யாழ்ப்பாணத்தில் உள்ள வாழைத் தோட்டத்திலுள்ள வாழை மரமா இது?
INTRO :
யாழ்ப்பாணத்தில் குடத்தனைப் பகுதியிலுள்ள விவசாயி ஒருவருக்கு சொந்தமான வாழைத் தோட்டத்திலுள்ள வாழையொன்று என ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):
Krish Krishan என்ற பேஸ்புக் கணக்கில் ” இலங்கை யாழ்ப்பாணத்த்தின் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் மணற்காடு - குடத்தனைப் பகுதியிலுள்ள விவசாயி ஒருவருக்கு சொந்தமான வாழைத் தோட்டத்திலுள்ள வாழையொன்று 10 அரை அடி நீளமான வாலைக்குலையொன்றை ஈர்ந்துள்ளது.
கடந்த சில கிழமைகளுக்கு முன்னர் சாதாரணமாகவே இக்குலை காணப்பட்டது. ஆனால் பின்னர் குலையின் அளவு நீண்டு வ்ரத் தொடங்கியது.
எனினும், விவசாயி யாருக்கும் தெரியாமல் இவ்வளவு நாட்களும் இவ்வதிசயத்தை மறைத்து வைத்திருந்தார்.
தற்போதும் இக்குலை தொடாச்சியாக நீண்டு கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஏராளமான பொது மக்கள் இவ்வதிசயத்தை அறிந்து நேரில் வந்து பார்த்த வண்ணம் உள்ளனர். “ என கடந்த ஜனவரி மாதம் 17 ஆம் திகதி (17.01.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது போன்று மேலும் பலர் பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
குறித்த பேஸ்புக் பதிவானது இவ்வருடம் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த போதிலும், இது பல வருடங்களாக பேஸ்புக்கில் வலம் வருகின்றமை எமக்கு காணக்கிடைத்தது.
முதலில் குறித்த புகைப்படத்தினை நாம் கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டோம்.
இதன்போது இந்த வாழை மரமானது, ஆயிரம் விரல்கள் என்று சொல்லப்படும் வாழை இனம் என கண்டறியப்பட்டது. மேலும் இதன் விஞ்ஞான பெயர் Musa chiliocarpa எனவும் எமக்கு அறியக்கிடைத்தது.
இது குறிப்பாக தென் கிழக்கு ஆசிய பகுதிகளிலே அதிகம் காணப்படுகின்றது. அதாவது மியன்மார், கம்போடியா, இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, பிலிப்பையின்ஸ், சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் ஆகிய தென் கிழக்கு ஆசிய நாடுகளிலே இது காணப்படுகின்றது.
மேலும், எமது ஆய்வின் போது குறித்த புகைப்படமானது, பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தது என கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய இலங்கையில் யாழ் மாவட்டத்தில் குறித்த வாழை மரம் அமைந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
photoswords.blogspot.com | Archived link
மேலும், இது 2008 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம் எனவும் ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளது.
நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், யாழ்ப்பாணத்தில் வாழைத் தோட்டத்திலுள்ள வாழை மரத்தின் வாழைக் குழை என பகிரப்படும் புகைப்படம் பிலிப்பைன்ஸ் நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் என கண்டறியப்பட்டுள்ளது.
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.
Title:யாழ்ப்பாணத்தில் உள்ள வாழைத் தோட்டத்திலுள்ள வாழை மரமா இது?
Fact Check By: Nelson ManiResult: False