
INTRO:
செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து என சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):
சமூக வலைத்தளங்களில் “ செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து!
தற்பொழுது எல்லாம் கிட்னி பழுது அடைந்தால் டயாலிசிஸ் என்று ரத்தம் மாற்றுகிறார்கள்,
அதிக சிரமம் மற்றும் செலவு
creatinine level 0.6 to 1.3 இருக்க வேண்டும்,
அப்படி இந்த level உள் இல்லை என்றால்
கிட்னி failure, function சரியில்லை, ரத்தம் மாற்ற வேண்டும், கிட்னி மாற்ற வேண்டும் என்பார்கள்,
பல லட்சம் செலவு ஆகும், வேதனை வலி இருக்கும்
இதை சரி செய்ய எளிய வழி உண்டு.
நாட்டு மருந்து கடைக்கு சென்று இந்து உப்பு என்று கேளுங்கள் கிடைக்கும்,
ஒரு கிலோ 60 ருபாய் மட்டுமே அல்லது 80 ருபாய்
இந்த உப்பை கொண்டு வீட்டில் மூன்று வேளையும் உணவு சமைத்து சாப்பிடுங்கள் ,
15 நாட்கள் அல்லது அதிக பட்சம் 30 நாளில்
உங்கள் கிட்னி இயல்பு நிலைக்கு திரும்பும் ,
அதன் பிறகு நீங்கள் creatinine level சோதனை
செய்து பாருங்கள் சரியான அளவில் இருக்கும்.
இந்த உப்பை கொண்டு சமைத்த உணவை
நோயாளி மட்டும் தான் சாப்பிட வேண்டுமா?
…
யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்,
ஒரு வயது குழந்தை முதல் முதியவர்
வரை சாப்பிடலாம்
இந்து உப்பு என்றால் என்ன ?….
இமாலய மழை பகுதியில் பாறைகளை வெட்டி
எடுக்க படும் உப்பே இந்து உப்பு இதை ஹிந்துஸ்தான் உப்பு என்பார்கள் , கூகிள் சென்று ஆங்கிலத்தில் himaalayan rock salt என்று type செய்தால் உங்களுக்கு தகவல் கிடைக்கும், உடலுக்கு தேவையான 80 மினரல் இந்த உப்பில் உள்ளது.
இந்த உப்பு வேற எந்த நோய்க்கு கேட்கும்?
Thyroid பிரச்சனைக்கு கேட்கும்,
வாய் கொப்பளித்தால் பல் ஈறுகள் பிரச்சனை
வாய் புண் ஆகியவை கேட்கும்
அல்சர் piles வந்தால் பச்சை மிளகாய் தவிர்த்து
வர மிளகாய் சேர்ப்பது போல , சாதா உப்பை
தவிர்த்து இந்து உப்பு சேருங்கள்
கிட்னி இயல்பு நிலைக்கு திரும்பும்.
Docter குடுகிற மருந்தை கேள்வி கேட்காம
கண்ணை மூடி கொண்டு சாப்பிடுறீங்க
கடையில் விக்கும் இந்த உப்பை வாங்கி சாப்பிடுங்க கிட்னி சரியாகும்னு சொல்லுகிறார்கள்
சந்தேக படமா சாப்பிடுங்க ,மேலும் தினமணி ஞாயிறு மணியில் ஆயுர்வேத நிபுணரும், பேராசிரியருமான எஸ்.சுவாமிநாதன்அவர்கள் எழுதிய இந்துப்பு பற்றிய கட்டுரையில் இருந்து சில விபரங்கள்..
.மனிதன் பயன்படுத்ததக்கது இந்துப்பு தான் என்கிறது ஆயுர்வேதம்.
1. இந்துப்பு சிறிதளவு சுவையுடையது.
2 ஆண்மையை வளர்ப்பது.
3 . மனதிற்கு நல்லது..
4.வாதம், பித்தம், கபம் மூன்றையும் போக்க வல்லது.இலேசானது.
5.சிறிதளவு உஷ்ணமுள்ளது.
6.கடலுப்பை உண்ணும் போது அது முடிவில் இனிப்பாக மாறிவிடும். அது விரைவில் சீரணமாகாது.
ஆனால் இந்துப்பு இதற்கு நேர்மாறானது. கடலுப்பினால் ஏற்படும் கெடுதலைக்கூட தடுத்து விடும்.எனவே நீங்கள் இந்துப்பு வாங்கி உணவில் சேர்த்து பயன்படுத்துங்கள். ” இம் மாதம் 12 ஆம் திகதி 2025 ஆம் ஆண்டு (12.02.2025) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
சமூகவலைத்தளங்களில் பரவுகின்ற குறித்த தகவல் தொடர்பில் நாம் ஆய்வினை மேற்கொண்டபோது, மருத்துவர் Dr. G.ராஜாசங்கர் M.D.(S ) விகடன் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணல் எமக்கு கிடைக்கப்பெற்றது.
சிறுநீரக நோயாளிகள் இந்துப்பை எடுத்துக்கொள்ளலாமா? என்ற வினாவிற்கு,
- இந்துப்பில் பொட்டாசியம் குளோரைடு சற்று அதிகமாக உள்ளது என்பதால் இதுவரை கல் உப்பு, தூள் உப்பைப் பயன்படுத்தியவர்கள் இந்துப்புக்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு செய்தி… பொட்டாசியம் குளோரைடு மற்றும் சோடியம் குளோரைடு இந்துப்பு மட்டுமன்றி வேறு சில உப்புகளிலும் உள்ளன.
- நாம் உண்ணும் உணவுப்பொருள்கள் சிலவற்றிலும்கூட கலந்திருக்கின்றன. வாழைப்பழம், வெந்தயக் கீரை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, உருளைக்கிழங்கு, காளான், வெள்ளரிக்காய், பூசணிக்காய், தக்காளி, பேரீச்சம்பழம் மற்றும் சில வகை மீன்கள், பால் பொருள்கள், சோயா பீன்ஸ், கோழி இறைச்சி, சிவப்பரிசி மற்றும் தவிடு நீக்காத தானியங்களில் பொட்டாசியம் குளோரைடு உள்ளது.
- குழந்தைகளுக்கான பதப்படுத்தப்பட்ட உணவுகள், தானியங்கள், சூப், சாஸ் வகைகள், சிப்ஸ், உறைந்த இறைச்சி, குளிர் பானங்கள் போன்றவற்றிலும் பொட்டாசியம் குளோரைடு கலந்துள்ளது. ஆனால், சோடியம் குளோரைடு மற்றும் பொட்டாசியம் குளோரைடு தொடர்ச்சியாக மற்றும் அதிகமாக உடலில் சேரும்போது அது சிறுநீரக அழற்சியை ஏற்படுத்துவதுடன் சிறுநீரகச் செயலிழப்பையும் ஏற்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
- குறிப்பாக பொட்டாசியம் குளோரைடு, சோடியம் குளோரைடு உள்ள இந்துப்பு நல்லது என்பதற்காக அதை அதிகளவில் பயன்படுத்தினால், அது சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகளை அதிகரிக்கச் செய்யும். எனவே, சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்கள் இந்துப்பைத் தவிர்க்கவும் என தெரிவித்திருந்தார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் சுதேச மருத்துவ நிறுவனத்தின் முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர், வைத்தியர் எல். பி. ஏ. கருணாதிலக்க
குறித்த விடயம் தொடர்பில் மேலதிக தெளிவினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சுதேச மருத்துவ நிறுவனத்தின் முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர் வைத்தியர் எல். பி. ஏ. கருணாதிலக்கவிடம் வினவியபோது, இந்து உப்பு மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. ஆனால் ஒரு நோய்க்கு, குறிப்பாக சிறுநீரக நோய்களுக்கு, இந்து உப்பை மட்டும் சிகிச்சையாகப் பயன்படுத்த முடியாது. ஆனால் சிறுநீரக நோய்களுக்கு பரிந்துரைக்கப்படும் மருந்துகளில் கல் உப்பு ஒரு மூலப்பொருளாகும். மற்றொரு மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இதை தவறான முறையில் (அளவு, விகிதம், சுத்திகரிப்பு போன்றவை) பயன்படுத்தினால் அது அதிக ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.
இந்து உப்பு என்றால் என்ன?
இந்து உப்பு என்பது ஒருவிதமான பாறையிலிருந்து எடுக்கப்படும் உப்பு. பஞ்சாப், ஹரியானா, பகுதிகளிலும், இமயமலை பகுதிகளில் இந்த உப்பானது மலைகளில் இருந்து வெட்டி எடுக்கப்படுகிறது. இந்து உப்பானது வெள்ளை, சிவப்பு மற்றும் ஊதா நிறங்களில் காணப்படுகின்றது சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த உப்பு பயன்படுத்தப்படுகிறது.
ஒரு நபர் ஒரு நாளைக்கு உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய உப்பின் அளவு
உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி ஒரு நபர் ஒரு நாளைக்கு உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய உப்பின் அளவு 5 கிராம் விட குறைவாக இருத்தல் வேண்டும் என அறிவூறுத்தப்பட்டுள்ளது.
நாம் மேற்கொண்ட ஆய்வின் மூலம், இந்துப்பு பல்வேறு மருத்துவக் குணங்கள் கொண்டுள்ளமை சந்தேகமில்லை. ஆனால், அளவுக்கு மீறி பயன்படுத்தினால் ஆபத்தை ஏற்படுத்தும். இந்துப்பு பயன்படுத்துவதால், செயலழிந்த சிறுநீரகம் இரண்டே வாரத்தில் சரிசெய்ய முடியும் என்று சொல்வதெல்லாம் போலியான தகவல் என கண்டறியப்பட்டுள்ளது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான இந்துப்பு என பரவும் தகவல் உண்மையா ?
Fact Check By: S.G.PrabuResult: False


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team