
INTRO :
உலகத்தினை ஆள்பவர்கள் கால்களில் பாப்பரசர் விழுகின்றார் என்று ஒரு வீடியோ சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் ” உலகமே போப் காலில் விழும் கையில் முத்தமிடும், ஆனால் போப் உலகை ஆள்பவர்களின் காலில் விழவேண்டும் கையில் முத்தமிட வேண்டும்!!!! அரிய காணொளி!!!!! “ என கடந்த மாதம் 26 ஆம் திகதி (26.01.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
கிறிஸ்தவ முறைப்படி பாஸ்கா காலத்தில் பெரிய வியாழக்கிழமை அன்று, 12 பேரின் பாதங்களை கழுவி அவர்களின் பாதங்களுக்கு முத்தமிடும் நிகழ்வு என்பது வழக்கமானதாகும். இது இயேசு கிறிஸ்து தனது கடைசி இராபோசணத்தின் போது தனது 12 சீடர்களுக்கு செய்த செயலினை நினைவு கூறும் ஓர் மத சடங்காக இது அமையும்.
இது போன்று பாப்பரசர் பாஸ்கா காலத்தில் பாதங்களை கழுவி முத்தமிடும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
நாம் இணையத்தில் பகிரப்படும் வீடியோ தொடர்பாக ஆய்வினை மேற்கொண்ட போது, அதில் ஒரு வீடியோ சூடான் அரசு தலைவர்களுடன் வத்திகானில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த சந்திப்பின் போது இடம்பெற்ற சம்பவம் என கண்டறியப்பட்டது.
சூடான் நாட்டில் இடம்பெறும் உள்நாட்டு போர்களை முடிவுக்கு கொண்டுவந்து சமாதானத்தினை பேணுவதற்கு அந்நாட்டு தலைவர்களிடம் கலந்துரையாடிய பின்னர்,மனிதாபிமான ரீதியில் பாப்பரசர் அவர்களின் பாதங்களில் முத்தமிடுகின்றார்.

பேஸ்புக்கில் பகிரப்படும் வீடியோவில் உள்ள மற்றைய வீடியோவில் பாப்பரசர் யாரின் கால்களிலும் விழவில்லை மாறாக அவர்களில் கைகளில் முத்தமிடுகின்றார்.
நாம் குறித்த அந்த காணொளி தொடர்பாகவும் ஆய்வினை கூகுள் ரிவஸ் இமேஜினை உதவியுடன் மேற்கொண்டபோது, ஹலோகோஸ்ட் படுகொலையில் உயிர் தப்பியவர்களை சந்தித்த போது பாப்பரசர் அவர்களின் கைகளில் முத்தமிடும் சம்பவம் என கண்டறியப்பட்டது.
மேலும் இணையத்தில் பகிரப்படுகின்ற குறித்த வீடியோவின் இறுதியில் இலுமினாட்டிகள் தொடர்பாக சில பதிவுகள் இணைக்கப்பட்டுள்ளதோடு, வீடியோ முழுவதும் அவர்களின் இலட்சினைகள் என கூறப்படும் ஒரு சின்னமும் இடம்பெற்றுள்ளது. மனிதாபிமான அடிப்படையில் பாப்பரசர் நடந்துக்கொண்டு இரு வீடியோக்களை ஒன்று சேர்த்து, அதனுடன் இலுமினாட்டிகள் தொடர்பான பதிவினையும் சேர்ந்து மக்களுக்கு தவறான கருத்தினை கொண்டு சேர்க்கும் விதமாக குறித்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
எனவே நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், உலகத்தினை ஆள்பவர்களின் காலில் விழும் பாப்பரசர் என பகிரப்படும் வீடியோ தவறான கருத்தினை மக்கள் மத்தியில் பரப்புவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:உலகத்தினை ஆள்பவர்களின் காலில் விழும் பாப்பரசர்; உண்மை தெரியுமா?
Fact Check By: S G PrabuResult: Misleading

Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team