INTRO :
வடக்கில் இம்முறை தபால் மூல வாக்குகளில் அதிகம் அர்ச்சுனாவின் கட்சிக்கும், திசைகாட்டிக்கும் கிடைத்துள்ளது என சில பதிவுகள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):
சமூகவலைத்தளங்களில் “வடக்கில் இம்முறை தபால் மூல வாக்குகளில் அதிகம்
1. அர்ச்சுனாவின் கட்சிக்கும்
2. திசைகாட்டிக்கும்
கிடைத்துள்ளது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
“ என இம் மாதம் 25 ஆம் திகதி 2025 ஆம் ஆண்டு (25.04.2025) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் தற்போது அதற்கான தபால் மூல வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றன.
அதற்கமைய கடந்த வியாழக்கிழமை (24.04.2025) ஆரம்பிக்கப்பட்ட தபால் மூல வாக்களிப்பு நாளையுடன் (29.04.2025) நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வடக்கில் இம்முறை தபால் மூல வாக்குகளில் அர்ச்சுனாவின் கட்சிக்கும், தேசிய மக்கள் சக்தி கட்சிக்கும் அதிகம் வாக்குகள் கிடைத்துள்ளது என பரவும் தகவல் தொடர்பாக ஆய்வினை மேற்கொள்ள நாம் தேர்தல் ஆணையத்தினை தொடர்பு கொண்டு வினவியபோது, அது முற்றிலும் போலியானது என எமக்கு உறுதிப்படுத்தினர்.
தற்போது இடம்பெற்று வருகின்ற தபால் மூல வாக்குகள் எண்ணும் பணி எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைப்பெற்று முடிந்த பின்னரே அன்று மாலை தான் குறித்த தபால் மூல வாக்குகளும் எண்ணப்படும் என எமக்கு தெரிவித்தார்.
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் வடக்கில் இம்முறை தபால் மூல வாக்குகளில் முன்னிலை கட்சிகள் என பரவும் தகவல்கள் போலியாக பகிரப்பட்டுள்ளமை என கண்டறியப்பட்டுள்ளது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:வடக்கில் இம்முறை தபால் மூல வாக்குகளில் முன்னிலை கட்சிகள் குறித்து வெளியான தகவல் உண்மையா ?
Fact Check By: S.G.PrabuResult: False


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team