
சுனாமி அலை கரையை தாக்கும் சந்தர்ப்பத்தில் 3,00,000 அடி உயரத்தில் இருந்து எடுக்கப்பட்டதாக தெரிவித்து காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.
எனவே இது தொடர்பான உண்மையை கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):
குறித்த சமூக ஊடகப் பதிவில் 3,00,000 அடி உயரத்தில் இருந்து சுனாமியை பார்த்தால் எப்படி இருக்கும் தெரியுமா?
அது பெரிய அலை போல தெரியாது, கடலை முழுவதும் பரவும் அசுர அலைபோன்ற அலைச்சலாகத் தெரியும். இயற்கையின் வலிமை உண்மையிலேயே அச்சத்தையும் அதிசயத்தையும் தருகிறது. என தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.1.03 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் பலரும் சமூக ஊடகங்களில் இந்த காணொளியை பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
அந்த பதிவில் இந்த காணொளி எப்போது எடுக்கப்பட்டது எங்கு எடுக்கப்பட்டது என்பது தொடர்பான எந்த தகவல்களும் வழங்கப்பட்டிருக்கவில்லை.
அத்துடன் சுனாமி தோன்றும் போது விமானத்தில் இருந்து உண்மையில் இவ்வாறானதொரு காணொளி எடுக்கப்பட்டிருக்குமாயின் அது தொடர்பில் சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கும் எனினும் நம் மேற்கொண்ட ஆய்வில் அவ்வாறான எந்த செய்திகளும் வெளியாகவில்லை என்பதனை அறியமுடிந்தது.
மேலும் இந்த காணொளியை நன்கு அவதானிக்கும் போது அந்த விமானமானது முன்னோக்கி பறப்பதாக தெரியவில்லை மற்றும் கடல் அலை கரையோரத்தை நோக்கி பாயும்போது, வெள்ளை நீர் அலையின் மற்ற பகுதிகளிலிருந்து இயற்கைக்கு மாறான முறையில் பிரிவதனையும் அவதானிக்க முடிகின்றது.

எனவே நாம் குறித்த காணொளியின் சில காட்சிகளை ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்தி ஆய்வு செய்த போது, Goggles On என்ற யூடியூப் பக்கத்தில் குறித்த காணொளி 2025.04.29 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளமையை காணமுடிந்தது.
மேலும் “30,000 அடி உயரத்தில் இருந்து… இதைப் பார்த்தேன்”, எனற தலைப்பில் இந்த காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்ததுடன் இது செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது என்று கூறும் hashtagsகளும் அதில் கொடுக்கப்பட்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது.

அத்துடன் குறித்த யூடியூப் பக்கத்தில் செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்ட பல காணொளிகள் பதிவேற்றப்பட்டிருந்தமையும் குறிப்படத்தக்கது.
எனவே நாம் இந்த காணொளியை AI Detective Tool ஐ பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்ட போது இந்த காணொளியானது AI தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டுள்ளமை உறுதியானது.

Also Read: Misleading Videos Shared as 2025 Russia-Japan Tsunami Footage
எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் 3,00,000 அடி உயரத்தில் இருந்து எடுக்கப்பட்ட சுனாமியின் காணொளி பகிரப்படும் காணொளியானது தவறானது என்பதுடன் அது செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டது என்பதுவும் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.
Title:3,00,000 அடி உயரத்தில் இருந்து எடுக்கப்பட்ட சுனாமியின் காணொளியா இது?
Fact Check By: Suji shabeedharanResult: False


