INTRO :
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்படும் காட்சி காட்சி என ஒரு வீடியோ சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின்விவரம் (What is the claim):
சமூகவலைத்தளங்களில் “ வைத்தியசாலை முழுவதும் அழுகை சத்தம்
கொழும்பு தேசிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட ரணில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்படும் காட்சி “என இம் மாதம் 23 ஆம் திகதி 2025 ஆம்ஆண்டு (23.08.2025) பதிவேற்றம்செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர்பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர் பணியாற்றிய காலப்பகுதியில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக நேற்று முன்தினம் (22.08.2025) குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வாக்குமூலம் வழங்க சென்றவேளையில், கைது செய்யப்பட்டு அதன் பின்னர் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வழக்கு விசாரணை முடிவில், வருகின்ற ஆகஸ்ட் 26 (26.08.2025) ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தீர்ப்பளிக்கப்பட்டது. Link
நேற்று முன்தினம் (22) இரவு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு நேற்று (23.08.2025) மாற்றப்பட்டார்.
முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலையை பரிசோதித்த சிறைச்சாலை மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில், அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பிரதான ஊடகங்களில் செய்தி வெளியாகின.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லனா தெரிவித்துள்ளார். News Link
இணையத்தில் தற்போது பகிரப்படும் காணொளி தொடர்பாக நாம் ஆய்வினை மேற்கொண்டபோது, இது கடந்த 2019 ஆம் ஆண்டு வண. அதுரலியே ரத்தன தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட காணொளி என கண்டறியப்பட்டது.
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வில், முன்னாள் ஜனாதிபதி ரணில் வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்படும் காட்சி என பரவும் வீடியோ தவறானது என்பது கண்டறியப்பட்டது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team