வானிலை அறிக்கையிடலை வழங்கும் நிருபரின் காணொளி உண்மையா?

False சர்வதேசம் | International

மெக்ஸிகோவின் வானிலை தொடர்பில் வீதியில் இருந்து பெண் நிருபர் ஒருவர் தொலைக்காட்சிக்கான அறிக்கையிடலை வழங்குவதனை போன்ற காணொளி ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் காண முடிந்தது.

எனவே இந்த காணொளியின் உண்மை தன்மை தொடர்பில் ஆராயும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின் விவரம் (What is the claim)

Facebook | Archived Link

“நீர் மூழ்கி பய்க்” என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளியானது நேற்று (2025.06.15) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

மேலும் குறித்த காணொளி பலராலும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்ததுடன் இந்த காணொளி உண்மை என எண்ணி பலரும் கமெட் செய்திருந்தமையையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

எனவே மெக்ஸிகோவில் கடும் மழை தொடர்பில் அறிக்கையிடும் சந்தர்ப்பத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் தீடீர் என அந்த மழை வெள்ளத்தில் மூழ்கியமை தொடர்பான செய்திகள் எதுவும் சர்வதேச ஊடகங்களில் வெளியாகியுள்ளனவா என நாம் ஆராய்ந்த போது அவ்வாறான எந்த செய்திகளையும் எம்மால் காணமுடியவில்லை.

ஆகவே குறித்த காணொளியின் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்திய போது, மெக்ஸிகோ நகர குடிமக்கள் பாதுகாப்பு செயலகம் (SCC), அதன் X தளத்தில், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட சில வீடியோக்கள் குறித்து எச்சரிக்கையை வெளியிட்டிருப்பதாக தெரிவித்து ஒரு செய்தி வெளியிடப்பட்டிருந்தது.Link 

அந்த செய்தியில் மேற்குறிப்பிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளி தொடர்பிலும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

அதில் சமீப நாட்களாக, சில AI  தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்ட காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது. அவற்றில் ஒரு நிருபர் இயற்கை அனர்த்த் குறித்து அறிக்கையிட்டுக் கொண்டிருக்கும் போது ஒரு நபர், நிருபரின் பின்னால் மோட்டார் சைக்கிளில் சென்று, விபத்துக்குள்ளாவது போன்று காட்ப்படுகின்றது.

இருப்பினும், மெக்சிகோ நகர சைபர் பொலிஸ் பிரிவின் கூற்றுப்படி, இந்த வைரல் கணொளிகளில்  தீங்கிழைக்கும் இணைப்புகள், உள்ளன இந்த வீடியோக்கள் பெரும்பாலும் பயனர்களை மோசடியான பயன்பாடுகளைப் பதிவிறக்கம் செய்ய ஊக்குவிக்கின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான காணொளிகள் மூலம் சில AI Tools ஐ பதிவிறக்கம் செய்ய பயனர்கள் ஊக்குவிக்கப்படுவதனால், அதிகாரப்பூர்வமற்ற தளங்கள் அல்லது நம்பத்தகாத மூலங்களிலிருந்து AI Toolsஐ பதிவிறக்க வேண்டாம் எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனவே சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட குறித்த காணொளியும் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒன்றா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக, நாம் குறித்த காணொளியை AI Detective Tool ஐ பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டிருந்தோம்.

இதன்போது குறித்த காணொளியானது செயற்கை நுண்ணறி தொழிநுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒன்று என்பது உறுதியானது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion (முடிவு)

எனவே எமது ஆய்வின் அடிப்படையில் கனமழையின் போது வானிலை அறிக்கையிடலை வழங்கும் நிருபரின் காணொளியானது போலியானது என்பதுடன் அது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒன்று என்பதுவும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் மெக்ஸிகோ நகர குடிமக்கள் பாதுகாப்பு செயலகத்தின் கூற்றின் படி இவ்வாறான AI காணொளிகள் மூலம் மக்களின் தரவுகள் திருடப்பட்டு அவர்கள் மோசடியில் சிக்கிக் கொண்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:வானிலை அறிக்கையிடலை வழங்கும் நிருபரின் காணொளி உண்மையா?

Written By: Suji Shabeedhran  

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *