INTRO :
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்படும் நபர்களுக்கு $60 புதிய புறப்பாடு வரி என ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் ” நாங்க விமான நிலையத்துக்கு வாரதே CTB பஸ்ல .. 60 டொலர் வரி கட்ட வேண்டுமாம் விமானத்தில் பிரயாணம் செய்ய!! “ என இம் மாதம் 19 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு (19.01.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

நாம் முதலில் நிதியமைச்சரால் புதிய எம்பார்கேஷன் லெவி (Embarkation Levy) விதிக்கப்பட்டுள்ளதா என்பதை நாங்கள் முதலில் சோதித்தோம்.

இது தொடர்பில் கடந்த 11 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் என்ற கையொப்பத்துடன் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டது.

அதன்படி, ஜனவரி 12, 2023 முதல், 27.03.2022 முதல் 26.03.2023 வரையான காலப்பகுதியில் இரத்மலானை சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் இலங்கையிலிருந்து புறப்படும் ஒவ்வொரு நபருக்கும் 30 அமெரிக்க டொலர்கள் விலகல் விதிக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.மற்றும் யாழ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 12.01.2023 முதல் 11.07.2023 வரையிலான காலப்பகுதியில் பயணிக்கும் ஒவ்வொரு நபரும் 30 அமெரிக்க டாலர் விலகல் வரிக்கு உட்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

மேலும், மத்தள மகிந்த ராஜபக்ச விமான நிலையத்துடன் செயல்படும் நாளிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு விலகல் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

அத்தோடு இலங்கையில் உள்ள வேறு எந்த விமான நிலையத்திலிருந்தும் அல்லது கப்பல் துறைமுகத்திலிருந்தும் வெளிநாடுகளுக்கு பயணிக்கும் எவருக்கும் $60 விலகல் வரி அறவிடப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பிறகு, 2019-ம் ஆண்டு வரி விலக்கு எப்படி விதிக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம்.

அதன்படி, 2019 ஆம் ஆண்டு நிதி அமைச்சராக இருந்த மறைந்த மங்கள சமரவீர, எந்தவொரு விமான நிலையத்திலிருந்தும் புறப்படும் நபர்களுக்கு 60 அமெரிக்க டொலர் விலகல் கட்டணத்தை விதித்ததாகத் தெரிகிறது.

மேலும், 2022 ஆம் ஆண்டு, கொழும்பு சர்வதேச விமான நிலையமான இரத்மலானையிலிருந்து இலங்கையிலிருந்து விமானம் மூலம் புறப்படும் ஒவ்வொரு நபருக்கும் 2022.03.27ஆம் ஆண்டு முதல் 2023.03.26 வரை 30 அமெரிக்க டொலர் விலகல் வரி விதிக்கப்படும் என முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தார்.

அத்துடன், தற்போதைய நிதியமைச்சரான ரணில் விக்கிரமசிங்க, அவர்கள் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில், மத்தள மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையத்துடன் சர்வதேச விமானச் சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இரண்டு வருடங்களுக்குள், விமானத்தில் பயணிக்கும் நபர்களுக்கு விலகல் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என குறிப்பிட்டு இருந்தார்.

சில நாட்களுக்குப் பிறகு, கடந்த டிசம்பரில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச விமானங்களை மத்தள விமான நிலையத்தில் இருந்து தொடங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் யாழ் விமான நிலையத்திடமும் வினவியபோது, ​​அண்மையில் இதன் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், விமான நிலையத்திலிருந்து புறப்படும் நபர்களுக்கு 30 டொலர் விலகல் வரி அறவிடப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு :

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே நிதியமைச்சராக இருப்பதால், இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவினரிடம் வினவியபோது, ​​இலங்கையிலிருந்து விமானம் மூலம் புறப்படும் நபர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள விலகல் வரியில் மாற்றம் எதுவும் இல்லை எனவும், முந்தைய விலையே தொடர்வதாகவும் உறுதி செய்தனர்.

மேலும், தற்போதைய அரசாங்கம் 60 அமெரிக்க டொலர் விலகல் வரியை புதிய வரியாக விதிக்கவில்லை என சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் தெரிவித்ததாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்திருந்தது.

Airports and Aviation Services Sri Lanka Pvt :

இது தொடர்பாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் ஸ்ரீலங்கா பிரைவேட் லிமிடெட் பணிப்பாளர் திரு.ஷெஹான் சுமனசேகரவிடம் வினாவினோம்.

2019 ஆம் ஆண்டு முதல் இது வரை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்படும் அனைத்து உள்நாட்டு/வெளிநாட்டு நபர்களுக்கும் விதிக்கப்பட்ட விலகல் வரியானது 60 அமெரிக்க டொலர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். விமானப் பயணச்சீட்டிலும் அவ்வாறே இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, இந்த வரி முன்பும் அதே அளவு வரியாக இருந்ததாகத் தெரிகிறது. இலங்கையில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் இருந்து புறப்படும் நபர்களுக்கு புதிய வழிப்பறிக் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதாக பிரதான ஊடகங்களும் சில சமூக ஊடகங்களும் குறிப்பிட்டிருந்தமையால் மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டனர்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok

Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்படும் நபர்களுக்கு $60 புதிய வரியா?

Fact Check By: Gnana Prabhu

Result: Misleading