
INTRO :
IMF கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள் என சமூக வலைத்தளங்கள் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் ” 👆Picture worth a thousand words.
You can see why Sri Lanka is bankrupt.
In a IMF meeting not a single minister has a pen or paper.
Guessing our expert panel has memorised all the data.
ஆயிரம் வார்த்தைகளுக்கு மதிப்புள்ள படம்.
இலங்கை ஏன் வங்குரோத்து நிலையில் உள்ளது என்பதை நீங்கள் பார்க்கலாம்.
IMF கூட்டத்தில் எந்த ஒரு அமைச்சரிடமும் பேனா அல்லது காகிதம் இல்லை.
எங்கள் நிபுணர் குழு அனைத்து தரவையும் மனப்பாடம் செய்திருப்பார்கள்..படிச்ச பயலுவளாச்சே…🖋️🖋️📋📋 “ என கடந்த மாதம் 24 ஆம் திகதி (24.06.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
IMF கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள் என பரவுகின்ற புகைப்படம் தொடர்பில் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக ஆய்வினை மேற்கொண்டோம்.
குறித்த புகைப்படத்தினை நாம் கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, இது IMF கூட்டத்துடன் சம்பந்தமானது அல்ல எனவும் இது கடந்த ஜுன் மாதம் 21 ஆம் திகதி பாராளுமன்றத்தின் சுயாதீன அமைச்சர்களான, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயகார மற்றும் சிலர் ரஷ்ய நாட்டின் தூதுவருடன் இலங்கை தொடர்பான தற்போதைய பிரச்சினைகள் மற்றும் அதற்கான சாத்தியமான தீர்வு குறித்து கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் மேற்கொண்ட சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என கண்டறியப்பட்டது.

கூட்டத்தில் கலந்து கொண்ட சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவும் இந்த புகைப்படங்களை தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் குழு உண்மையில் இலங்கை வந்தடைந்ததுடன், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் உதவிகளை பெற்றுக்கொள்வதற்கான ஆரம்ப கட்ட கலந்துரையாடல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இலங்கை அதிகாரிகளுடன் நடைபெற்றது. சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவினர் ஜூன் 30 ஆம் திகதி வரை பத்து நாட்களுக்கு இலங்கையில் தங்கியிருப்பார்கள் என்றும், பல முக்கிய பங்குதாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்க்கப்படுவதாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.
IMF கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள் என பகிரப்படும் புகைப்படம் ரஷ்ய தூதுவருடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என உறுதி செய்யப்படுகிறது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:IMF கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள் என பரவும் புகைப்படம் உண்மையா?
Fact Check By: S G PrabuResult: Misleading

Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team