
INTRO:
இலங்கையில் நடந்த மாவீரர் நினைவேந்தல் என சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):
இன்றைய தினம் மாவீரர் நினைவேந்தல் மேற்கொள்ளப்படுவதால் சமூக வலைத்தளங்களில் இலங்கையில் முன்னெடுக்கப்படும் நிகழ்வுகள் என சிங்களத்தின் பதிவிட்டு இம் மாதம் 25 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு (25.11.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பாக ஹிரு தொலைகாட்சியிலும் செய்தி வெளியிட்டிருந்தமை காணக்கிடைத்தது.
பலரும் இது இலங்கையில் நடந்த சம்பவம் என நினைத்து பகிர்ந்து வருகின்றமை காணக்கிடைத்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இது குறித்த வீடியோவை நன்கு அவதானித்த போது, அதில் 27.11.2024 என்று பதிவிட்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதியில் இருந்து பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த காணொளியில் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி நாம் கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்தபோது, டிக்டொக் கணக்கில் கடந்த 19 ஆம் திகதியன்று பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

தொடர்ந்து இது குறித்து நாம் ஆய்வினை மேற்கொண்டபோது, 2023 ஆம் ஆண்டு பேஸ்புக் கணக்கில் வெளியாகியிருந்த நேரலை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த நேரலையில் உள்ள அலங்கார வேலைப்பாடுகள் மற்றும் குறித்த இடம் அமைக்கப்பட்டிருந்த விதம் எல்லாமே இணையத்தில் தற்போது வைரலாகின்ற வீடியோவுடன் ஒத்துபோவது எமது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது.
Archived Link
இது தொடர்பாக வெளியாகியிருந்த செய்த அறிக்கைகளும் எமக்கு கிடைக்கப்பெற்றன. Link 1 | Archived link | Link 2 | Archived Link
இதற்கமைய குறித்த வீடியோ கடந்த வருடம் அவுஸ்ரேலியாவில் உள்ள புலம்பெயர்ந்த தமிழ் மக்களால் சிட்னியில் நினைவுக்கூர்ந்த மாவீரர் தினத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ என உறுதிசெய்யப்படுகின்றது.
மேலும் இவ்வருடம் இலங்கையில் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நடந்த மாவீரர் நாளின் காட்சிகள் link 1 | Link 2 | Link 3
இலங்கையில் இடம்பெற்ற நிகழ்வில் விடுதலைப்புலிகளின் கொடி மற்றும் பிரபாகரனின் புகைப்படங்கள் எதுவும் பாவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், இலங்கையில் நடந்த மாவீரர் நினைவேந்தல் என பகிரப்படும் வீடியோ கடந்த வருடம் சிட்னியில் நடந்த நினைவேந்தலின் வீடியோ என்று கண்டறியப்பட்டது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team