
INTRO :
இமயமலையில் இணையதளம் ஊடாக மதுபானம் விற்பனை செய்ய அனுமதி என சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

Sooriyan FM என்ற பேஸ்புக் கணக்கில் “ Breaking News: இணையத்தளம் ஊடாக மதுபானம் விற்பனை செய்ய அனுமதி!
விபரங்களுக்கு >> https://bit.ly/3pYjTce
#Sooriyanfm #Sooriyanfmnews #Sooriyangossip #Sooriyannews #Onilne #Liquor #Purchase” என இம் மாதம் 16 ஆம் திகதி (16.06.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது போன்று மேலும் பலர் பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
இலங்கையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்தமையால் இம்மாதம் முதலாம் திகதி (01.06.2021) முதல் இலங்கையிலுள்ள கலால் திணைக்களத்தினால் அனுமதிப்பத்திரம் கொண்ட அனைத்து நிலையங்களுக்கும் சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கடந்த 16 ஆம் திகதி (16.06.2021) இணையதளம் ஊடாக மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்கியுள்ளதாக செய்திகள் பரவ ஆரம்பித்தனர்.
குறித்த செய்தியினை நாம் ஆய்வு செய்த போது, இணையத்தளம் ஊடாக மதுபானம் விற்பனை செய்வதற்கு நிதியமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக மதுவரி திணைக்களம் அறிவித்திருந்த போதிலும் குறித்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கொவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்திடம் ஆலோசனை கோரப்பட்டுள்ளமை காணக்கிடைத்தது.

virakesari.lk| Archived Link
எனினும் இணையத்தின் ஊடாக மதுபானங்களை விற்பனை செய்ய கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயலணி நிராகரித்துள்ளதாக, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து இலங்கையின் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட செய்தி கீழே காணப்படுகின்றது.
நாம் மேற்கொண்ட தேடலுக்கு அமைய இணையத்தளம் ஊடாக மதுபான விற்பனைக்கு அனுமதி என பகிரப்படும் தகவல் போலியானது என்று கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து எமது சிங்கள பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.