குருணாகல் வயல் வெளியில் கண்டெடுக்கப்பட்ட சிசுவின் தற்போதைய வீடியோ இது?

False இலங்கை | Sri Lanka


INTRO :

குருணாகல் வயல் வெளியில் கண்டெடுக்கப்பட்ட சிசுவின் தற்போதைய வீடியோ என ஒரு காணொளி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின்விவரம் (What is the claim):

 Facebook Link  | Archived Link

Facebook Link | Archived Link 

சமூகவலைத்தளங்களில் “இலங்கையில் பரகஹதெனிய சிங்கபுரவீதி வயல் வெளியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் கண்டெடுக்கப்பட்ட சிசு தாதியர்களால் பராமரிக்கப்படும் காட்சி.. “என இம் மாதம் 08 ஆம் திகதி 2025 ஆம் ஆண்டு  (20.07.2025) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மைஅறிவோம்)

குருணாகல், மாவத்தகம, பரகஹதெனிய, சிங்கபுர பிரதேசத்தில் உள்ள வயலில் இருந்து பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தை ஒன்று உயிருடன் கடந்த வியாழக்கிழமை (17.07.2025) பிற்பகல் மீட்கப்பட்டதாக மாவத்தகம பொலிஸார் தெரிவித்தனர். Link

இந்த செய்தியில் பின்னணியில் தற்போது, குழந்தை தொடர்பில் பல காணொளிகள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

நாம் குறித்த இரு காணொளிகளையும் புகைப்படங்களாக மாற்றி ரிவஸ் இமேஜீனை பயன்படுத்தி ஆய்வு செய்தபோது, இரு காணொளிகளும் வெவ்வேறு காலக்கட்டத்தில் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது. 

முதலாவது காணொளி

இது கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி  ihaan_aizel என்ற இன்ஸ்டெகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்ததமை காணக்கிடைத்தது.

மேலும் இதே குழந்தையின் பல காணொளிகள் குறித்த இன்ஸ்டெகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமையும் எமது ஆய்வின் போது காணக்கிடைத்தது.

இரண்டாவது காணொளி

இது borncutebabies என்ற யூடியுப் அலைவரிசையில் கடந்த 15 ஆம் திகதி (15.07.2025) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமையும் கண்டறியப்பட்டது.

நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், குறித்த குழந்தை சிங்கபுரவீதி வயல் வெளியில் கடந்த 17 ஆம் திகதி (17.07.2025) தான் கிடைக்கப்பட்டிருந்த நிலையில், சமூகவலைத்தளங்களில் பகிரப்படும் இந்த காணொளிகள் அதற்கு முன்னரே இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

மாவத்தகம பொலிஸார்

இது தொடர்பில் நாம் மாவத்தகம பொலிஸார் நிலையத்தினை தொடர்புக்கொண்டு வினவியபோது, குறித்த குழந்தையின் தாய் இன்னும் கண்டறியப்படவில்லை எனவும், குழந்தை குருணாகல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தனர்.

இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், குருணாகல் வயல் வெளியில் கண்டெடுக்கப்பட்ட சிசுவின் தற்போதைய வீடியோ என பகிரப்பட்ட காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் தவறானது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

எங்களதுசமூகவலைதளபக்கங்களைபின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok | Youtube 

Conclusion: முடிவு

எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Avatar

Title:குருணாகல் வயல் வெளியில் கண்டெடுக்கப்பட்ட சிசுவின் தற்போதைய வீடியோ இது?

Fact Check By: S G Prabu  

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *