
INTRO :
சமீபத்தில் துருக்கியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் சிக்கியவரை காப்பாற்ற போராடும் நாய் என்று ஒரு சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் பாசத்திலும் நேசத்திலும் மனிதர்களை மிஞ்சிய ஜீவன்கள் ❤
துருக்கி 😥 “ என இம் மாதம் 08 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு (08.02.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
கடந்த திங்கள் கிழமை (06.05.2023) அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியா எல்லையில் 4,300க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். 15,000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். மேலும் அறிய
இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவித்து இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய ஒருவருக்கு அருகில் நாய் ஒன்று அமர்ந்திருப்பது போன்று புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றமை காணக்கிடைத்தது.
நாம் முதலில் குறித்த புகைப்படத்தினை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி ஆய்வு செய்த போது, இந்த புகைப்படம் பல வருடங்களாக பல செய்தி ஊடகங்களில் பயன்படுத்தப்பட்டு வந்திருப்பது தெரிந்தது. மேலும், இந்த புகைப்படத்தைப் பல புகைப்படங்கள் விற்பனை செய்யும் இணையதளங்கள் விற்பனைக்காக வைத்திருப்பதும் தெரிந்தது.

உண்மைப் பதிவைக் காண: stock.adobe.com I Archive 1 I depositphotos.com I Archive 2 I alamy.com I Archive 3
alamy.com இணையதளத்தில் குறித்த புகைப்படமானது 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 18 ஆம் திகதி எடுக்கப்பட்டதாக என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த திகதியில் துருக்கியில் நிலநடுக்கம் என தேடினோம். 2018 செப்டம்பரில் இந்தோனேஷியாவிலும் நவம்பரில் அமெரிக்காவின் அலஸ்காவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக செய்திகள் கிடைத்தன. அக்டோபரில், குறிப்பாக அக்டோபர் 18, 2018 இல் உலகம் முழுக்க பதிவான நிலநடுக்கம், அதிர்வு பற்றிய தகவல் கிடைத்தது. அந்த குறிப்பிட்ட திகதியில் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் பதிவாகியிருக்கவில்லை.
இது தொடர்பாக எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், துருக்கியில் நிலநடுக்கத்தில் சிக்கியவரை காப்பாற்ற போராடும் நாய் பகிரப்படும் புகைப்படம் போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:துருக்கியில் நிலநடுக்கத்தில் சிக்கியவரை காப்பாற்ற போராடும் நாய்- உண்மையா?
Fact Check By: S.G.PrabuResult: Misleading

Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team