INTRO :
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வைத்தியசாலையில் பார்வையிட்ட பிரதமர் ஹரிணி என ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின்விவரம் (What is the claim):
சமூகவலைத்தளங்களில் “ ரணிலை வைத்தியசாலையில் பார்வையிட்ட பிரதமர் ஹரிணி
பிரதமர் ஹரிணி, திருமதி மைத்ரி விக்கிரமசிங்கவுடன் இணைந்து நேற்று நள்ளிரவு முன்னாள் ஜனாதிபதி ரணிலை வைத்தியசாலையில் பார்வையிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கொழும்பிலுள்ள பிரதான சிங்கள ஊடகமொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.“என இம் மாதம் 25 ஆம் திகதி 2025 ஆம் ஆண்டு (25.08.2025) பதிவேற்றம்செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர்பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை குறித்து விசாரிக்க பிரதமர் நேற்று (24) இரவு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சென்றதாக வேறு எந்த பிரதான ஊடகங்களிலும் செய்தி வெளியாகியிருக்கவில்லை.
கொழும்பு தேசிய வைத்தியசாலை
குறித்த செய்தியின் உண்மைத்தன்மையினை கண்டறிய நாம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் துணை இயக்குநர் வைத்தியர் ருக்ஷன் பெல்லனாவிடம் நாங்கள் வினவியபோது, பிரதமர் வந்ததாக வைத்தியசாலை நிர்வாகத்திடமிருந்து எந்தத் தகவலும் இல்லை என்றும், பாதுகாப்புப் படையினரிடமிருந்து அத்தகைய உறுதிப்படுத்தலும் இல்லை என்றும் அவர் கூறினார். எனவே, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்திக்க அவர் வந்தமை தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகத்திற்குத் தெரியாது என்று அவர் வலியுறுத்தினார்.
இன்று (25) காலை ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்தபோது, பிரதமர் ஹரிணி அவரை சந்திக்க வந்ததாக பரவிய வதந்தி குறித்து விசாரித்தபோது, ரணில் விக்கிரமசிங்க வைத்தியர் பெல்லனாவிடம் தன்னைப் பார்க்க அவர் வரவில்லை என்று கூறியதாகவும் அவர் எங்களிடம் தெரிவித்தார்.
நேற்றிரவு ரணில் விக்கிரமசிங்க சிகிச்சை பெற்று வரும் சிறுநீரக தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு பிரதமர் சென்றதாக செய்திகள் வந்ததா என்று தேசிய வைத்தியசாலையின் பல நம்பகமான வட்டாரங்கள் மூலம் விசாரித்தோம். அப்போது, பிரதமர் அவர்கள் ரணில் விக்கிரமசிங்கவைப் பார்க்க வரவில்லை என எமக்கு தெரிவித்தனர்.
இது குறித்து பிரதமரின் ஊடகப் பிரிவிலும் நாங்கள் விசாரித்தோம், அப்போது இணையத்தில் பகிரப்படும் குறித்த செய்தி தவறானது என்றும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் மனைவி மைத்ரி விக்ரமசிங்கவுடன் அவரது நலம் விசாரிக்க செல்லவில்லை என்றும் அவர்கள் எமக்கு தெரிவித்தனர்.
ஹிரு வெளியிட்ட செய்தி
பிரதமர் முன்னாள் முதல் பெண்மணி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவுடன் வந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்ததாகவும், அவர்கள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வைத்தியசாலையில் செலவிட்டதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்ததாக அவர்களின் வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தனர்.
இது குறித்து விசாரிக்க நாம் ஹிரு டிவி டிஜிட்டல் இயக்குனர் விமுக்தி பண்டாரவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வினவியபோது, இந்த செய்திக்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக அவர் கூறினார்.
இருப்பினும், குறித்த செய்தியினை உறுதிப்படுத்தக்கூடிய புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் கொண்ட எந்த ஆதாரங்களையும் அவர்கள் இன்னும் தங்கள் வலைத்தளத்திலோ அல்லது அவர்களின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கங்களிலோ பதிவிட்டிருக்கவில்லை..
பிரதமரின் செயலாளர் வெளியிட்ட கடிதத்திற்குப் பிறகு, பிரதமரின் செயலாளர் வெளியிட்ட கடிதம் தொடர்பாக மட்டுமே ஹிரு மீண்டும் சமூக ஊடகங்களிலும் இணையதளத்திலும் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளமை காணக்கிடைத்தது.
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வில், ரணிலை வைத்தியசாலையில் பார்வையிட்ட பிரதமர் ஹரிணி என பரவும் தகவல் தவறானது என்பது கண்டறியப்பட்டது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team