினவிய போது, விமல் வீரவன்ச இவ்வாறான எவ்வித கூற்றையும் தெரிவிக்கவில்லை என அவர் தெரிவித்தார்.
இதற்கமைய நாம் ஆட்சிக்கு வந்தவுடன் புர்க்காவுக்கு தடை விதிப்போம் என விமல் வீரவன்ச தெரிவித்ததாக பேஸ்புக்கில் பகிரப்பட்ட தகவல் போலியானது என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தேர்தல் காலத்தில் பல்வேறுப்பட்ட போலி தகவல்கள் பேஸ்புக் வழியாக பகிரப்பட்டு வருகின்றமையால் எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.
Conclusion: முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் நாம் ஆட்சிக்கு வந்தவுடன் புர்க்காவுக்கு தடை விதிப்போம் என விமல் வீரவன்ச தெரிவித்ததாக பேஸ்புக்கில் பகிரப்பட்ட தகவல் போலியானது என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Title:ஆட்சிக்கு வந்தவுடன் புர்காவுக்கு தடை விதிப்பேன் என்று விமல் வீரவன்ச கூறினாரா?
Fact Check By: Nelson ManiResult: False