பிரபாகரனின் சமீபத்திய புகைப்படமா இது ?
INTRO :
மரணித்த விடுதலைபுலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சமீபத்தின் புகைப்படம் என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):
சமூகவலைத்தளங்களில் “ இந்த அதிசயம் நிகழவேண்டுமென ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன். யாராலும் செரிமானம் செய்ய இயலாத இந்த வகையிலான மரணம் நிகழ்ந்தே இருக்கக் கூடாது. “ என இம் மாதம் 17 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு (17.02.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
சமீபத்தில் ஊடக சந்திப்பில் பழ.நெடுமாறன் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளதாக தகவல் ஒன்றை வெளியிட்டார்.
பழ.நெடுமாறன் தகவலை மறுத்து இலங்கை பாதுகாப்பு அமைச்சு, ஊடக அறிக்கை வெளியிட்டிருந்தது.
உண்மைப் பதிவைக் காண: adaderana.lk
மேலும், விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் போராளி ஒருவர் பழ.நெடுமாறன் சொன்ன கருத்து போலியானது என சொன்னதாக, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் புதிய தலைமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தகவல் வெளியிட்டிருந்தார்.
இந்த படத்தின் இருந்த logoவை வைத்து, நாம் தகவல் தேடினோம். அப்போது, Vajra Media என்ற ஒரு டுவிட்டர் பக்கத்தில், குறித்த படத்தை முதலில் தயாரித்து பகிர்ந்திருப்பதைக் கண்டோம்.
அதில் மெண்ட் பகுதியில், வாசகர் ஒருவர் இது போலிதானே என்று கேட்க, அதற்கு Vajra Media ஆமாம் என்று குறிப்பிட்டு பதில் அளித்திருப்பதைக் கண்டோம்.
நாம் இணையத்தில் வைரலாக பரவி வருகின்ற பிரபாகரனின் சமீபத்திய புகைப்படத்தினை ஆய்வு செய்தபோது, குறித்த புகைப்படம் 2019 ஆம் ஆண்டு முதல் பரவி வருகின்றமை காணக்கிடைத்தது.
உண்மையான புகைப்படமும், இணையத்தில் வைரலாகும் போலியான புகைப்படமும் ஒப்பீடு செய்தபோது,
பிரபாகரனின் பழைய படத்தை எடுத்து, தாடி மீசை சேர்த்து எடிட் செய்துள்ளதை, தெளிவாகக் காணலாம். மேலும் குறித்த இரு படங்களிலும் ஜன்னல் நிலையில் உள்ள கரும்புள்ளி, பிரபாகரன் நெற்றியில் உள்ள தலைமுடி, அவரது நிழல், கண் பார்வை அனைத்தும் ஒத்துப் போவதைக் காணலாம்.
Face App முறையில் இவ்வாறு போலியாக தயாரித்துள்ளனர் என்று சந்தேகமன்றி உறுதி செய்யப்படுகிறது. உதாரணமாக, நாம் அந்த ஆப் பயன்படுத்தி, இதே புகைப்படத்தை கீழ்க்கண்ட முறையில் தயாரித்து பார்த்தோம். அவற்றில் சிலவற்றை கீழே இணைத்துள்ளோம்.
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், பிரபாகரனின் சமீபத்திய புகைப்படம் என பகிரப்படும் புகைப்படம் போலியானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.