
INTRO
ஆபத்தில் இருக்கும் விலங்குகளை காப்பாற்றுவது தொடர்பான பல காணொளி மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருவதனை நாம் அவதானித்திருப்போம். அந்த வகையில் தற்போது மலை உச்சியில் சிக்கியிருக்கும் யானையை மீட்கும் காணொளியொன்று சமூக ஊடக்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் காணமுடிந்தது.
அது தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது.
குறித்த காணொளியில் “நேற்று முன்தினம் மாத்தளை லக்கல பிரதேசத்தில் காட்டு யானை ஒன்று மலைக்காட்டுப் பகுதியில் மலையில் இருந்து சறுக்கி ஆபத்தில் சிக்கிக் கொண்டது. இதனைக் கண்டுகொண்ட பிரதேசவாசிகள் பெக்கோவின் உதவியுடன் அதனை மீட்டடெடுத்தனர்“ என தெரவித்து கடந்த 2024.11.22 ஆம் திகதி பதிவேற்றம் செய்துள்ளனர்.
இவ்வாறான ஒரு மெய்சிலிர்க்கும் சம்பவம் இலங்கையில் நிகழ்ந்திருக்கும் பட்சத்தில் அது தொடர்பில் பிரதான ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கும்.
எனவே அது தொடர்பில் நாம் ஆராய்ந்தபோது குறித்த சம்பவம் தொடர்பில் எந்த செய்திகளும் பிரதான ஊடகங்களில் வெளியாகவில்லை என்பதனை நாம் முதலில் உறுதிப்படுத்திக்கொணடோம்.
பின்னர் காணொளியை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்திய போது இது யானையை காப்பாற்றுவது தொடர்பான உண்மையான காணொளி அல்ல எனவும் இதுவொரு செயற்காக உருவாக்கப்பட்ட காணொளி என்பதுவும் தெளிவானது.
மேலும் இந்த காணொளியின் பின்னணி குறித்து நாம் ஆய்வு செய்த போது இது Athing Inside என்ற YouTube சேனலில் இந்த காணொளி முதலில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்ததனை அவதானிக்க முடிந்தது.
மேலும் இந்த YouTube சேனலில் சாதாரண காணொளிகளை வித்தியாசமான மற்றும் வேடிக்கையான முறையில் மாற்றி பதிவேற்றம் செய்யப்படும் காணொளிகள் உள்ளடங்கிய ஒரு YouTube சேனல் என குறிப்பிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.
அவர்களால் உருவாக்கப்பட்டு சமூக ஊடகங்களில் வைரலான யானையை காப்பாற்றும் காணொளியை பார்வையிட
மேற்குறிப்பிட்ட Athing Inside YouTube சேனலில் AI தொழிநுட்பம் மற்றும் பல வீடியோ எடிட்டிங் உத்திகளை பயன்படுத்தி இந்தக் குழுவால் உருவாக்கப்பட்ட பல காணொளிகளை எம்மால் காணமுடிந்தது.
மேலும் AI தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி அவர்களால் உருவாக்கப்பட்ட சில காணொளிகளை பார்வையிட
செயற்கை நுண்ணறிவு மூலம் காணொளிகளை உருவாக்குதல் மற்றும் எடிட் செய்யப்பட்ட காணொளிகள்
நவீன தொழிநுட்ப வளர்ச்சியுடன்,செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி குறுகிய காலத்தில் யாதார்த்தமான காணொளிகள் மற்றும் புகைப்படங்களை உருவாக்கக்கூடிய பல செயலிகள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன
மிகவும் சிக்கலான சூழல்களை யதார்த்தமாக உருவாக்கும் மற்றும் Meta நிறுவனத்தால் வெளியிடப்பட்ட செயற்கை நுண்ணறிவுடன் தொடர்புடைய MovieGen போன்றன தற்போது சமூகத்தில் பிரபல்யமடைந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
அது குறித்த தகவல்களை அறிந்து கொள்ளுங்கள் Link
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion (முடிவு)
மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் மாத்தளை லக்கல பிரதேசத்தில் மலை உச்சியில் சிக்கிய காட்டு யானையை மீட்கும் காணொளியானது உண்மையான நிகழ்வல்ல என்பதுவும் அது வீடியோ எடிட்டிங் உத்திகளை பயன்படுத்தி செயற்கையாக தயாரிக்கப்பட்ட காணொளி என்பதுவும் தெளிவாகின்றது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:மலை உச்சியில் சிக்கிய யானையை மீட்கும் காணொளி உண்மையா?
Fact Check By: Suji shabeedharanResult: False
