
INTRO :
3 வயது குழந்தை பட்டத்தோடு பறந்து சென்ற காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் இலங்கை மற்றும் இந்தியாவில் என தலைப்பிட்டு பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் ” அகமதாபாத் , பட்டம் விடும் விழாவில், 3 வயது குழந்தை பட்டத் தோடு எடுத்துச்செல்ல பட்ட காட்சி. By God’s grace, குழந்தை தப்பி பிழைத்தது !!! “ என இம் மாதம் 2021 ஆம் திகதி (21.01.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் குறித்த வீடியோவை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி ஆய்வு செய்த போது,குறித்த வீடியோ பல வருடங்களுக்கு முன்னர் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது. மேலும் இது தொடர்பாக நாம் ஆய்வு செய்த போது, 2020 ஆம் ஆண்டு இணையத்தில் வெளியான செய்திகள் நமக்குக் கிடைக்கப்பெற்றன.

மேலும் சில சர்வதேச ஊடகங்களில் இது குறித்து வெளியான செய்திகள்
theguardian.com| abc.net.au | cnn.com
இது தாய்வான் நாட்டில் பட்டம் விடும் திருவிழாவின் போது பட்டத்தின் வாலில் சிக்கிக்கொண்ட 3 வயது குழந்தை வானில் பறந்ததாகவும், குறித்த குழந்தை காயம் ஏதுமின்றி உயிர் தப்பியதாகவும் செய்தி வெளியாகியிருந்தமை காணக்கிடைத்தது.
இது தொடர்பாக எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், 3 வயது குழந்தை பட்டத்தோடு பறந்து சென்ற சம்பவம் தாய்வான் நாட்டில் 2020 ஆம் ஆண்டு நடைபெற்றது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:3 வயது குழந்தை பட்டத்தோடு பறந்து சென்ற சம்பவம்; உண்மையில் எங்கு நடந்தது தெரியுமா?
Fact Check By: S.G.PrabuResult: False

Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team