
INTRO :
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு வணக்கம் தெரிவிக்கும் நிலந்தி கொட்டஹச்சி என சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின்விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில்“ 2உகண்டா பணத்துக்காக வளைகிறாரோ ,NPP கொட்டச்சி. JVP ,சாக்கு மாடுகள் பார்த்து மகிழவும்.
“என இம் மாதம் 30 ஆம் திகதி 2025 ஆம்ஆண்டு (30.10.2025) பதிவேற்றம்செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர்பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
சமூகவலைத்தளத்தில் பகிரப்படும் குறித்த புகைப்படத்தினை நாம் ஆய்வு செய்த போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் குறித்த புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

“ராதிஷன் சிறிபதன மற்றும் மனுஷி சேனாரத்னவின்” திருமண வைபவத்தின் போது எடுத்த கொண்ட புகைப்படம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பேஸ்புக் பக்கத்தில் உள்ள பதிவிட்டிருந்த புகைப்படத் தொகுப்பில் குறித்த புகைப்படம் காணப்பட்டது., எனவே சமூக ஊடகங்களில் ராதிஷன் மற்றும் மனுஷியின் திருமண புகைப்படங்களை தொடர்பாக நாம் ஆய்வினை மேற்கொண்டோம்.
குறித்த திருமண நிகழ்விற்கு நடிகர் ரஞ்சன் ராமநாயக்க கலந்து கொண்டிருந்தமை காணக்கிடைத்தது. அதற்கமைய நாம் நிலந்தி கொட்டஹச்சி குறித்த நிகழ்விற்கு வருகை தந்தாரா என அவரிடம் வினவியபோது, இந்த திருமண நிகழ்விற்கு நிலந்தி கொட்டஹச்சி கலந்து கொள்ளவில்லை என எமக்கு உறுதி செய்தார்.
மேலும் இந்த திருமண நிகழ்வில் கலந்துக்கொண்ட ஏனைய சில கலைஞர்களிடம் நாம் வினவிய போதும் அவர்களும் நிலந்தி கொட்டஹச்சி அவர்கள் குறித்த திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை என தெரிவித்தனர்.
இதை மேலும் உறுதிப்படுத்த நாம்,மணமகனின் தாயாரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வினவியபோது,சமூக ஊடகங்களில் பரவி வரும் புகைப்படம் அவரது சகோதரியின் மகள் என்றும், அவர் நிலந்தி கொட்டஹச்சி அல்ல என்றும் உறுதிப்படுத்தினார். தனது குடும்பத்தினர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நெருக்கமானவர்கள் என்பதனால், தனது மகனின் திருமணத்திற்கு அழைக்கப்பட்டதாகவும், ஜேவிபி அல்லது தேசிய மக்கள் சக்திடன் தொடர்புடையவர்கள் யாரும் தனது மகன்களின் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும், எமக்கு தெரியப்படுத்தினார்.
இந்தப் புகைப்படம் குறித்து நாம் நிலந்தி கொட்டஹச்சியிடமும் வினவியபோது, சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் இருப்பது தான் இல்லை என்றும், தான் குறித்த திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும், அது யாருடைய திருமணம் என்று கூட தனக்குத் தெரியாது என்றும் அவர் கூறினார். இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்திலும் ஒரு பதிவையும் அவர் வெளியிட்டிருந்தார்.

இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு வணக்கம் தெரிவிக்கும் நிலந்தி கொட்டஹச்சி என பகிரப்படும் தகவல் தவறானது என கண்டறியப்பட்டுள்ளது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.
 
					  Title:முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு வணக்கம் தெரிவிக்கும் நிலந்தி கொட்டஹச்சி என பரவும் புகைப்படம் உண்மையா..?
Fact Check By: S.G.PrabuResult: False


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team


 
	 
						 
						