கேன்சரால் இறந்து போன உலகப்புகழ் பெற்ற டிசைனர் என குறித்த புகைப்படம் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் இந்த புகைப்படத்தில் உள்ளவர் வேறு நபர் என்று கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் :

Facebook Link | Archived Link

Kalaianban Sangamam என்ற பேஸ்புக் கணக்கில் ” *உலகப்புகழ்பெற்ற #டிசைனர். சமீபத்தில் கேன்சரால் இறந்து போனார். அவர் கடைசியாக எழுதிய வார்த்தைகள்*

+"#மரணத்தை_விட_உண்மையானது_இந்த_உலகத்தில்_எதுவுமே_இல்லை. ! "

+ இந்த உலகத்தில் விலை உயர்ந்த #பிராண்டட்_கார் என்னுடைய கேரேஜில் நிற்கிறது . ஆனால் நான் #சக்கர_நாற்காலியில் அழைத்து செல்ல படுகிறேன்.!

+ இந்த உலகத்தில் உள்ள அனைத்து வகையான டிசைன்களிலும் கலர் களிலும் விலை உயர்ந்த ஆடைகள் விலை உயர்ந்த காலணிகள் விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தும் என் வீட்டில் உள்ளது. ஆனால் நான் மருத்துவமனை வழங்கிய #சிறிய_கவுனில் இருக்கிறேன்.!

+ என் #வங்கி_கணக்கில் ஏராளமான பணம் கிடைக்கிறது ஆனால் எதுவும் எனக்குப் பயன் இல்லையே.!!

+ என் வீடு அரண்மனை போன்று கோட்டை போன்று உள்ளது ஆனால் நான் மருத்துவமனையில் ஒரு சிறு #படுக்கையில் கிடக்கிறேன்.

+ இந்த உலகத்தில் உள்ள ஐந்து #நட்சத்திர ஹோட்டல்களுக்கு நான் பயணித்துக் கொண்டே இருந்தேன். ஆனால் மருத்துவமனையில் உள்ள #ஆய்வகங்களுக்கு மற்றொரு #லேபிற்க்கும் மாற்றி மாற்றி அழைத்துச் செல்லப்படுகிறேன்.!

+ நான் தினசரி லட்சக்கணக்கானவர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொண்டிருந்தேன் . ஆனால் இன்று மருத்துவர்களின் பரிந்துரை தான் எனது #ஆட்டோகிராப். !

+ அன்று தினசரி 7 சிகை அலங்கார நிபுணர்கள் எனக்கு அலங்காரம் செய்வார்கள். ஆனால் இன்று என் #தலையில்_முடியே இல்லை .

+ உலகிலுள்ள பல வகையான உயர் நட்சத்திர ஓட்டல்கள் #உணவுகளை உண்டு கொண்டிருந்தேன். ஆனால் இன்று பகலில் இரண்டு மாத்திரைகள் இரவில் ஒரு துளி உப்பு. !

+ தனியார் #ஜெட்டில் உலகம் முழுவதும் பறந்து கொண்டிருந்தேன். ஆனால் இன்று மருத்துவமனை வராந்தா விற்கு வருவதற்கு #இரண்டு_நபர்கள் உதவுகிறார்கள். ?

+ எல்லா வசதி வாய்ப்புகளும் எனக்கு உதவவில்லை. எந்த விதத்திலும் ஆறுதல் தரவில்லை. ! ஆனால்

சில #அன்பானவர்களின் #முகங்களும்

அவர்களது #தொழுதல்களும் என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. !

+ உலகப்புகழ்பெற்ற #டிசைனர். சமீபத்தில் கேன்சரால் இறந்து போனார். அவர் கடைசியாக எழுதிய #வார்த்தைகள். !....” என்று கடந்த மாதம் 26 ஆம் திகதி (26.09.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

நாம் குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமிர்த்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

குறித்த புகைப்படத்தினை நாம் Google Reverse Image Tool பயன்படுத்தி தேடுதலில் ஈடுபட்டோம்.

அத்தேடலின் போது Ambry Genetics என்ற இணையத்தளத்தில் Nicole Schweppe என்ற நபர் தான் மார்பக புற்றுநோயிலிருந்து மீண்டு வந்தவர் என கண்டறியப்பட்டது.

Ambrygen Link | Archived Link

இவருடைய உத்தியோகப்பூர்வ இன்ஸ்டெகிராம் பக்கத்தினை நாம் ஆய்வு செய்து பார்த்தவேளையில், இவர் மார்பக புற்றுநோயால் அவதி பட்டு வந்துள்ளமை கண்டறியப்பட்டது.

instagram.com

நிக்கோலே ஸ்சவெப்பே உயிரிழந்து விட்டாரா என்று நாம் தேடிய போது அதற்கான எவ்விதமான ஆதாரங்களும் எமக்கு கிடைக்கவில்லை. அவரின் இன்ஸ்டெகிராம் பக்கத்தில் கடந்த மாதம் 16 ஆம் திகதி (16.09.2020) கடைசியாக பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

நாம் பேஸ்புக்கில் பகிரப்பட்ட அந்த பதிவு உண்மையில் யார் தெரிவித்தது என கண்டறிய கூகுள் தேடு தளத்தில் the last words of world famous designer” என தேடிய போது Kyrzayda Rodriguez என்பவர் தெரிவித்த கருத்துக்கள் என standardmedia வில் வெளியான செய்தி எமக்கு கிடைக்கப்பெற்றன.

Standardmedia | Archived Link

குறித்த இணையத்தளத்தில் வெளியாகியுள்ள கருத்துக்களும் பேஸ்புக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள கருத்துக்களும் ஒத்து போகின்றமை கண்டறியப்பட்டது.

மேலும் இது கிர்சாய்தா ரோட்ரிகஸ் ( Kyrzayda Rodriguez) அவர்களால் தான் கூறப்பட்டதா? என்ற வினா எமக்கு எழுந்தது. தொடர்ந்து நாம் மேற்கொண்ட தேடுதலின் போது, அவருடைய இன்ஸ்டெகிராம் பக்கத்தில் அவர் வந்த நேரலை வீடியோ ஒன்று எமக்கு கிடைக்கப்பெற்றது.

அதில் அவர் தெரிவித்த கருத்துக்களே என்பது உறுதி செய்துக்கொள்ள முடிந்தது.

நாம் மேற்கொண்ட தேடுதலின் அடிப்படையில் டிசைனர் கிர்சாய்தா கூறியதை பதிவேற்றம் செய்து அவரின் புகைப்படத்திற்கு பதிலாக மார்பக புற்றுநோய் பாதித்த Nicole Schweppe என்பவரின் புகைப்படத்தினை இணைத்து பகிர்ந்து வருகின்றமை கண்டறியப்பட்டது.

எமது இந்திய தமிழ் பிரிவினரின் ஆய்வு அறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Conclusion: முடிவு

நாம் மேற்கொண்ட தேடுதலின் அடிப்படையில் டிசைனர் கிர்சாய்தா கூறியதை பதிவேற்றம் செய்து அவரின் புகைப்படத்திற்கு பதிலாக மார்பக புற்றுநோய் பாதித்த நிக்கோலே ஸ்சவெப்பே என்பவரின் புகைப்படத்தினை இணைத்து பகிர்ந்து வருகின்றமை கண்டறியப்பட்டது.

Avatar

Title:குறித்த புகைப்படத்தில் உள்ளவர் உலகப்புகழ்பெற்ற டிசைனரா; உண்மை என்ன?

Fact Check By: Nelson Mani

Result: Misleading