மின்னேரியாவில் பிறந்த இரட்டை யானைகளின் புகைப்படம் இதுவா?

Partly False இலங்கை செய்திகள்

மின்னேரியாவில் பிறந்த தெற்காசியாவின் முதல் இரட்டை யானைகளின் புகைப்படங்கள் என சில புகைப்படங்கள் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link

Lanka 360ᵒ என்ற பேஸ்புக் பக்கத்தில்  ” மின்னேரியாவில் பிறந்த தெற்காசியாவின் முதல் இரட்டை யானைகள்” என்று  இம் மாதம் 8 ஆம் திகதி  (08.09.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

நாம் குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமிர்த்தமாக பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த புகைப்படங்களில் ஒரு புகைப்படத்தினை  Google Reverse Image Tool  பயன்படுத்தி தேடுதல் மேற்கொண்டோம்.

குறித்த தேடலின் போது, இது தென்னாப்பிரிக்கா நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது உறுதியானது. 

Theguardian | Archived Link 

தென்னாப்பிரிக்காவில் Kruger national park-ல் குறித்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது எமது தேடலின் போது உறுதி செய்யப்பட்டது.

Website link | Archived Link

தெற்காசியாவில் பிறந்த (எங்கே?) முதல் இரட்டை யானை குட்டிகளின் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எமக்கு கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில், தென்னாப்பிரிக்காவில் பிறந்த இரட்டை யானை குட்டிகளின் புகைப்படத்தினை இலங்கையில் பிறந்த இரட்டை யானை குட்டிகள் என பகிர்ந்து வருகின்றனர்.

எமது சிங்களப்பிரிவினர் மேற்கொண்ட ஆய்வு அறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:மின்னேரியாவில் பிறந்த இரட்டை யானைகளின் புகைப்படம் இதுவா?

Fact Check By: Nelson Mani 

Result: Partly False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *